தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-moolam

  • ஓலை எண் : 

  • சொல்லதிகாரம் - மூலம்
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   193


    கினும்;
    நல் நயம் பெற்றுழி நயம் புரி இடத்தினும்;
    எண்ணரும் பல் நகை கண்ணிய வகையினும்;
    புணர்ச்சி வேண்டினும்; வேண்டாப் பிரிவினும்;
    வேளாண் பெரு நெறி வேண்டிய இடத்தினும்;
    புணர்ந்துழி உணர்ந்த அறி மடச் சிறப்பினும்;
    ஓம்படைக் கிளவிப் பாங்கின்கண்ணும்;
    செங் கடுமொழியால் சிதைவுடைத்துஆயினும்;
    என்பு நெகப் பிரிந்தோள் வழிச் சென்று கடைஇ,
    அன்பு தலையடுத்த வன்புறைக்கண்ணும்;
    ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும்;
    காப்பின் கடுமை கையற வரினும்;
    களனும் பொழுதும் வரை நிலை விலக்கிக்
    காதல் மிகுதி உளப்படப் பிறவும்;
    நாடும் ஊரும் இல்லும் குடியும்
    பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி,
    அவன்வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ,
    அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்,
    ஐயச் செய்கை தாய்க்கு எதிர் மறுத்துப்
    பொய் என மாற்றி மெய்வழிக் கொடுப்பினும்;
    அவள் விலக்குறினும்; களம் பெறக் காட்டினும்;
    பிறன் வரைவு ஆயினும்; அவன் வரைவு மறுப்பினும்;
    முன்னிலை

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:33:20(இந்திய நேரம்)