தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அழகு முகம் தென்படலை

மகள் வருவதற்கு முன் தகப்பனின் சடலத்தைச் சுற்றத்தார் சுட்டெரித்து விட்டார்கள். இறந்துபோன தந்தையின் சடலத்தையாவது காணலாம் என்று ஓடிவந்த மகள் வருமுன்பாகவே தந்தையின் சடலத்தைச் சுட்டெரித்த செய்தி கேட்டு “நான் எங்கு தேடியும் உங்கள் முகம் தென்படவில்லை, இனி எப்படி உங்களைக் காண்பேன்?” என்று அரற்றி அழுகிறாள்.

சுடலை புரமெல்லாம்
சோதிச்சு நாங்க வந்தோம்
சுடலை தென்படுது-உங்க
சோர்ந்த முகம் தென்படலை
ஆறு புர மெல்லாம்
ஆராஞ்சு நாங்க வந்தோம்
ஆறு தென்படுது-உங்க
அழகு முகம் தென் படல

வட்டார வழக்கு: சுடலை-சுடுகாடு ; ஆராஞ்சி-ஆராய்ந்து.

சேகரித்தவர் :
கவிஞர் சடையப்பன்

இடம்:
சக்கிலிப்பட்டி,
தருமபுரி மாவட்டம்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 06:14:34(இந்திய நேரம்)