ஒளவையார் பாடிய நூல்களில் ஆத்திசூடியும் ஒன்று. ‘ஆத்திசூடி’ என்பது ஆத்தி மாலையைச் சூடியுள்ள சிவனைக் குறிக்கும். ஆத்திசூடி என்பது காப்புச் செய்யுளின் முதல்சொல் ஆகும். அந்தச் சொல்லே நூலுக்குப் பெயராக அமைந்துள்ளது.