தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-moolam

  • ஓலை எண் : 

  • சொல்லதிகாரம் - மூலம்
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   177



    உள்ளுறுத்து இறுவதை உள்ளுறை உவமம்

    52 ஏனை உவமம் தான் உணர் வகைத்தே

    53 காமம் சாலா இளமையோள்வயின்,
    ஏமம் சாலா இடும்பை எய்தி,
    நன்மையும் தீமையும் என்று இரு திறத்தான்,
    தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச்
    சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்-
    புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே

    54 ஏறிய மடல் திறம், இளமை தீர் திறம்,
    தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம்,
    மிக்க காமத்து மிடலொடு தொகைஇ,
    செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே

    55 'முன்னைய நான்கும் முன்னதற்கு' என்ப.

    56 'நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
    பாடல் சான்ற புலனெறி வழக்கம்
    கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும்
    உரியது ஆகும்' என்மனார் புலவர்

    57 மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும்
    சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறாஅர்

    58 புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது
    அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:31:47(இந்திய நேரம்)