தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3243


டே
அலங்கல் அவிர்சடையெம் அண்ணல் விளையாட்டென்
                              றகன்றேம் பாவம்’’

இது     தெய்வமென  யாங்கள்   போந்தோம்,    நுமக்கெய்தச்
சேறலாமென்று விடுத்தது

‘‘நெருப்பவிர் கனலி யுருப்புச்சினந் தணியக்
கருங்கால் யாத்த வரிநிழ லசைஇச்
சிறுவரை யிறப்பிற் காண்டி செறிதளிர்ப்
பொன்னேர் மேனி மடந்தையொடு
வென்வே லண்ணல் முன்னிய சுரனே.’’   
(ஐங்குறு.388)

இவ் வைங்குறுநூறும் அது.

‘‘அஞ்சுடர்நீள் வாண்முகத் தாயிழையு மாறிலா
வெஞ்சுடர்நீள் வேலானும் போதரக்கண் - டஞ்சி
யொருசுடரு மின்றி யுலகுபா ழாக
விருசுடரும் போந்தனவென்றார்’’     
(திணைமாலை71)

இஃது     இடைச்சுரத்துக்    கண்டோர்  கூறிய  வார்த்தையைக்
கேட்டோராகச் சிலர் கூறியது.

‘‘அழுந்துபட வீழ்ந்த பெருந்தண் குன்றத்
தொலிவ லீந்தி னுலவை யங்காட்
டாறுசென் மாக்கள் சென்னி யெறிந்த
செம்மறுத் தலைய நெய்த்தோர் வாய
வல்லியம் பெருந்தலைக் குருளை மாலை
மானோக்கு மிண்டிவ ரீங்கைய சுரனே
வையெயிற் றையண் மடந்தை முன்னுற்
றெல்லிடை நீங்கு மிளையோ னுள்ளங்
காலொடு பட்ட மாரி
மால்வரை மிளிர்க்கு முருமினுங் கொடிதே.’’     
(நற்.2)

‘‘காண்பா னவாவினாற் காதலன் காதலிபின் னடவாநிற்ப
நாண்பால ளாதலா னன்னுதல் கேள்வன்பின் னடவாநிற்ப
வாண்பான்மை குன்றா வயில்வே லவன்றனக்கு மஞ்சொ
                                       லாட்கும்
பாண்பால வண்டினமும் பாட வருஞ்சுரமும் பதிபோன்
                                      றன்றே.’’

‘‘மடக்கண் டகரக் கூந்தற் பணைத்தோள்
வார்ந்தவா லெயிற்றுச் சேர்த்துசெறி குறங்கிற்
பிணைய லந்தழை தைஇத் துணையிலள்
விழவுக்களம் பொலிய வந்துநின் றோளே
யெழுமினோ வெழுமினங் கொழுநர்க் காக்கம்
ஆரியர் துவன்றிய பேரிசை

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 01:54:35(இந்திய நேரம்)