முகப்பு |
குறிஞ்சி |
1. குறிஞ்சி |
நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்; |
||
என்றும் என் தோள் பிரிபு அறியலரே' |
||
தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச் |
||
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல, |
||
5 |
புரைய மன்ற, புரையோர் கேண்மை; |
|
நீர் இன்று அமையா உலகம் போலத் |
||
தம் இன்று அமையா நம் நயந்தருளி, |
||
நறு நுதல் பசத்தல் அஞ்சிச் |
||
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே! | உரை | |
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.-கபிலர்
|
5. குறிஞ்சி |
நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, |
||
அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப, |
||
குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் |
||
நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப, |
||
5 |
பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி |
|
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும், |
||
அரிதே, காதலர்ப் பிரிதல்-இன்று செல் |
||
இளையர்த் தரூஉம் வாடையொடு |
||
மயங்கு இதழ் மழைக் கண் பயந்த, தூதே. | உரை | |
தலைவன் செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைவிக்குத் தோழி சொல்லியது.-பெருங்குன்றூர்கிழார்
|
6. குறிஞ்சி |
நீர் வளர் ஆம்பற் தூம்புடைத்திரள் கால் |
||
நார் உரித்தன்ன மதன் இல் மாமை, |
||
குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண், |
||
திதலை அல்குல், பெருந் தோள், குறுமகட்கு |
||
5 |
எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே, |
|
'இவர் யார்?' என்குவள் அல்லள்; முனாஅது, |
||
அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி |
||
எறி மட மாற்கு வல்சி ஆகும் |
||
வல் வில் ஓரி கானம் நாறி, |
||
10 |
இரும் பல் ஒலிவரும் கூந்தல் |
|
பெரும் பேதுறுவள், யாம் வந்தனம் எனவே. | உரை | |
இரவுக்குறிப்பாற்பட்டு ஆற்றானாய தலைவன், தோழி கேட்ப, தன்நெஞ்சிற்குச் சொல்லியது.-பரணர்
|
8. குறிஞ்சி |
அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண், |
||
பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல், |
||
திரு மணி புரையும் மேனி மடவோள் |
||
யார் மகள்கொல்? இவள் தந்தை வாழியர்! |
||
5 |
துயரம் உறீஇயினள் எம்மே: அகல்வயல் 5 |
|
அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும் |
||
தண் சேறு தாஅய், மதனுடை நோன் தாள் |
||
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும் |
||
திண் தேர்ப் பொறையன் தொண்டி- |
||
10 |
தன் திறம் பெறுக, இவள் ஈன்ற தாயே! | உரை |
இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் தலைமகளை ஆயத்தொடும் கண்ட தலைமகன்சொல்லியது.
|
13. குறிஞ்சி |
எழாஅஆகலின், எழில் நலம் தொலைய |
||
அழாஅதீமோ, நொதுமலர் தலையே!- |
||
ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த |
||
பகழி அன்ன சேயரி மழைக் கண், |
||
5 |
நல்ல பெருந் தோளோயே! கொல்லன் |
|
எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய் |
||
வேங்கை வீ உகும் ஓங்கு மலைக் கட்சி |
||
மயில் அறிபு அறியாமன்னோ; |
||
பயில் குரல் கவரும் பைம் புறக் கிளியே. | உரை | |
இயற்கைப்புணர்ச்சியின் பிற்றை ஞான்று, தலைவியின் வேறுபாடு கண்ட தோழி, தலைவி மறைத்தற்குச் சொல்லியது.- கபிலர்
|
17. குறிஞ்சி |
நாள் மழை தலைஇய நல் நெடுங்குன்றத்து, |
||
மால் கடல் திரையின் இழிதரும் அருவி |
||
அகல் இருங் கானத்து அல்கு அணி நோக்கி, |
||
தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்பு |
||
5 |
ஏந்து எழில் மழைக் கண் கலுழ்தலின், அன்னை, |
|
'எவன் செய்தனையோ? நின் இலங்கு எயிறு உண்கு' என, |
||
மெல்லிய இனிய கூறலின், வல் விரைந்து, |
||
உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து, |
||
உரைத்தல் உய்ந்தனனே-தோழி!-சாரல், |
||
10 |
காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி |
|
தீம் தொடை நரம்பின் இமிரும் |
||
வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே. | உரை | |
முன்னிலைப்புறமொழியாகத் தலைமகள் தோழிக்குச்சொல்லியது.-நொச்சிநியமங்கிழார்
|
22. குறிஞ்சி |
கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை |
||
முந்து விளை பெருங் குரல் கொண்ட மந்தி |
||
கல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி, |
||
அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு, தன் |
||
5 |
திரை அணற் கொடுங் கவுள் நிறைய முக்கி, |
|
வான் பெயல் நனைந்த புறத்த, நோன்பியர் |
||
கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன் |
||
வந்தனன்; வாழி-தோழி!-உலகம் |
||
கயம் கண் அற்ற பைது அறு காலை, |
||
10 |
பீளொடு திரங்கிய நெல்லிற்கு |
|
நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கே. | உரை | |
வரைவு மலிந்த தோழி, தலைமகட்குச் சொல்லியது.
|
23. குறிஞ்சி |
தொடி பழி மறைத்தலின், தோள்உய்ந்தனவே; |
||
வடிக் கொள் கூழை, ஆயமோடு ஆடலின், |
||
இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே; கடிக் கொள |
||
அன்னை காக்கும் தொல் நலம் சிதைய, |
||
5 |
காண்தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டு நீர் |
|
முத்துப் படு பரப்பின் கொற்கை முன்துறைச் |
||
சிறு பாசடைய செப்பு ஊர் நெய்தல் |
||
தெண் நீர் மலரின் தொலைந்த |
||
கண்ணே காமம் கரப்பு அரியவ்வே! | உரை | |
தலைவி துயர் ஆற்றாமை உணர்ந்த தோழி வரைவு கடாயது.-கணக்காயனார்
|
25. குறிஞ்சி |
அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன |
||
செவ் வரி இதழ சேண் நாறு பிடவின் |
||
நறுந் தாது ஆடிய தும்பி, பசுங் கேழ்ப் |
||
பொன் உரை கல்லின், நல் நிறம் பெறூஉம் |
||
5 |
வள மலை நாடன் நெருநல் நம்மொடு |
|
கிளை மலி சிறு தினைக் கிளி கடிந்து அசைஇ, |
||
சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன்; பெயர்ந்தது |
||
அல்லல் அன்று அது-காதல் அம் தோழி!- |
||
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா |
||
10 |
வண்டு ஓரன்ன அவன் தண்டாக் காட்சி |
|
கண்டும், கழல் தொடி வலித்த என் |
||
பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே! | உரை | |
