தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-moolam

  • ஓலை எண் : 

  • சொல்லதிகாரம் - மூலம்
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   203


    ஆங்கு ஆக்கிக் கொடுத்தற்கண்ணும்;
    வணங்கு இயல் மொழியான் வணங்கற்கண்ணும்;
    புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சியும்;
    சிறந்த புதல்வனைத் தேராது புலம்பினும்,
    "மாண் நலம் தா" என வகுத்தற்கண்ணும்;
    பேணா ஒழுக்கம் நாணிய பொருளினும்,
    சூள்நயத் திறத்தால் சோர்வு கண்டு அழியினும்,
    "பெரியோர் ஒழுக்கம் பெரிது!" எனக் கிளந்து
    பெறு தகை இல்லாப் பிழைப்பினும், அவ் வயின்,
    உறு தகை இல்லாப் புலவியுள் மூழ்கிய
    கிழவோள்பால் நின்று கெடுத்தற்கண்ணும்;
    உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின்
    உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று
    தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்ணும்;
    அருமைக் காலத்துப் பெருமை காட்டிய
    எண்மைக் காலத்து இரக்கத்தானும்;
    பாணர், கூத்தர், விறலியர், என்று இவர்
    பேணிச் சொல்லிய குறைவினை எதிரும்;
    நீத்த கிழவனை நிகழுமாறு படீஇயர்,
    காத்த தன்மையின் கண் இன்று பெயர்ப்பினும்;
    பிரியும் காலை எதிர் நின்று சாற்றிய
    மரபுடை எதிரும் உளப்படப் பிறவும்,
    வகை பட வந்த கிளவி எல்லாம்
    தோழிக்கு உரிய' என்மனார் புலவர்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:34:18(இந்திய நேரம்)