தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


நாலு பேர் செம்பெடுத்தால்
நடுங்கும் கைலாசம்
மூணுபேர் செம்பெடுத்தால்
முழங்கும் கைலாசம்
ஆழமுள்ள கங்கையிலே
அலரத் தலைமுழுகி
நீள முள்ள கங்கையிலே
நின்னு தலைமுழுகி
ஏழாறு தான் கடந்து
எடுத்து வந்தார் நல்ல தண்ணீர்
அஞ்சாறு தான் கடந்து
அள்ளி வந்தார் நல்ல தண்ணீர்
மூணாறுதான் கடந்து
மோந்து வந்தார் நல்ல தண்ணீர்
செங்கை மடைதிறந்து
செம்பு கொண்டு நீர் மோர்ந்து
மாராடி நூல்போட்டு
மாவிலையும் கையிலெடுத்து
கெண்டி மேல் தேங்காய் வச்சி
செவ்வரளி மாலைபோட்டு
ஒரு மகனும் செம்பெடுத்தால்
ஓடி வரும் நீர்மாலை
குளுப்பாட்டி கோடிகட்டி
கொண்டு வந்தார் பந்தலுக்கு
மாலை கையிலெடுத்தார் ;
மரக்கால் தலையில் வைத்தார்
காசி காசியிண்ணு சொல்லி
கட்டி மகன் நீர் தெளிச்சார்
சுத்தி வந்து நீர் தெளிச்சு
சூரியரைக் கையெடுத்தார்
பக்கம் வந்து நீர் தெளிச்சு
பகவானைக் கையெடுத்தார்
சீதேவி தான் வாங்கி
ஸ்ரீராமர் வீடுசேர்ந்தார்
வெள்ளி படி கடந்து
வெளியேறச் சம்மதமோ
பொன்னும் படி கடந்து
போகவும் சம்மதமோ



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 06:09:35(இந்திய நேரம்)