தலைமகளைத் தோழி குறை நயப்புக் கூறியது.- பேரி சாத்தனார்
|
26. பாலை |
நோகோ யானே; நெகிழ்ந்தன வளையே- |
||
செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை |
||
விண்டுப் புரையும் புணர் நிலை நெடுங் கூட்டுப் |
||
பிண்ட நெல்லின் தாய் மனை ஒழிய, |
||
5 |
சுடர் முழுது எறிப்பத் திரங்கிச் செழுங் காய் |
|
முட முதிர் பலவின் அத்தம், நும்மொடு |
||
கெடு துணை ஆகிய தவறோ?-வை எயிற்று, |
||
பொன் பொதிந்தன்ன சுணங்கின், |
||
இருஞ் சூழ் ஓதி, பெருந் தோளாட்கே. | உரை | |
தலைவி பிரிவு உணர்ந்து வேறுபட்டமை சொல்லி, தோழி செலவு அழுங்குவித்தது.-சாத்தந்தையார்
|
32. குறிஞ்சி |
'மாயோன் அன்ன மால் வரைக்கவாஅன், |
||
வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி |
||
அம் மலைகிழவோன் நம் நயந்து என்றும் |
||
வருந்தினன்' என்பது ஓர் வாய்ச் சொல் தேறாய்; |
||
5 |
நீயும் கண்டு, நுமரொடும் எண்ணி, |
|
அறிவு அறிந்து அளவல் வேண்டும்; மறுதரற்கு |
||
அரிய-வாழி, தோழி!-பெரியோர் |
||
நாடி நட்பின் அல்லது, |
||
நட்டு நாடார், தம் ஒட்டியோர் திறத்தே. | உரை | |
தலைவிக்குக் குறை நயப்புக் கூறியது.- கபிலர்
|
34. குறிஞ்சி |
கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த |
||
பறியாக் குவளை மலரொடு காந்தள் |
||
குருதி ஒண் பூ உரு கெழக் கட்டி, |
||
பெரு வரை அடுக்கம் பொற்பச் சூர்மகள் |
||
5 |
அருவி இன் இயத்து ஆடும் நாடன் |
|
மார்பு தர வந்த படர் மலி அரு நோய் |
||
நின் அணங்கு அன்மை அறிந்தும், அண்ணாந்து, |
||
கார் நறுங் கடம்பின் கண்ணி சூடி, |
||
வேலன் வேண்ட, வெறி மனை வந்தோய்! |
||
10 |
கடவுள் ஆயினும் ஆக, |
|
மடவை மன்ற, வாழிய முருகே! | உரை | |
தோழி தெய்வத்துக்கு உரைப்பாளாய் வெறி விலக்கியது.-பிரமசாரி
|
36. குறிஞ்சி |
குறுங் கை இரும் புலிக் கோள் வல்ஏற்றை, |
||
பூ நுதல் இரும் பிடி புலம்ப, தாக்கி, |
||
தாழ் நீர் நனந் தலைப் பெரு களிறு அடூஉம் |
||
கல்லக வெற்பன் சொல்லின் தேறி, |
||
5 |
யாம் எம் நலன் இழந்தனமே; யாமத்து, |
|
அலர் வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றி, |
||
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து, |
||
ஆனாக் கௌவைத்துஆக, |
||
தான் என் இழந்தது, இவ் அழுங்கல் ஊரே? | உரை | |
இரவுக்குறிச்சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.- சீத்தலைச்சாத்தனார்
|
39. குறிஞ்சி |
சொல்லின் சொல் எதிர்கொள்ளாய், யாழ நின் |
||
திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமென; |
||
காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ? |
||
கொடுங் கேழ் இரும் புறம் நடுங்கக் குத்திப் |
||
5 |
புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின் |
|
தலை மருப்பு ஏய்ப்ப, கடை மணி சிவந்த நின் |
||
கண்ணே கதவ? அல்ல; நண்ணார் |
||
அரண் தலை மதிலராகவும், முரசு கொண்டு, |
||
ஓம்பு அரண் கடந்த அடு போர்ச் செழியன் |
||
10 |
பெரும் பெயர்க் கூடல் அன்ன நின் |
|
கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே. | உரை | |
இரண்டாம் கூட்டத்து எதிர்ச்சியில் தலைவன் சொல்லியது.-மருதன் இளநாகனார்
|
44. குறிஞ்சி |
பொரு இல் ஆயமோடு அருவி ஆடி, |
||
நீர் அலைச் சிவந்த பேர் அமர் மழைக் கண் |
||
குறியா நோக்கமொடு முறுவல் நல்கி, |
||
மனைவயின் பெயர்ந்த காலை, நினைஇய |
||
5 |
நினக்கோ அறியுநள்-நெஞ்சே! புனத்த |
|
நீடு இலை விளை தினைக் கொடுங் கால் நிமிரக் |
||
கொழுங் குரல் கோடல் கண்ணி, செழும் பல, |
||
பல் கிளைக் குறவர் அல்கு அயர் முன்றில், |
||
குடக் காய் ஆசினிப் படப்பை நீடிய |
||
10 |
பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்து, |
|
செல் மழை இயக்கம் காணும் |
||
நல் மலை நாடன் காதல் மகளே? | உரை | |
இற்செறிப்பின்பிற்றைஞான்று தலைமகன் குறியிடத்து வந்து சொல்லியது.-பெருங்கௌசிகனார்
|
47. குறிஞ்சி |
பெருங் களிறு உழுவை அட்டென, இரும் பிடி |
||
உயங்குபிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது, |
||
நெய்தற் பாசடை புரையும் அம் செவிப் |
||
பைதல்அம் குழவி தழீஇ, ஒய்யென |
||
5 |
அரும் புண் உறுநரின் வருந்தி வைகும் |
|
கானக நாடற்கு, 'இது என' யான் அது |
||
கூறின் எவனோ-தோழி! வேறு உணர்ந்து, |
||
அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி, |
||
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து, |
||
10 |
அன்னை அயரும் முருகு நின் |
|
பொன் நேர் பசலைக்கு உதவாமாறே? | உரை | |
சிறைப்புறமாகத்தோழி தலைமகளுக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.-நல்வெள்ளியார்
|
51. குறிஞ்சி |
யாங்குச் செய்வாம்கொல்-தோழி! ஓங்கு கழைக் |
||
காம்புடை விடர் அகம் சிலம்ப, பாம்பு உடன்று |
||
ஓங்கு வரை மிளிர ஆட்டி, வீங்கு செலல் |
||
கடுங் குரல் ஏறொடு கனை துளி தலைஇப் |
||
5 |
பெயல் ஆனாதே, வானம்; பெயலொடு |
|
மின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தென, |
||
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே; |
||
பெருந் தண் குளவி குழைத்த பா அடி, |
||
இருஞ் சேறு ஆடிய நுதல, கொல்களிறு |
||
10 |
பேதை ஆசினி ஒசித்த |
|
வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே? | உரை | |
ஆற்றாது ஏதம் அஞ்சி வேறுபட்டாள், வெறியாடலுற்ற இடத்து, சிறைப்புறமாகச்சொல்லியது.-பேராலவாயர்
|
53. குறிஞ்சி |
யான் அஃது அஞ்சினென் கரப்பவும், தான் அஃது |
||
அறிந்தனள்கொல்லோ? அருளினள்கொல்லோ? |
||
எவன்கொல், தோழி! அன்னை கண்ணியது?- |
||
'வான் உற நிவந்த பெரு மலைக் கவாஅன், |
||
5 |
ஆர் கலி வானம் தலைஇ, நடு நாள் |
|
கனை பெயல் பொழிந்தென, கானக் கல் யாற்று |
||
முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும் |
||
விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும்; |
||
தண்ணென உண்டு, கண்ணின் நோக்கி, |
||
10 |
முனியாது ஆடப் பெறின், இவள் |
|
பனியும் தீர்குவள், செல்க!' என்றோளே! | உரை | |
வரைவு நீட்டிப்ப, தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.-நல்வேட்டனார்
|
55. குறிஞ்சி |
ஓங்கு மலை நாட! ஒழிக, நின் வாய்மை |
||
காம்பு தலைமணந்த கல் அதர்ச் சிறு நெறி, |
||
உறு பகை பேணாது, இரவின் வந்து, இவள் |
||
