1.7 தொகுப்புரை

    மாணவ நண்பர்களே!

    இதுவரை அறிமுக நிலையில் சில செய்திகளை அறிந்துகொண்டீர்கள். என்னென்ன செய்திகள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்!

  1. இலக்கிய வகைமைகள் பற்றிய பொதுச் செய்திகளை அறிந்திருப்பீர்கள்.

  2. தமிழில் இலக்கிய வகைமை பற்றிய சிந்தனை  தொல்காப்பியர் காலம் முதலே வளர்ந்து வந்துள்ள  நிலையைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

  3. தொல்காப்பியர் சுட்டியுள்ள திணை, துறைகள் பற்றிய அடிக்கருத்துகள், காலப்போக்கில் தனித்தனி இலக்கிய வகைமைகளாக     வளர்ச்சி  பெற்றன என்பதைத் தெரிந்திருப்பீர்கள். 

  4. புலவர்களின் மனநிலையையொட்டிய வகையென்றும், நாடகப் போக்கானவையென்றும், நாடகக் கதைப்பாட்டு வகையென்றும், தன்னுணர்ச்சிப் பாடலென்றும் வளர்ந்த,  மாறுதல்     அடைந்த விளக்கங்களை உணர்ந்து  கொண்டிருப்பீர்கள்!

  5. சார்பு இலக்கியமும் நேர் இலக்கியமும் எவ்வகையில் தோன்றும் என்பதையும், நீதியை உணர்த்தும் நூல்களின் வகைப்பாட்டினையும், இலக்கியமும் வாழ்வும் எவ்வாறு  பின்னிப் பிணைந்தவை என்பதையும் தெரிந்து  கொண்டிருப்பீர்கள்!

     தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
‘தூது’ நூலின் உண்மைக் கருத்து யாது?
2.
புறப்பொருள் பற்றிய பாடல்கள் பெரும்பாலும் எப்பொருளைப் பற்றியனவாக இருந்தன?
3.
வெட்சி, கரந்தை, பாடாண்- ஆகிய புறத்திணைகள் குறித்துச் சுருக்கக் குறிப்பெழுதுக.
4.
‘கண்படைநிலை’ - ‘துயிலெடை நிலை’ - விளக்குக.

5.

பிள்ளைத்தமிழ்த் தோற்றத்திற்கு அடிப்படை யாது?

6.

அறவுரையாளரின்     கடமைக்கும் கலைஞரின் கடமைக்கும் உள்ள வேறுபாடு என்ன?

7.

நாடகப் பாட்டுகள் என்றால் என்ன?