Primary tabs

-- எனவே, மற்றைத் திணைக்கண்ணும் உள, சிறு வரவின எனக்
கொள்க.
அவை வருமாறு : ‘குறையறப் பூத்த கொடி
முல்லாய்’ என்புழி,
முல்லை - முல்லாய் எனவும்,
‘செங்கால் நாராய்’ என்புழி, செங்கால் நாரை செங்கால் நாராய்
எனவும் வரும். பிறவும் அன்ன. (3)
118. அவற்றுள்
இ ஈ யாகும் ஐ ஆ யாகும்.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இகர ஐகாரங்கள்
விளியேற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.
நம்பி - நம்பீ என, இ - ஈயாய் விளியேற்றது.
நங்கை - நங்காய் என, ஐ - ஆயாய் விளியேற்றது.
இங்ஙனமாதல்,‘ஈறுதிரிதல்’. 4
119, ஓவும் உவ்வு மேயொடு சிவணும்.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், ஒகார ஈறும் உகர ஈறும்
விளியேற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.
கோ - கோவே என, ஒகார ஈறு ஏகாரமொடு சிவணிற்று.
வேந்து - வேந்தே என, உகரம் ஏயொடு சிவணிற்று.
இம் முடிபு, ‘பிறிது வந்தடைதல்’ ஆம். 5
120. உகரந் தானே குற்றிய லுகரம்.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், ஐயமறுத்தல் நுதலிற்று;
மேலதற்கோர் புறனடையெனினும் அமையும்.
உரை :
கூறப்பட்ட நான்கினுள், உகரம்
குற்றியலுகரம் என்பது
அறியாது நின்றவழி, முற்றுகரம் அன்று குற்றுகரம் என்பது கருத்து. 6
121. ஏனை யுயிரே யுயர்திணை மருங்கிற்
றாம்விளி கொள்ளா வென்மனார் புலவர்.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், எய்தாதது எய்துவித்தல்
நுதலிற்று; ஐயமறுத்தது எனினும் அமையும்.
உரை :
சொல்லப்பட்ட நான்கு உயிரெழுத்துமல்லால்
மற்றையன
உயர்திணைக்கண் விளியேலா என்றவாறு.
மற்று, கொள்வன இவை யெனவே, ஒழிந்தன கொள்ளா என்பது
யானே உணரேனோ, இது சொல்ல வேண்டியது என்னையெனின்,
ஏனை உயிர் உயர்திணைக் கண்விளிகொள்ளா என, இன்னும்
மேற்சொல்லப்பட்டன மேல் ஓதியவா