பொறி கிளர் ஆகம் புல்ல, தோள் சேர்பு |
||
5 |
அறுகாற் பறவை அளவு இல மொய்த்தலின், |
|
கண் கோள் ஆக நோக்கி, 'பண்டும் |
||
இனையையோ?' என வினவினள், யாயே; |
||
அதன் எதிர் சொல்லாளாகி, அல்லாந்து, |
||
என் முகம் நோக்கியோளே: 'அன்னாய்!- |
||
10 |
யாங்கு உணர்ந்து உய்குவள்கொல்? என, மடுத்த |
|
சாந்த ஞெகிழி காட்டி- |
||
ஈங்கு ஆயினவால்' என்றிசின் யானே. | உரை | |
வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும் தோழி தலைவற்குச் சொல்லியது.-பெருவழுதி
|
57. குறிஞ்சி |
தடங்கோட்டு ஆமான், மடங்கல் மா நிரைக் |
||
குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தென, |
||
துஞ்சு பதம் பெற்ற துய்த் தலை மந்தி |
||
கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி, |
||
5 |
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி, தீம் பால் |
|
கல்லா வன் பறழ்க் கைந் நிறை பிழியும் |
||
மா மலை நாட! மருட்கை உடைத்தே- |
||
செங் கோல், கொடுங் குரல், சிறு தினை வியன் புனம் |
||
கொய் பதம் குறுகும்காலை, எம் |
||
10 |
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே! | உரை |
செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.-பொதும்பில் கிழார்
|
61. குறிஞ்சி |
கேளாய், எல்ல தோழி! அல்கல் |
||
வேணவா நலிய, வெய்ய உயிரா, |
||
ஏ மான் பிணையின் வருந்தினெனாக, |
||
துயர் மருங்கு அறிந்தனள் போல, அன்னை, |
||
5 |
'துஞ்சாயோ, என் குறுமகள்?' என்றலின், |
|
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில், |
||
'படு மழை பொழிந்த பாறை மருங்கில் |
||
சிரல் வாய் உற்ற தளவின், பரல் அவல், |
||
கான் கெழு நாடற் படர்ந்தோர்க்குக் |
||
10 |
கண்ணும் படுமோ?' என்றிசின், யானே. | உரை |
தலைவன் வரவு உணர்ந்து, தலைவிக்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது.-சிறுமோலிகனார்
|
64. குறிஞ்சி |
என்னர்ஆயினும் இனி நினைவு ஒழிக! |
||
அன்னவாக இனையல்-தோழி!-யாம் |
||
இன்னமாக நத் துறந்தோர் நட்பு எவன்? |
||
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர் |
||
5 |
அறியாது அறுத்த சிறியிலைச் சாந்தம் |
|
வறனுற்று ஆர முருக்கி, பையென |
||
மரம் வறிதாகச் சோர்ந்து உக்காங்கு, என் |
||
அறிவும் உள்ளமும் அவர் வயின் சென்றென, |
||
வறிதால், இகுளை! என் யாக்கை; இனி அவர் |
||
10 |
வரினும், நோய் மருந்து அல்லர்; வாராது |
|
அவணர் ஆகுக, காதலர்! இவண் நம் |
||
காமம் படர் அட வருந்திய |
||
நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே! | உரை | |
பிரிவிடைத் தலைவியது அருமை கண்டு தூதுவிடக் கருதிய தோழிக்குத் தலைவி சொல்லியது.- உலோச்சனார்
|
65. குறிஞ்சி |
அமுதம் உண்க, நம் அயல் இலாட்டி!- |
||
கிடங்கில் அன்ன இட்டுக் கரைக் கான் யாற்றுக் |
||
கலங்கும் பாசி நீர் அலைக் கலாவ, |
||
ஒளிறு வெள் அருவி ஒண் துறை மடுத்து, |
||
5 |
புலியொடு பொருத புண் கூர் யானை |
|
நற் கோடு நயந்த அன்பு இல் கானவர் |
||
விற் சுழிப்பட்ட நாமப் பூசல் |
||
உருமிடைக் கடி இடி கரையும் |
||
பெரு மலை நாடனை 'வரூஉம்' என்றோளே. | உரை | |
விரிச்சி பெற்றுப்புகன்ற தோழி தலைமகட்குச் சொல்லியது.-கபிலர்
|
68. குறிஞ்சி |
'விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது, |
||
இளையோர் இல்லிடத்து இற்செறிந்திருத்தல் |
||
அறனும் அன்றே; ஆக்கமும் தேய்ம்' என- |
||
குறு நுரை சுமந்து, நறு மலர் உந்தி, |
||
5 |
பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம், |
|
வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே; |
||
'செல்க' என விடுநள்மன்கொல்லோ? எல் உமிழ்ந்து, |
||
உரவு உரும் உரறும் அரை இருள் நடு நாள், |
||
கொடி நுடங்கு இலங்கின மின்னி, |
||
10 |
ஆடு மழை இறுத்தன்று, அவர் கோடு உயர் குன்றே. | உரை |
சிறைப்புறமாகத்தோழி, தலைவிக்கு உரைப்பாளாய்ச் செறிப்பு அறிவுறீஇயது.-பிரான் சாத்தனார்
|
75. குறிஞ்சி |
நயன் இன்மையின், பயன் இது என்னாது, |
||
பூம் பொறிப் பொலிந்த, அழல் உமிழ் அகன் பை, |
||
பாம்பு உயிர் அணங்கியாங்கும் ஈங்கு இது |
||
தகாஅது-வாழியோ, குறுமகள்!-நகாஅது |
||
5 |
உரைமதி; உடையும் என் உள்ளம்-சாரல் |
|
கொடு விற் கானவன் கோட்டுமா தொலைச்சிப் |
||
பச்சூன் பெய்த பகழி போல, |
||
சேயரி பரந்த மா இதழ் மழைக் கண் |
||
உறாஅ நோக்கம் உற்ற என் |
||
10 |
பைதல் நெஞ்சம் உய்யுமாறே. | உரை |
சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் தோழி கேட்பச்சொல்லியது.-மாமூலனார்
|
77. குறிஞ்சி |
மலையன் மா ஊர்ந்து போகி, புலையன் |
||
பெருந் துடி கறங்கப் பிற புலம் புக்கு, அவர் |
||
அருங் குறும்பு எருக்கி, அயா உயிர்த்தாஅங்கு |
||
உய்த்தன்றுமன்னே-நெஞ்சே!-செவ் வேர்ச் |
||
5 |
சினைதொறும் தூங்கும் பயம் கெழு பலவின் |
|
சுளையுடை முன்றில், மனையோள் கங்குல் |
||
ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும் |
||
ஊறலஞ் சேரிச் சீறூர், வல்லோன் |
||
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை |
||
10 |
அகன் தொடி செறித்த முன்கை, ஒள் நுதல், |
|
திதலை அல்குல், குறுமகள் |
||
குவளை உண்கண் மகிழ் மட நோக்கே. | உரை | |
பின்னின்ற தலைவன்நெஞ்சிற்கு உரைத்தது.-கபிலர்
|
82. குறிஞ்சி |
நோயும் நெகிழ்ச்சியும் வீடச்சிறந்த |
||
வேய் வனப்புற்ற தோளை நீயே, |
||
என் உயவு அறிதியோ, நல் நடைக் கொடிச்சி! |
||
முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல, நின் |
||
5 |
உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே- |
|
போகிய நாகப் போக்கு அருங் கவலை, |
||
சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல் |
||
சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண, |
||
வெள் வசிப் படீஇயர், மொய்த்த வள்பு அழீஇ, |
||
10 |
கோள் நாய் கொண்ட கொள்ளைக் |
|
கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே. | உரை | |
தோழியிற்புணர்ச்சிக்கண் தன்னிலைக் கொளீஇயது.-அம்மூவனார்
|
83. குறிஞ்சி |
எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇய |
||
கடவுள் முது மரத்து, உடன் உறை பழகிய, |
||
தேயா வளை வாய், தெண் கண், கூர் உகிர், |
||
வாய்ப் பறை அசாஅம், வலி முந்து கூகை! |
||
5 |
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல், |
