14. பெயரும் வினையும்

பெயரும் வினையும்

பொது அறிமுகம்
General Introduction


அன்புள்ள மாணவர்களே! வணக்கம்

எழுத்துகளின் சேர்க்கை சொல்லாகும். அது இலக்கண முறையில் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்கு ஆகும்.

ஏதேனும் ஒன்றனுக்குப் பெயராய் அமையும் சொல்லைப் பெயர்ச்சொல் என்று அழைப்பர். அது காரணமின்றி ஓர் அடையாளக் குறியீடாகவோ அல்லது ஒரு காரணத்தின் அடிப்படையிலோ அமையும். அவ்வாறே ஒரு பெயரின் அல்லது பொருளின் செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்பெறும்.

பெயர்,வினை என்னும் இவ்விரு சொற்கள் தொடர்பான சில அடிப்படை இலக்கணக் கூறுகளைச் சான்றிதழ்க் கல்வி முதல் நிலைப் பாடப்பகுதிகளில் கற்றுணர்ந்தீர்கள். அவற்றின் வளர் நிலையாகப் பெயர்ச்சொல், வினைச்சொல் பற்றிய சில இலக்கணக் கூறுகள் இவ்விரண்டாம் பாடப்பகுதியில் இடம் பெறுகின்றன.