தொடர்வண்டி
பாட அறிமுகம்
Introduction to Lesson
மனிதன் என்பவன் உயிரியக்கம் உள்ள ஒரு சமூக விலங்கு என்பர் அறிஞர். ஊர்விட்டு ஊரும் நாடுவிட்டு நாடும் இடம்பெயரும் பண்பு கொண்டவன். இவ் இடப்பெயர்தலுக்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. அதுபோல், அதற்குப் பல்வேறு ஊர்திகளை (வாகனங்களை) உருவாக்கினான். இவ்வாறு பயணத்திற்கென அறிவியல் கண்டுபிடிப்பினால் உருவான ஊர்திகளில் தொடர்வண்டி மிகப் பெரிய கருவியாகும். இதன் வளர்ச்சி, வகைகள், பயன்கள் குறித்து இப்பாடத்தில் படிக்க இருக்கின்றீர்கள்.