|
எலி வான் சூட்டொடு, மலியப் பேணுதும்; |
||
எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசைஇத் |
||
துஞ்சாது அலமரு பொழுதின், |
||
அஞ்சு வரக் கடுங் குரல் பயிற்றாதீமே. | உரை | |
இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லியது.-பெருந்தேவனார்
|
85. குறிஞ்சி |
ஆய் மலர் மழைக் கண் தெண் பனி உறைப்பவும், |
||
வேய் மருள் பணைத் தோள் விறல் இழை நெகிழவும், |
||
அம்பல் மூதூர் அரவம் ஆயினும், |
||
குறு வரி இரும் புலி அஞ்சிக் குறு நடைக் |
||
5 |
கன்றுடை வேழம் நின்று காத்து அல்கும், |
|
ஆர் இருள் கடுகிய, அஞ்சு வரு சிறு நெறி |
||
வாரற்கதில்ல-தோழி!-சாரல் |
||
கானவன் எய்த முளவு மான் கொழுங் குறை, |
||
தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி, கிழங்கொடு |
||
10 |
காந்தள்அம் சிறுகுடிப் பகுக்கும் |
|
ஓங்கு மலை நாடன், நின் நசையினானே! | உரை | |
தலைவன் வரவு உணர்ந்த தோழி தலைவிக்கு உரைத்தது.-நல்விளக்கனார்
|
88. குறிஞ்சி |
யாம் செய் தொல் வினைக்கு எவன்பேதுற்றனை? |
||
வருந்தல்; வாழி!-தோழி!-யாம் சென்று |
||
உரைத்தனம் வருகம்; எழுமதி; புணர்திரைக் |
||
கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்கு |
||
5 |
உருகி உகுதல் அஞ்சுவல்; உதுக்காண்- |
|
தம்மோன் கொடுமை நம் வயின் எற்றி, |
||
நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது, |
||
கண்ணீர் அருவியாக |
||
அழுமே, தோழி! அவர் பழம் முதிர் குன்றே. | உரை | |
சிறைப்புறமாகத்தோழி, தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.-நல்லந்துவனார்
|
93. குறிஞ்சி |
'பிரசம் தூங்க, பெரும் பழம் துணர, |
||
வரை வெள் அருவி மாலையின் இழிதர, |
||
கூலம் எல்லாம் புலம்புஉக, நாளும் |
||
மல்லற்று அம்ம, இம் மலை கெழு வெற்பு!' எனப் |
||
5 |
பிரிந்தோர் இரங்கும் பெருங் கல் நாட! |
|
செல்கம்; எழுமோ; சிறக்க, நின் ஊழி! |
||
மருங்கு மறைத்த திருந்து இழைப் பணைத் தோள், |
||
நல்கூர் நுசுப்பின், மெல் இயல், குறுமகள் |
||
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய |
||
10 |
பழங்கண் மாமையும் உடைய; தழங்கு குரல் |
|
மயிர்க் கண் முரசினோரும் முன் |
||
உயிர்க் குறியெதிர்ப்பை பெறல் அருங்குரைத்தே. | உரை | |
வரைவு கடாயது.-மலையனார்
|
95. குறிஞ்சி |
கழை பாடு இரங்க, பல் இயம் கறங்க, |
||
ஆடு மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று, |
||
அதவத் தீம் கனி அன்ன செம் முகத் |
||
துய்த் தலை மந்தி வன் பறழ் தூங்க, |
||
5 |
கழைக் கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து, |
|
குறக் குறுமாக்கள் தாளம் கொட்டும் அக் |
||
குன்றகத்ததுவே, குழு மிளைச் சீறூர்; |
||
சீறூரோளே, நாறு மயிர்க் கொடிச்சி; |
||
கொடிச்சி கையகத்ததுவே, பிறர் |
||
10 |
விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே. | உரை |
தலைமகன் பாங்கற்கு, 'இவ்விடத்து இத்தன்மைத்து' என உரைத்தது.-கோட்டம்பலவனார்
|
98. குறிஞ்சி |
எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின் |
||
செய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றி |
||
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர், வீங்கு பொறி |
||
நூழை நுழையும் பொழுதில், தாழாது |
||
5 |
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென, |
|
மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து, தன் |
||
கல் அளைப் பள்ளி வதியும் நாடன்! |
||
எந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர்த் |
||
துஞ்சாக் காவலர் இகழ் பதம் நோக்கி, |
||
10 |
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே- |
|
வைகலும் பொருந்தல் ஒல்லாக் |
||
கண்ணொடு, வாரா என் நார் இல் நெஞ்சே! | உரை | |
இரவுக்குறி வந்து ஒழுகும்தலைவனைத் தோழி வரைவு கடாயது.-உக்கிரப் பெருவழுதி
|
102. குறிஞ்சி |
கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப்பைங் கிளி! |
||
அஞ்சல் ஓம்பி, ஆர் பதம் கொண்டு, |
||
நின் குறை முடித்த பின்றை, என் குறை |
||
செய்தல்வேண்டுமால்; கை தொழுது இரப்பல்; |
||
5 |
பல் கோட் பலவின் சாரல் அவர் நாட்டு, |
|
நின் கிளை மருங்கின், சேறிஆயின், |
||
அம் மலை கிழவோற்கு உரைமதி-இம் மலைக் |
||
கானக் குறவர் மட மகள் |
||
ஏனல் காவல் ஆயினள் எனவே. | உரை | |
காமம் மிக்க கழிபடர்கிளவி.-செம்பியனார்
|
104. குறிஞ்சி |
பூம் பொறி உழுவைப் பேழ் வாய்ஏற்றை |
||
தேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே, |
||
துறுகல் மீமிசை, உறுகண் அஞ்சாக் |
||
குறக் குறுமாக்கள் புகற்சியின் எறிந்த |
||
5 |
தொண்டகச் சிறு பறைப் பாணி அயலது |
|
பைந் தாள் செந்தினைப் படு கிளி ஓப்பும் |
||
ஆர் கலி வெற்பன் மார்பு நயந்து உறையும் |
||
யானே அன்றியும் உளர்கொல்-பானாள், |
||
பாம்புடை விடர ஓங்கு மலை மிளிர, |
||
10 |
உருமு சிவந்து எறியும் பொழுதொடு, பெரு நீர் |
|
போக்கு அற விலங்கிய சாரல், |
||
நோக்கு அருஞ் சிறு நெறி நினையுமோரே? | உரை | |
தலைவி ஆறுபார்த்து உற்ற அச்சத்தால் சொல்லியது.-பேரி சாத்தனார்
|
108. குறிஞ்சி |
மலை அயற் கலித்த மை ஆர் ஏனல் |
||
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை |
||
அணையக் கண்ட அம் குடிக் குறவர், |
||
கணையர், கிணையர், கை புனை கவணர், |
||
5 |
விளியர், புறக்குடி ஆர்க்கும் நாட! |
|
பழகிய பகையும் பிரிவு இன்னாதே; |
||
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மடந்தை |
||
சுடர் புரை திரு நுதல் பசப்ப, |
||
தொடர்பு யாங்கு விட்டனை? நோகோ யானே! | உரை | |
வரையாது நெடுங் காலம்வந்து ஒழுகலாற்றாளாய தோழி, தலைமகளது ஆற்றாமை கூறி வரைவு கடாயது.
|
112. குறிஞ்சி |
விருந்து எவன்செய்கோ-தோழி!-சாரல் |
||
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கைச் |
||
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு, |
||
உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும் |
||
5 |
பெருங் கல் நாடன் வரவு அறிந்து, விரும்பி, |
|
மாக் கடல் முகந்து, மணி நிறத்து அருவித் |
||
தாழ் நீர் நனந் தலை அழுந்து படப் பாஅய், |
||
மலை இமைப்பது போல் மின்னி, |
||
சிலை வல் ஏற்றொடு செறிந்த இம் மழைக்கே? | உரை | |
