Primary tabs


மலர்மிசை ஏகினான்
மாணடி
சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.
மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச்
சேர்ந்தார்; எல்லா உலகிற்கும் மேலாய வீட்டு உலகின்கண் அழிவின்றி
வாழ்வார். அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர்
நினைந்த வடிவோடு விரைந்து சேறலின் ''ஏகினான்'' என இறந்த
காலத்தால் கூறினார்; என்னை? "வாராக் காலத்தும் நிகழும் காலத்தும்
ஓராங்கு வரூஉம் வினைச் சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு
கிளத்தல் விரைந்த பொருள் என்மனார் புலவர்" தொல், சொல்,
வினை, 44
என்பது ஓத்தாகலின்.
இதனைப் ''பூமேல்
நடந்தான்''
என்பதோர் பெயர்பற்றிப் பிறிதோர் கடவுட்கு ஏற்றுவாரும்
உளர். சேர்தல் -
இடைவிடாது நினைத்தல் வேண்டுதல் வேண்டாமை
இலான்அடி
சேர்ந்தார்க்கு யாண்டும்
இடும்பை இல. ஒரு
பொருளையும் விழைதலும்
வெறுத்தலும் இல்லாதவன் அடியைச்
சேர்ந்தார்க்கு;
எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா.
பிறவித்
துன்பங்களாவன: தன்னைப் பற்றி
வருவனவும், பிற உயிர்களைப்
பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான்
வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும் வேண்டுதலும்
வேண்டாமையும் இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத்
துன்பங்களும் இலவாயின. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. மயக்கத்தைப் பற்றி வரும்
நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா;
இறைவனது மெய்ம்மை சேர்ந்த புக

