6.4 புணர்நிலை அணி | |||||||||||||||||||||||||||||||
தண்டியலங்காரத்தில் சொல் பற்றிய அணிகள் சிலவும் இடம் பெறுகின்றன என்பதைக் கடந்த பாடங்களில் பார்த்தோம். தீவக அணி, பின்வருநிலை அணி ஆகிய அணிகளை நினைவுபடுத்திப் பாருங்கள். சொல் பற்றிய அணிகளில் புணர்நிலை அணியும் ஒன்று. | |||||||||||||||||||||||||||||||
6.4.1 புணர்நிலை அணியின் இலக்கணம் | |||||||||||||||||||||||||||||||
வினையாலும், பண்பாலும் இரண்டு பொருளுக்கு ஒரு சொல்லே முடிக்கும் சொல்லாகப் பொருந்துமாறு சொல்லுவது புணர்நிலை என்னும் அணி ஆகும். |
|||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||
. புணர்நிலை அணியின் வகைகள் புணர்நிலை அணி வினைப் புணர்நிலை, பண்புப் புணர்நிலை என இரண்டு வகைப்படும். | |||||||||||||||||||||||||||||||
6.4.2 வினைப் புணர்நிலை | |||||||||||||||||||||||||||||||
கூறப்படும் இரண்டு பொருளுக்கும் பொதுவான ஒரு வினை பற்றிய சொல்லை முடிக்கும் சொ ல்லாக அமைத்துக் கூறுவது வினைப் புணர்நிலை எனப்படும். |
|||||||||||||||||||||||||||||||
எடுத்துக்காட்டு:
|
|||||||||||||||||||||||||||||||
(கருகி - கறுத்து;முகில் - மேகம்; நசை - காதல்; ஆவி - உயிர்.) |
|||||||||||||||||||||||||||||||
இப்பாடலின் பொருள் ஆண்மை மிக்க தலைவரைச் சேர விரும்பிய பெருங்காதலாலே தம்முடைய மெல்லிய உயிர் போகாதபடி பாதுகாக்கும் தொழிலை மேற்கொண்டிருந்த தலைவியருடைய கண்கள், வேண்டிய உருவத்தைக் கொண்டு, கறுத்த நிறத்தை உடையதாய், வானம் எங்கும் பரந்து நீண்ட முகில்களுடனே நீரைப் பொழிந்தன. . அணிப்பொருத்தம் இப்பாடலில் கூறப்பட்ட பொருள்கள் இரண்டு. ஒன்று, கண்; மற்றொன்று, முகில். இவ்விரு பொருளுக்கும் பொதுவான 'நீர் பொழிந்த' என்னும் வினை பற்றிய ஒரு சொல்லையே முடிக்கும் சொல்லாக அமைத்திருத்தலின் இது, வினைப் புணர்நிலை ஆயிற்று. | |||||||||||||||||||||||||||||||
6.4.3 பண்புப் புணர்நிலை | |||||||||||||||||||||||||||||||
கூறப்படும் இரண்டு பொருளுக்கும் பொதுவான ஒரு குணம் (பண்பு) பற்றிய சொல்லை முடிக்கும் சொல்லாக அமைத்துக் கூறுவது பண்புப் புணர்நிலை எனப்படும். |
|||||||||||||||||||||||||||||||
எடுத்துக்காட்டு:
|
|||||||||||||||||||||||||||||||
(புள் -பறவைகள்; அவதி - காலம்;) |
|||||||||||||||||||||||||||||||
இப்பாடலின் பொருள் தாம் அன்பு வைத்த துணைவர் வரும் காலத்தை எதிர்பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும் மடவாருடைய உயிரானது, பூக்கள் நிறைந்த சோலையிலே பறவைகள் எல்லாம் தங்கள் கூடுகளுக்குச் சென்று ஒடுங்கிய புல்லிய மாலைப் பொழுதுடனே, நீங்காத துயரம் செய்து நீண்டு கொண்டிருந்தன. . அணிப்பொருத்தம் இப்பாடலில் கூறப்பட்ட பொருள்கள் இரண்டு. ஒன்று, தமியார் உயிர்; மற்றொன்று, மாலைப் பொழுது. இவ்விரு பொருளுக்கும் பொதுவான 'நீண்டன' என்னும் பண்பு பற்றிய ஒரு சொல்லையே முடிக்கும் சொல்லாக அமைத்திருத்தலின் இது, பண்புப் புணர்நிலை ஆயிற்று.
|