பருவ வரவின்கண்ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.-பெருங்குன்றூர் கிழார்
|
114. குறிஞ்சி |
வெண் கோடு கொண்டு வியல் அறை வைப்பவும், |
||
பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும், |
||
மறுகுதொறு புலாவும் சிறுகுடி அரவம் |
||
வைகிக் கேட்டுப் பையாந்திசினே; |
||
5 |
அளிதோ தானே-தோழி!-அல்கல் |
|
வந்தோன்மன்ற குன்ற நாடன்; |
||
துளி பெயல் பொறித்த புள்ளித் தொல் கரை |
||
பொரு திரை நிவப்பின் வரும் யாறு அஞ்சுவல்; |
||
ஈர்ங் குரல் உருமின் ஆர் கலி நல் ஏறு |
||
10 |
பாம்பு கவின் அழிக்கும் ஓங்கு வரை பொத்தி, |
|
மையல் மடப் பிடி இனைய, |
||
கை ஊன்றுபு இழிதரு களிறு எறிந்தன்றே. | உரை | |
ஆறு பார்த்து உற்ற அச்சத்தால் தோழி தலைவிக்கு உரைப்பாளாய், சிறைப்புறமாகச் சொல்லியது.- தொல்கபிலர்
|
116. குறிஞ்சி |
'தீமை கண்டோர் திறத்தும்பெரியோர் |
||
தாம் அறிந்து உணர்க' என்பமாதோ; |
||
வழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்று, |
||
இரு வெதிர் ஈன்ற வேல் தலைக் கொழு முளை, |
||
5 |
சூல் முதிர் மடப் பிடி, நாள் மேயல் ஆரும் |
|
மலை கெழு நாடன் கேண்மை, பலவின் |
||
மாச் சினை துறந்த கோள் முதிர் பெரும் பழம் |
||
விடர் அளை வீழ்ந்து உக்காஅங்கு, தொடர்பு அறச் |
||
சேணும் சென்று உக்கன்றே அறியாது |
||
10 |
ஏ கல் அடுக்கத்து இருள் முகை இருந்த |
|
குறிஞ்சி நல் ஊர்ப் பெண்டிர் |
||
இன்னும் ஓவார், என் திறத்து அலரே! | உரை | |
வரைவு நீட்டிப்ப ஆற்றாளாய தலைவி தோழிக்கு வன்புறை எதிரழிந்து சொல்லியது.-கந்தரத்தனார்
|
119. குறிஞ்சி |
தினை உண் கேழல் இரிய, புனவன் |
||
சிறு பொறி மாட்டிய பெருங் கல் அடாஅர், |
||
ஒண் கேழ் வயப் புலி படூஉம் நாடன் |
||
ஆர் தர வந்தனன் ஆயினும், படப்பை |
||
5 |
இன் முசுப் பெருங் கலை நன் மேயல் ஆரும் |
|
பல் மலர்க் கான் யாற்று உம்பர், கருங் கலை |
||
கடும்பு ஆட்டு வருடையொடு தாவன உகளும் |
||
பெரு வரை நீழல் வருகுவன், குளவியொடு |
||
கூதளம் ததைந்த கண்ணியன்; யாவதும் |
||
10 |
முயங்கல் பெறுகுவன் அல்லன்; |
|
புலவி கொளீஇயர், தன் மலையினும் பெரிதே. | உரை | |
சிறைப்புறமாகத்தோழி செறிப்பு அறிவுறீஇயது.-பெருங்குன்றூர்கிழார்
|
122. குறிஞ்சி |
இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத |
||
கருங் கால் செந்தினை கடியுமுண்டென; |
||
கல்லக வரைப்பில் கான் கெழு சிறுகுடி |
||
மெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பின; |
||
5 |
'நரை உரும் உரறும் நாம நள் இருள் |
|
வரையக நாடன் வரூஉம் என்பது |
||
உண்டுகொல்? அன்றுகொல்? யாதுகொல் மற்று?' என |
||
நின்று, மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடி, |
||
அன்னையும் அமரா முகத்தினள்; நின்னொடு |
||
10 |
நீயே சூழ்தல் வேண்டும்- |
|
பூ வேய் கண்ணி!-அது பொருந்துமாறே. | உரை | |
சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு உரைப்பாளாய்த் தலைவன் கேட்பச்சொல்லியது.-செங்கண்ணனார்
|
125.குறிஞ்சி |
'இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை |
||
கொடு வரிப் புற்றம் வாய்ப்ப வாங்கி, |
||
நல் அரா நடுங்க உரறி, கொல்லன் |
||
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அகழும் |
||
5 |
நடு நாள் வருதல் அஞ்சுதும் யாம்' என, |
|
வரைந்து வரல் இரக்குவம் ஆயின், நம் மலை |
||
நல் நாள் வதுவை கூடி, நீடு இன்று |
||
நம்மொடு செல்வர்மன்-தோழி!-மெல்ல |
||
வேங்கைக் கண்ணியர் எருது எறி களமர் |
||
10 |
நிலம் கண்டன்ன அகன் கண் பாசறை, |
|
மென் தினை நெடும் போர் புரிமார் |
||
துஞ்சு களிறு எடுப்பும் தம் பெருங் கல் நாட்டே. | உரை | |
வரைவு நீட்டிப்ப, ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.
|
128. குறிஞ்சி |
'பகல் எரி சுடரின் மேனி சாயவும், |
||
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும் |
||
எனக்கு நீ உரையாயாயினை; நினக்கு யான் |
||
உயிர் பகுத்தன்ன மாண்பினேன் ஆகலின், |
||
5 |
அது கண்டிசினால் யானே' என்று, நனி |
|
அழுதல் ஆன்றிசின்-ஆயிழை!-ஒலி குரல் |
||
ஏனல் காவலினிடை உற்று ஒருவன், |
||
கண்ணியன், கழலன், தாரன், தண்ணெனச் |
||
சிறு புறம் கவையினனாக, அதற்கொண்டு |
||
10 |
அஃதே நினைந்த நெஞ்சமொடு |
|
இஃது ஆகின்று, யான் உற்ற நோயே. | உரை | |
குறை நேர்ந்த தோழி தலைவி குறை நயப்பக் கூறியது. தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றதூஉம் ஆம்.- நற்சேந்தனாா
|
129. குறிஞ்சி |
பெரு நகை கேளாய், தோழி! காதலர் |
||
ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம் |
||
பொம்மல் ஓதி! நம் இவண் ஒழியச் |
||
செல்ப என்ப, தாமே; சென்று, |
||
5 |
தம் வினை முற்றி வரூஉம் வரை, நம் மனை |
|
வாழ்தும் என்ப, நாமே, அதன்தலை- |
||
கேழ் கிளர் உத்தி அரவுத் தலை பனிப்ப, |
||
படு மழை உருமின் உரற்று குரல் |
||
நடு நாள் யாமத்தும் தமியம் கேட்டே. | உரை | |
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகளை முகம் புக்கது.-ஒளவையார்
|
133. குறிஞ்சி |
'தோளே தொடி கொட்பு ஆனா; கண்ணே |
||
வாள் ஈர் வடியின் வடிவு இழந்தனவே; |
||
நுதலும் பசலை பாயின்று-திதலைச் |
||
சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல் |
||
5 |
மணி ஏர் ஐம்பால் மாயோட்கு' என்று, |
|
வெவ் வாய்ப் பெண்டிர் கவ்வை தூற்ற, |
||
நாம் உறு துயரம் செய்யலர் என்னும்- |
||
காமுறு தோழி!-காதல்அம் கிளவி, |
||
இரும்பு செய் கொல்லன் வெவ் உலைத் தெளித்த |
||
10 |
தோய் மடற் சில் நீர் போல, |
|
நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே. | உரை | |
வரைவிடை வைத்துப்பிரிவு ஆற்றாளாய தலைவி வற்புறுத்தும் தோழிக்குச்சொல்லியது.-நற்றமனார்
|
134. குறிஞ்சி |
'இனிதின் இனிது தலைப்படும்' என்பது |
||
இதுகொல்?-வாழி, தோழி!-காதலர் |
||
வரு குறி செய்த வரையகச் சிறு தினைச் |
||
செவ் வாய்ப் பாசினம் கடீஇயர், 'கொடிச்சி! |
||
5 |
அவ் வாய்த் தட்டையொடு அவணை ஆக!' என, |
|
ஏயள்மன் யாயும்; நுந்தை, 'வாழியர், |
||
அம் மா மேனி நிரை தொடிக் குறுமகள்! |
||
செல்லாயோ; நின் முள் எயிறு உண்கு' என, |
||
மெல்லிய இனிய கூறலின், யான் அஃது |
||
10 |
ஒல்லேன் போல உரையாடுவலே! | உரை |
'இற்செறிப்பார்' என ஆற்றாளாய தலைவியை, அஃது இலர் என்பது பட, தோழி சொல்லியது.
