தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-moolam

  • ஓலை எண் : 

  • சொல்லதிகாரம் - மூலம்
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   186


    பொருநரும், விறலியும்,
    ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
    பெற்ற பெரு வளம் பெறாஅர்க்கு அறிவுறீஇ,
    சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்;
    சிறந்த நாளினில் செற்றம் நீக்கிப்
    பிறந்த நாள்வயின் பெருமங்கலமும்;
    சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலமும்;
    நடை மிகுத்து ஏத்திய குடை நிழல் மரபும்;
    மாணார்ச் சுட்டிய வாள்மங்கலமும்;
    மன் எயில் அழித்த மண்ணுமங்கலமும்;
    பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும்;
    பெற்ற பின்னரும் பெரு வளன் ஏத்தி,
    நடைவயின் தோன்றிய இரு வகை விடையும்;
    அச்சமும் உவகையும் எச்சம் இன்றி,
    நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்;
    காலம் கண்ணிய ஓம்படை உளப்பட
    ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின்
    காலம் மூன்றொடு கண்ணிய வருமே
     

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:32:41(இந்திய நேரம்)