தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


வளவன் பரிசு

நாடக மாந்தர்

இராசராசர் : சோழநாட்டுப் பேரரசர் மூன்றாங் குலோத்துங்கர் இறந்தபின்   
   கி.பி. 1218இல் அரியணையில் அமர்ந்தவர். இவரை வரலாறு மூன்றாம்
   இராசகேசரி இராசராசர் என வழங்கும்.

இராசேந்திரன் : சோழநாட்டு இளவரசன்; இராசராசரின் புதல்வன். இவனே
   மூன்றாம் இராசேந்திரன் என வழங்கப்படுபவன்.

பிருமாதிராசன் : சோழ நாட்டு அமைச்சர்.

சுந்தரபாண்டியர் : முதல் சடையவர்மன் குலசேகரபாண்டியனின் தம்பி.
   குலசேகரன் இறந்த பின் கி.பி. 1216இல் முடிசூட்டிக் கொண்டவன். இவனை
   வரலாறு முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் என்று வழங்கும்.

குருகுலத்தரையன் : சுந்தர பாண்டியனின் அமைச்சன்.

மழவர் மாணிக்கம் : பாண்டியனின் தேர்ப்படைத் தலைவன். இவன்
   முழுப்பெயர் திருக்கானப் பேருமையான் மழவச் சக்கரவர்த்தி என்பது.

காங்கேன் : பாண்டியனின் நாற்படைக்கும் தலைவன் கண்டம் உதயஞ்
   செய்தான் காங்கேயன் என்பது இவன் முழுப்பெயர்.

காரணை விழுப்பரையர் : சுந்தர பாண்டியனின் அவைகளைப் புலவர்.

தாமரைக் கண்ணன் : உறையூர்வாழ் புலவன்; கடியலூர்          
    உருத்திரங்கண்ணனாரின் வழி வந்தவன்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 13:48:28(இந்திய நேரம்)