|
136. குறிஞ்சி |
திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும், |
||
அரும் பிணி உறுநர்க்கு, வேட்டது கொடாஅது, |
||
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல, |
||
என்னை-வாழிய, பலவே!-பன்னிய |
||
5 |
மலை கெழு நாடனொடு நம்மிடைச் சிறிய |
|
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல, |
||
நீப்ப நீங்காது, வரின் வரை அமைந்து, |
||
தோள் பழி மறைக்கும் உதவிப் |
||
போக்கு இல் பொலந் தொடி செறீஇயோனே. | உரை | |
சிறைப்புறமாகத்தலைவி தோழிக்கு உரைத்தது.-நற்றங் கொற்றனார்
|
140. குறிஞ்சி |
கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்த |
||
சிறு கோல் இணர பெருந் தண் சாந்தம் |
||
வகை சேர் ஐம்பால் தகை பெற வாரி, |
||
புலர்விடத்து உதிர்த்த துகள் படு கூழைப் |
||
5 |
பெருங் கண் ஆயம் உவப்ப, தந்தை |
|
நெடுந் தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்து, |
||
பந்தொடு பெயரும் பரிவிலாட்டி |
||
அருளினும், அருளாள் ஆயினும், பெரிது அழிந்து |
||
பின்னிலை முனியல்மா நெஞ்சே!-என்னதூஉம் |
||
10 |
அருந் துயர் அவலம் தீர்க்கும் |
|
மருந்து பிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கே. | உரை | |
குறை மறுக்கப்பட்ட தலைவன் தன் நெஞ்சினை நெருங்கியது.-பூதங்கண்ணனார்
|
144. குறிஞ்சி |
பெருங் களிறு உழுவை தாக்கலின், இரும் பிடி |
||
கருவி மா மழையின் அரவம் அஞ்சுபு, |
||
போது ஏர் உண் கண் கலுழவும், ஏதில் |
||
பேதை நெஞ்சம் கவலை கவற்ற |
||
5 |
ஈங்கு ஆகின்றால்-தோழி!-பகுவாய்ப் |
|
பிணவுப் புலி வழங்கும் அணங்கு அருங் கவலை, |
||
அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான் யாற்றுக் |
||
கரை அருங் குட்டம் தமியர் நீந்தி, |
||
விரவு மலர் பொறித்த தோளர் |
||
10 |
இரவின் வருதல் அறியாதேற்கே. | உரை |
ஆற்றது ஏதத்திற்குக்கவன்று சிறைப்புறமாகத் தலைவி சொல்லியது.-கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்
|
146. குறிஞ்சி |
வில்லாப் பூவின் கண்ணி சூடி, |
||
'நல் ஏமுறுவல்' என, பல் ஊர் திரிதரு |
||
நெடு மாப் பெண்ணை மடல் மானோயே!- |
||
கடன் அறி மன்னர் குடை நிழற் போலப் |
||
5 |
பெருந் தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்து, |
|
இருந்தனை சென்மோ-'வழங்குக சுடர்!' என, |
||
அருளிக் கூடும் ஆர்வ மாக்கள் |
||
நல்லேம் என்னும் கிளவி வல்லோன் |
||
எழுதி அன்ன காண் தகு வனப்பின் |
||
10 |
ஐயள், மாயோள், அணங்கிய |
|
மையல் நெஞ்சம் என் மொழிக் கொளினே! | உரை | |
பின்னின்ற தலைவன்முன்னிலைப் புறமொழியாக, தோழி கேட்பச்சொல்லியது.-கந்தரத்தனார்
|
147. குறிஞ்சி |
யாங்கு ஆகுவமோ-'அணி நுதற் குறுமகள்! | ||
தேம் படு சாரற் சிறு தினைப் பெருங் குரல் | ||
செவ் வாய்ப் பைங் கிளி கவர, நீ மற்று | ||
எவ் வாய்ச் சென்றனை, அவண்?' எனக் கூறி, | ||
5 | அன்னை ஆனாள் கழற, முன் நின்று, | |
'அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை | ||
அறியலும் அறியேன்; காண்டலும் இலனே; | ||
வெதிர் புனை தட்டையேன் மலர் பூக் கொய்து, | ||
சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன்' என நினைவிலை | ||
10 | பொய்யல், அந்தோ! வாய்த்தனை? அது கேட்டு, | |
தலை இறைஞ்சினளே அன்னை; | ||
செலவு ஒழிந்தனையால், அளியை நீ, புனத்தே? | உரை | |
சிறைப்புறமாகத்தோழி சொல்லியது.-கொள்ளம்பக்கனார்
|
151. குறிஞ்சி |
நல் நுதல் பசப்பினும், பெருந் தோள் நெகிழினும், |
||
கொல் முரண் இரும் புலி அரும் புழைத் தாக்கிச் |
||
செம் மறுக் கொண்ட வெண் கோட்டு யானை |
||
கல் மிசை அருவியின் கழூஉஞ் சாரல் |
||
5 |
வாரற்கதில்ல-தோழி!-கடுவன், |
|
முறி ஆர் பெருங் கிளை அறிதல் அஞ்சி, |
||
கறி வளர் அடுக்கத்து, களவினில் புணர்ந்த |
||
செம் முக மந்தி செய்குறி, கருங் கால் |
||
பொன் இணர் வேங்கைப் பூஞ் சினைச் செலீஇயர், |
||
10 |
குண்டு நீர் நெடுஞ் சுனை நோக்கிக் கவிழ்ந்து, தன் |
|
புன் தலைப் பாறு மயிர் திருத்தும் |
||
குன்ற நாடன் இரவினானே! | உரை | |
இரவுக்குறிச்சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.-இளநாகனார்
|
154. குறிஞ்சி |
கானமும் கம்மென்றன்றே; வானமும் |
||
வரை கிழிப்பன்ன மை இருள் பரப்பி, |
||
பல் குரல் எழிலி பாடு ஓவாதே; |
||
மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்த |
||
5 |
வெஞ் சின உழுவைப் பேழ் வாய் ஏற்றை |
|
அஞ்சுதக உரறும்; ஓசை கேளாது |
||
துஞ்சுதியோ-இல, தூவிலாட்டி!- |
||
பேர் அஞர் பொருத புகர் படு நெஞ்சம் |
||
நீர் அடு நெருப்பின் தணிய, இன்று அவர் |
||
10 |
வாரார் ஆயினோ நன்றே; சாரல் |
|
விலங்கு மலை ஆர் ஆறு உள்ளுதொறும், |
||
நிலம் பரந்து ஒழுகும், என் நிறை இல் நெஞ்சே? | உரை | |
இரவுக்குறித் தலைவன்சிறைப்புறமாக வரைவு கடாயது.- நல்லாவூர் கிழார்
|
156. குறிஞ்சி |
நீயே, அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து, எம் |
||
கடியுடை வியல் நகர்க் காவல் நீவியும், |
||
பேர் அன்பினையே-பெருங் கல் நாட!- |
||
யாமே, நின்னும் நின் மலையும் பாடி, பல் நாள் |
||
5 |
சிறு தினை காக்குவம் சேறும்; அதனால், |
|
பகல் வந்தீமோ, பல் படர் அகல! |
||
எருவை நீடிய பெரு வரைச் சிறுகுடி |
||
அரியல் ஆர்ந்தவர் ஆயினும், பெரியர்; |
||
பாடு இமிழ் விடர் முகை முழங்க, |
||
10 |
ஆடு மழை இறுத்தது, எம் கோடு உயர் குன்றே. | உரை |
இரவுக்குறி மறுத்தது.-கண்ணங் கொற்றனார்
|
158. குறிஞ்சி |
அம்ம வாழி, தோழி! நம்வயின், |
||
யானோ காணேன்-அதுதான் கரந்தே, |
||
கல் அதர் மன்னும் கால் கொல்லும்மே; |
||
கனை இருள் மன்னும் கண் கொல்லும்மே- |
||
5 |
விடர் முகைச் செறிந்த வெஞ் சின இரும் புலி |
|
புகர் முக வேழம் புலம்பத் தாக்கி, |
||
குருதி பருகிய கொழுங் கவுட் கய வாய் |
||
வேங்கை முதலொடு துடைக்கும் |
||
ஓங்கு மலை நாடன் வரூஉம் ஆறே. | உரை | |
ஆறு பார்த்து உற்ற அச்சத்தால் சிறைப்புறமாகச் சொல்லியது.-வெள்ளைக்குடி நாகனார்
|
160. குறிஞ்சி |
நயனும், நண்பும், நாணு நன்கு உடைமையும், |
||
பயனும், பண்பும், பாடு அறிந்து ஒழுகலும், |
||
நும்மினும் அறிகுவென்மன்னே-கம்மென |
||
எதிர்த்த தித்தி, ஏர் இள வன முலை |
||
5 |
விதிர்த்து விட்டன்ன அந் நுண் சுணங்கின், |
|
ஐம் பால் வகுத்த கூந்தல், செம் பொறி |
||
திரு நுதல் பொலிந்த தேம் பாய் ஓதி, |
||
முது நீர் இலஞ்சிப் பூத்த குவளை |
||
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள் |
||
10 |
அரி மதர் மழைக் கண் காணா ஊங்கே. | உரை |
கழற்று எதிர்மறை.
|
165. குறிஞ்சி |
அமர்க் கண் ஆமான் அரு நிறம் முள்காது |
||
பணைத்த பகழிப் போக்கு நினைந்து, கானவன், |
||
'அணங்கொடு நின்றது மலை, வான் கொள்க' எனக் |
||
கடவுள் ஓங்கு வரை பேண்மார், வேட்டு எழுந்து, |
||
5 |
கிளையொடு மகிழும் குன்ற நாடன் |
|
அடைதரும்தோறும், அருமை தனக்கு உரைப்ப, |
||
'நப் புணர்வு இல்லா நயன் இலோர் நட்பு |
||
அன்ன ஆகுக' என்னான்; |
||
ஒல்காது ஒழி; மிகப் பல்கின தூதே. | உரை | |
நொதுமலர் வரையும் பருவத்து, தோழி தலைவிக்கு அறத்தொடு நிலை பயப்பச் சொல்லியது; வரைவு மலிந்ததூஉம் ஆம்.
