தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5243


 

மன்பு.”

மன்றல் எட்டாவன: பிரமம், பிராசாபத்தியம்,  ஆரிடம்,   தெய்வம்,
காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம் என்பன.

அவற்றுட்   பிரமமாவது:  ஒத்த கோத்திரத்தானாய் நாற்பத் தெட்டி
யாண்டு பிரமசரியங் காத்தவனுக்குப் பன்னீராட்டைப்   பருவத்தாளாய்ப்
பூப்பு   எய்தியவளைப்   பெயர்த்து   இரண்டாம்   பூப்பு  எய்தாமை
அணிகலன் அணிந்து தானமாகக் கொடுப்பது.

“கயலே ரமருண்கண் கன்னிபூப் பெய்தி
அயல்பே ரணிகலன்கள் சேர்த்தி - இயலின்
நிரலொத்த அந்தணற்கு நீரிற் கொடுத்தல்
பிரமமண மென்னும் பெயர்த்து.”

பிராசாபத்தியமாவது: மகட்கோடற்கு உரிய கோத்திரத்தார் கொடுத்த
பரிசத்து இரட்டி தம்மகட்கு ஈந்து கொடுப்பது.

“அரிமத ருண்கண் ஆயிழை யெய்துதற்கு
உரியவன் கொடுத்த வொண்பொரு ளிரட்டி
திருவின் தந்தை திண்ணிதிற் சேர்த்தி
அரியதன் கிளையோ டமைவரக் கொடுத்தல்
பிரித லில்லாப் பிராசா பத்தியம்.”

ஆரிடமாவது:தக்கான் ஒருவற்கு ஆவும் ஆனேறும் பொற் கோட்டுப்
பொற்குளம்பினவாகச்  செய்து  அவற்றிடை  நிறீஇப்  பொன் அணிந்து
நீரும் இவைபோற் பொலிந்து வாழ்வீரென நீரிற்கொடுப்பது.

“தனக்கொத்த வொண்பொருள் தன்மகளைச் சேர்த்தி
மனைக்கொத்த மாண்புடையாற் பேணி - இனக்கொத்த
ஈரிடத் தாவை நிறீஇயிடை ஈவதே
ஆரிடத்தார் கண்டமண மாம்.”

தெய்வமாவது:  பெருவேள்வி  வேட்பிக்கின்றார்  பலருள் ஒருவற்கு
அவ்வேள்வித்தீ முன்னர்த் தக்கிணையாகக் கொடுப்பது.

“நீளி நெடுநகர் நெய்பெய்து பாரித்த
வேள்வி விளங்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:18:14(இந்திய நேரம்)