தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

I_raiyanaar Agapporul

  • ஓலை எண் : 

  • பெரும்பாணாற்றுப்படை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   24

    வறை கால்யாத்தது, வயின்தொறும் பெறுகுவிர்.
    யானை தாக்கினும், அரவு மேல் செலினும்,
    நீல் நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும்,
    சூல் மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை,
    வலிக் கூட்டு உணவின் வாள்குடிப் பிறந்த,
    புலிப் போத்து அன்ன, புல் அணற் காளை,
    செல் நாய் அன்ன கரு வில் சுற்றமொடு,
    கேளா மன்னர் கடி புலம் புக்கு,
    நாள் ஆ தந்து, நறவு நொடை தொலைச்சி,
    இல் அடு கள் இன் தோப்பி பருகி,
    மல்லல் மன்றத்து மத விடை கெண்டி,
    மடி வாய்த் தண்ணுமை நடுவண் சிலைப்பச்,
    சிலை நவில் எறுழ்த் தோள் ஓச்சி, வளன் வளையூஉப்
    பகல் மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை
    முரண் தலை கழிந்த பின்றை மறிய
    குளகு அரை யாத்த குறுங் கால், குரம்பைச்
    செற்றை வாயில், செறி கழிக் கதவின்,
    கற்றை வேய்ந்த கழித் தலைச் சாம்பின்,
    அதளோன் துஞ்சும் காப்பின் உதள,
    நெடுந் தாம்பு தொடுத்த குறுந் தறி முன்றில்,
    கொடு முகத் துருவையொடு வெள்ளை சேக்கும்
    இடு முள் வேலி எருப் படு வரைப்பின்,
    நள் இருள் விடியல் புள் எழப் போகிப்
    புலிக் குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி,
    ஆம்பி வான் முகை அன்ன கூம்பு முகிழ்
    உறை அமை தீம் தயிர் கலக்கி, நுரை தெரிந்து,
    புகர் வாய்க் குழிசி பூஞ் சுமட்டு இரீஇ
    நாள் மோர் மாறும் நல் மா மேனிச்
    சிறு குழை துயல்வரும் காதின், பணைத் தோள்,
    குறு நெறிக் கொண்ட கூந்தல், ஆய் மகள்
    அளை விலை உணவின்
     

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 14:08:02(இந்திய நேரம்)