|
168. குறிஞ்சி |
சுரும்பு உண விரிந்த கருங் கால் வேங்கைப் |
||
பெருஞ் சினைத் தொடுத்த கொழுங் கண் இறாஅல், |
||
புள்ளுற்றுக் கசிந்த தீம் தேன் கல் அளைக் |
||
குறக் குறுமாக்கள் உண்ட மிச்சிலைப் |
||
5 |
புன் தலை மந்தி வன் பறழ் நக்கும் |
|
நன் மலை நாட! பண்பு எனப் படுமோ- |
||
நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய், |
||
அணங்குடை அரவின் ஆர் இருள் நடு நாள், |
||
மை படு சிறு நெறி எஃகு துணை ஆக |
||
10 |
ஆரம் கமழும் மார்பினை, |
|
சாரற் சிறுகுடி ஈங்கு நீ வரலே? | உரை | |
தோழி இரவுக்குறி மறுத்தது.
|
173. குறிஞ்சி |
சுனைப் பூக் குற்றும், தொடலை தைஇயும், |
||
மலைச் செங் காந்தட் கண்ணி தந்தும், |
||
தன் வழிப் படூஉம் நம் நயந்தருளி, |
||
வெறி என உணர்ந்த அரிய அன்னையை, |
||
5 |
கண்ணினும் கனவினும் காட்டி, 'இந் நோய் |
|
என்னினும் வாராது; மணியின் தோன்றும் |
||
அம் மலை கிழவோன் செய்தனன் இது' எனின், |
||
படு வண்டு ஆர்க்கும் பைந் தார் மார்பின் |
||
நெடு வேட்கு ஏதம் உடைத்தோ?- |
||
10 |
தொடியோய்! கூறுமதி, வினவுவல் யானே. | உரை |
தோழி தலைவிக்கு உரைப்பாளாய், சிறைப்புறமாகச் சொல்லியது; வெறி அச்சுறீஇத் தோழி அறத்தொடு நிலை பயப்பித்ததூஉம் ஆம்.
|
176. குறிஞ்சி |
எம் நயந்து உறைவி ஆயின், யாம் நயந்து |
||
நல்கினம் விட்டது என்? நலத்தோன் அவ் வயின் |
||
சால்பின் அளித்தல் அறியாது, 'அவட்கு அவள் |
||
காதலள் என்னுமோ?' உரைத்திசின்-தோழி!- |
||
5 |
நிரைத்த யானை முகத்து வரி கடுப்பப் |
|
போது பொதி உடைந்த ஒண் செங் காந்தள் |
||
வாழை அம் சிலம்பின் வம்பு படக் குவைஇ, |
||
யாழ் ஓர்த்தன்ன இன் குரல் இன வண்டு, |
||
அருவி முழவின் பாடொடு ஒராங்கு, |
||
10 |
மென்மெல இசைக்கும் சாரல், |
|
குன்ற வேலித் தம் உறைவின் ஊரே. | உரை | |
பரத்தை தலைவியின் பாங்கிக்குப் பாங்காயினார் கேட்ப, விறலிக்குச் சொல்லியது.
|
182. குறிஞ்சி |
நிலவும் மறைந்தன்று; இருளும் பட்டன்று; |
||
ஓவத்து அன்ன இடனுடை வரைப்பின், |
||
பாவை அன்ன நிற் புறங்காக்கும் |
||
சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள்; |
||
5 |
கெடுத்துப்படு நன் கலம் எடுத்துக் கொண்டாங்கு, |
|
நன் மார்பு அடைய முயங்கி, மென்மெல, |
||
கண்டனம் வருகம் சென்மோ?-தோழி!- |
||
கீழும் மேலும் காப்போர் நீத்த |
||
வறுந் தலைப் பெருங் களிறு போல, |
||
10 |
தமியன் வந்தோன், பனியலை நீயே! | உரை |
வரைவு நீட்டிப்ப, தலைமகள் ஆற்றாமை அறிந்த தோழி சிறைப்புறமாகச் சொல்லி வரைவு கடாயது.
|
185. குறிஞ்சி |
ஆனா நோயோடு அழி படர்க் கலங்கி, |
||
காமம் கைம்மிக, கையறு துயரம் |
||
காணவும் நல்காய் ஆயின்-பாணர் |
||
பரிசில் பெற்ற விரி உளை நல் மான் |
||
5 |
கவி குளம்பு பொருத கல் மிசைச் சிறு நெறி, |
|
இரவலர் மெலியாது ஏறும், பொறையன் |
||
உரை சால் உயர் வரைக் கொல்லிக் குடவயின், |
||
அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப் பாய்ந்து, |
||
பறவை இழைத்த பல் கண் இறாஅல் |
||
10 |
தேனுடை நெடு வரை, தெய்வம் எழுதிய |
|
வினை மாண் பாவை அன்னோள் |
||
கொலை சூழ்ந்தனளால்-நோகோ யானே. | உரை | |
பாங்கற்குத் தலைவன் சொல்லியது; சேட்படுக்கும் தோழிக்குத் தலைவன் சொல்லியதூஉம் ஆம்.
|
188. குறிஞ்சி |
படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக் |
||
கொடு மடல் ஈன்ற கூர் வாய்க் குவி முகை, |
||
ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம் |
||
மெல் விரல் மோசை போல, காந்தள் |
||
5 |
வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப! |
|
'நன்றி விளைவும் தீதொடு வரும்' என, |
||
அன்று நற்கு அறிந்தனள் ஆயின், குன்றத்துத் |
||
தேம் முதிர் சிலம்பில் தடைஇய |
||
வேய் மருள் பணைத் தோள் அழியலள்மன்னே. | உரை | |
பகற்குறி மறுத்து வரைவு கடாயது.
|
190. குறிஞ்சி |
நோ, இனி; வாழிய-நெஞ்சே! மேவார் |
||
ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ்த் |
||
திதலை எஃகின் சேந்தன் தந்தை, |
||
தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி, |
||
5 |
வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலரும் |
|
அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன |
||
காமர் பணைத் தோள் நலம் வீறு எய்திய, |
||
வலை மான் மழைக் கண், குறுமகள் |
||
சில் மொழித் துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோயே! | உரை | |
பின்னின்ற தலைமகன் ஆற்றானாகி நெஞ்சிற்குச் சொல்லியது; அல்லகுறிப்பட்டு மீள்வான் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம்; இடைச் சுரத்துச் சென்று தலைமகள் நலம் உள்ளி மீளலுற்ற நெஞ்சினைக் கழறியதூஉம் ஆம்.
|
192. குறிஞ்சி |
'குருதி வேட்கை உரு கெழு வய மான் |
||
வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும் |
||
மரம் பயில் சோலை மலிய, பூழியர் |
||
உருவத் துருவின், நாள் மேயல் ஆரும் |
||
5 |
மாரி எண்கின் மலைச் சுர நீள் இடை, |
|
நீ நயந்து வருதல் எவன்?' எனப் பல புலந்து, |
||
அழுதனை உறையும் அம் மா அரிவை! |
||
பயம் கெழு பலவின் கொல்லிக் குட வரைப் |
||
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை |
||
10 |
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன, நின் |
|
ஆய் நலம் உள்ளி வரின், எமக்கு |
||
ஏமம் ஆகும், மலைமுதல் ஆறே. | உரை | |
இரவுக்குறி மறுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.
