Primary tabs


எல்லாப் பெருமையினும்
மிக்கது என்பது கூறப்பட்டது.
உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும்
வைப்பிற்கோர் வித்து. திண்மை என்னும் தோட்டியால் பொறிகள்
ஆகிய யானை ஐந்தினையும் தத்தம் புலன்கள்மேல் செல்லாமல்
காப்பான்; எல்லா நிலத்திலும் மிக்கது என்று சொல்லப்படும் வீட்டு
நிலத்திற்கு ஓர் வித்து ஆம். இஃது ஏகதேச உருவகம். திண்மை
ஈண்டு அறிவின் மேற்று. அந்நிலத்திற்சென்று முளைத்தலின்,
''வித்து''
என்றார். ஈண்டுப் பிறந்து இறந்து வரும் மகனல்லன் என்பதாம்.
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங்
கரி. புலன்களில் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது
வலிக்கு; அகன்ற வானத்துள்ளார் இறைவன் ஆகிய இந்திரனே
அமையும் சான்று. ஐந்தும் என்னும் முற்று உம்மையும் ஆற்றற்கு
என்னும் நான்கன் உருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தான்
ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவனது ஆற்றல்
உணர்த்தினான் ஆகலின், ''இந்திரனே சாலும் கரி'' என்றார்.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்.
ஒத்த பிறப்பினராய மக்களுள் செய்தற்கு எளியவற்றைச் செய்யாது
அரியவற்றைச் செய்வார்
பெரியர்; அவ்வெளியவற்றைச் செய்து
அரியவற்றைச் செய்யமாட்டாதார் சிறியர். செயற்கு எளிய ஆவன,
மனம் வேண்டியவாறே அதனைப் பொறி வழிகளால் புலன்களில்
செலுத்தலும், வெஃகலும், வெகுள்தலும் முதலாயின. செயற்கு அரிய
ஆவன, இமயம்,நியமம் முதலாய எண்வகை யோக
உறுப்புகள். நீரிற்
பலகால் மூழ்கல்
முதலாய, ''நாலிரு
வழக்கின்
தாபதபக்கம்''
புறப்பொருள் வெண்பாமாலை,
வாகைத்திணை14
என்பாரும் உளர்;
அவை நியமத்துள்ளே அடங்கலின், நீத்தாரது
பெருமைக்கு ஏலாமை அறிக. சுவையொளி

