தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3190


‘ஆகு’     மென்றதனான்  வேதவணிகரும்  பொருளின்றி  இல்லறம்
நிகழாத   காலத்தாயிற்   செந்தீ  வழிபடுதற்கு  உரியோரை நாட்டிக்
கலத்திற் பிரிதற்கு உரியரென்று கொள்க.

மேலனவற்றிற்குப் புறனடை
 

12.
திணைமயக் குறுதலுங் கடிநிலை இலவே
நிலனொருங்கு மயங்குதல் இன்றென மொழிப
புலனன் குணர்ந்த புலமை யோரே.
 

இஃது  உரிப்பொருள்   மயங்கு   மென்றலின் மேலனவற்றிற்குப்
புறனடை.

(இ-ள்) திணை மயக்குறுதலும் கடிநிலை இலவே ‘மாயோன் மேய’
(5)  என்பதனுள்  ஒரு  நிலத்து ஓரொழுக்கம் நிகழுமென நினைத்துக்
கூறிய  ஒழுக்கம்  அவ்வந்நிலத்திற்கே உரித்தா  யொழுகாது தம்முள்
மயங்கிவருதலும்  நீக்கப்படா;  நிலன் ஒருங்கு மயங்குதல் இன்று என
மொழிப   -   அங்ஙனம்   ஒருநிலத்து  இரண்டொழுக்கந்  தம்முள்
மயங்குதலன்றி  இரண்டு  நிலம் ஒரோவொழுக்கத்தின்கண் மயங்குதல்
இல்லை  என்று  கூறுவர்;  புலன்  நன்கு  உணர்ந்த புலமையோர் -
அங்ஙனம்  நிலனும்  ஒழுக்கமும்  இயைபுபடுத்துச் செய்யும் புலனெறி
வழக்கத்தினை. மெய் பெற உணர்ந்த அறிவினையுடையோர் எ-று.

என்றது,   ஒரு  நிலத்தின்கண்  இரண்டு  உரிப்பொருள் மயங்கி
வருமென்பதூஉம்,  நிலன்  இரண்டு மயங்காவெனவே காலம் இரண்டு
தம்முள் மயங்குமென்பதுஉங்  கூறினாராயிற்று. ஆகவே, ஒரு நிலமே
மயங்குமாறாயிற்று.   உரிப்பொருண்  மயக்குறுதல்  என்னாது திணை
மயக்குறுதலும்  என்றார், ஓர்  உரிப் பொருளோடு ஓர் உரிப்பொருள்
மயங்குதலும்,   ஓர்   உரிப்பொருள்   நிற்றற்கு  உரிய  இடத்து ஓர்
உரிப்பொருள்  வந்து  மயங்குதலும்,  இவ்வாறே காலம் மயங்குதலும்,
கருப்பொருள்  மயக்குதலும்  பெறுமென்றற்கு,  திணையென்றது  அம்
மூன்றனையுங் கொண்டே நிற்றலின்.

உ-ம்:

‘‘அறியே ம
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 01:44:34(இந்திய நேரம்)