|
194. குறிஞ்சி |
அம்ம வாழி, தோழி! கைம்மாறு |
||
யாது செய்வாங்கொல் நாமே-கய வாய்க் |
||
கன்றுடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும், |
||
வலன் உயர் மருப்பின், நிலம் ஈர்த் தடக் கை, |
||
5 |
அண்ணல் யானைக்கு அன்றியும், கல் மிசைத் |
|
தனி நிலை இதணம் புலம்பப் போகி, |
||
மந்தியும் அறியா மரம் பயில் ஒரு சிறை, |
||
குன்ற வெற்பனொடு நாம் விளையாட, |
||
இரும்பு கவர்கொண்ட ஏனற் |
||
10 |
பெருங் குரல் கொள்ளாச் சிறு பசுங் கிளிக்கே? | உரை |
சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-மதுரை மருதன் இளநாகனார்
|
201.குறிஞ்சி |
'மலை உறை குறவன் காதல் மட மகள், |
||
பெறல் அருங்குரையள், அருங் கடிக் காப்பினள்; |
||
சொல் எதிர் கொள்ளாள்; இளையள்; அனையோள் |
||
உள்ளல் கூடாது' என்றோய்! மற்றும், |
||
5 |
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித் |
|
தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங் கோட்டு, |
||
அவ் வெள் அருவிக் குட வரையகத்து, |
||
கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும், |
||
உரும் உடன்று எறியினும், ஊறு பல தோன்றினும், |
||
10 |
பெரு நிலம் கிளரினும், திரு நல உருவின் |
|
மாயா இயற்கைப் பாவையின், |
||
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே. | உரை | |
கழறிய பாங்கற்குத் தலைமகன் சொல்லியது.-பரணர்
|
204. குறிஞ்சி |
'தளிர் சேர் தண் தழை தைஇ, நுந்தை |
||
குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ? |
||
குறுஞ் சுனைக் குவளை அடைச்சி, நாம் புணரிய |
||
நறுந் தண் சாரல் ஆடுகம் வருகோ? |
||
5 |
இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உணக் |
|
கூறு இனி; மடந்தை! நின் கூர் எயிறு உண்கு' என, |
||
யான் தன் மொழிதலின், மொழி எதிர் வந்து, |
||
தான் செய் குறி நிலை இனிய கூறி, |
||
ஏறு பிரி மடப் பிணை கடுப்ப வேறுபட்டு, |
||
10 |
உறு கழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும் |
|
கொடிச்சி செல்புறம் நோக்கி, |
||
விடுத்த நெஞ்சம்! விடல் ஒல்லாதே? | உரை | |
பின்னின்ற தலைமகன் ஆற்றானாய், தோழி கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-மள்ளனார்
|
206. குறிஞ்சி |
'துய்த் தலைப் புனிற்றுக் குரல் பால் வார்பு இறைஞ்சி, |
||
தோடு அலைக் கொண்டன ஏனல் என்று, |
||
துறு கல் மீமிசைக் குறுவன குழீஇ, |
||
செவ் வாய்ப் பாசினம் கவரும்' என்று, அவ் வாய்த் |
||
5 |
தட்டையும் புடைத்தனை, கவணையும் தொடுக்க' என |
|
எந்தை வந்து உரைத்தனனாக, அன்னையும், |
||
'நல் நாள் வேங்கையும் மலர்கமா, இனி' என |
||
என் முகம் நோக்கினள்; எவன்கொல்?-தோழி!- |
||
செல்வாள் என்றுகொல்? 'செறிப்பல்' என்றுகொல்? |
||
10 |
கல் கெழு நாடன் கேண்மை |
|
அறிந்தனள்கொல்? அஃது அறிகலென் யானே! | உரை | |
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.-ஐயூர் முடவனார்
|
209. குறிஞ்சி |
மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத் |
||
தளி பதம் பெற்ற கான் உழு குறவர் |
||
சில வித்து அகல இட்டென, பல விளைந்து, |
||
இறங்குகுரல் பிறங்கிய ஏனல் உள்ளாள், |
||
5 |
மழலை அம் குறுமகள், மிழலைஅம் தீம் குரல் |
|
கிளியும் தாம் அறிபவ்வே; எனக்கே |
||
படும்கால் பையுள் தீரும்; படாஅது |
||
தவிரும்காலைஆயின், என் |
||
உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே! | உரை | |
குறை மறுக்கப்பட்டுப் பின்னின்ற தலைமகன் ஆற்றானாய், நெஞ்சிற்குச் சொல்லுவானாய்ச் சொல்லியது; தோழி கேட்டுக் குறை முடிப்பது பயன்.-நொச்சி நியமங்கிழார்
|
213. குறிஞ்சி |
அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி, |
||
'கன்று கால்யாத்த மன்றப் பலவின் |
||
வேர்க் கொண்டு தூங்கும் கொழுஞ் சுளைப் பெரும் பழம் |
||
குழவிச் சேதா மாந்தி, அயலது |
||
5 |
வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும் |
|
பெருங் கல் வேலிச் சிறுகுடி யாது?' என, |
||
சொல்லவும் சொல்லீர்; ஆயின், கல்லென |
||
கருவி மா மழை வீழ்ந்தென, எழுந்த |
||
செங் கேழ் ஆடிய செழுங் குரற் சிறு தினைக் |
||
10 |
கொய் புனம் காவலும் நுமதோ?- |
|
கோடு ஏந்து அல்குல், நீள் தோளீரே! | உரை | |
மதி உடன்படுக்கும் தலைமகன் சொல்லியது.-கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்
|
217. குறிஞ்சி |
இசை பட வாழ்பவர் செல்வம் போலக் |
||
காண் தொறும் பொலியும், கதழ் வாய் வேழம், |
||
இருங் கேழ் வயப் புலி வெரீஇ, அயலது |
||
கருங் கால் வேங்கை ஊறுபட மறலி, |
||
5 |
பெருஞ் சினம் தணியும் குன்றநாடன் |
|
நனி பெரிது இனியனாயினும், துனி படர்ந்து |
||
ஊடல் உறுவேன்-தோழி!-நீடு |
||
புலம்பு சேண் அகல நீக்கி, |
||
புலவி உணர்த்தல் வன்மையானே. | உரை | |
தலைமகள் வாயில் மறுத்தது.-கபிலர்.
|
220. குறிஞ்சி |
சிறு மணி தொடர்ந்து, பெருங் கச்சு நிறீஇ, |
||
குறு முகிழ் எருக்கங் கண்ணி சூடி, |
||
உண்ணா நல் மாப் பண்ணி, எம்முடன் |
||
மறுகுடன் திரிதரும் சிறு குறுமாக்கள், |
||
5 |
பெரிதும் சான்றோர்மன்ற-விசிபிணி |
|
முழவுக் கண் புலரா விழவுடை ஆங்கண், |
||
'ஊரேம்' என்னும் இப் பேர் ஏமுறுநர் |
||
தாமே ஒப்புரவு அறியின், 'தேமொழிக் |
||
கயல் ஏர் உண்கண் குறுமகட்கு |
||
10 |
அயலோர் ஆகல்' என்று எம்மொடு படலே! | உரை |
குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது. பின்னின்ற தலைமகன் தோழி கேட்பத் தலைமகளை ஓம்படுத்ததூஉம் ஆம்.தான் ஆற்றானாய்ச் சொல்லியதூஉம் ஆம்.-குண்டுகட்பாலியாதனார்
|
222. குறிஞ்சி |
கருங் கால் வேங்கைச் செவ் வீவாங்கு சினை |
||
வடுக் கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக் |
||
கை புனை சிறு நெறி வாங்கி, பையென, |
||
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப, யான் இன்று, |
||
5 |
பசுங் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கிச் |
|
செலவுடன் விடுகோ-தோழி!-பலவுடன் |
||
வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில், |
||
துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட, காணாது, |
||
பெருங் களிறு பிளிறும் சோலை அவர் |
||
10 |
சேண் நெடுங் குன்றம் காணிய நீயே? | உரை |
தோழி, தலைமகன் வரவு உணர்ந்து, சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.-கபிலர்
|
225. குறிஞ்சி |
முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப் |
||
பொருத யானை வெண் கோடு கடுப்ப, |
||
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை, |
||
மெல் இயல் மகளிர் ஓதி அன்ன |
||
5 |
பூவொடு, துயல் வரும் மால் வரை நாடனை |
|
இரந்தோர் உளர்கொல்-தோழி!-திருந்து இழைத் |
||
தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப் |
||
பயந்து எழு பருவரல் தீர, |
||
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே? | உரை | |
வன்புறை எதிர் அழிந்தது; பரத்தை தலைமகட்குப் பாங்காயின வாயில் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்.-கபிலர்
|
228. குறிஞ்சி |
என் எனப்படுமோ-தோழி!-மின்னு வசிபு |
||
அதிர் குரல் எழிலி, முதிர் கடன் தீர, |
||
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடு நாள், |
||
பண்பு இல் ஆர் இடை வரூஉம் நம் திறத்து |
||
5 |
அருளான்கொல்லோ தானே-கானவன் |
|
சிறு புறம் கடுக்கும் பெருங் கை வேழம், |
||
வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇ, |
||
அழுந்துபட விடரகத்து இயம்பும் |
||
எழுந்து வீழ் அருவிய மலை கிழவோனே? | உரை | |
தோழி, சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்பச் சொல்லியது.-முடத்திருமாறனார்
|
232. குறிஞ்சி |
சிறு கண் யானைப் பெருங் கை ஈர்-இனம் |
||
குளவித் தண் கயம் குழையத் தீண்டி, |
||
சோலை வாழை முணைஇ, அயலது |
||
வேரல் வேலிச் சிறுகுடி அலற, |
||
5 |
செங் காற் பலவின் தீம் பழம் மிசையும் |
|
மா மலை நாட!-காமம் நல்கென |
||
வேண்டுதும்-வாழிய! எந்தை, வேங்கை |
||
வீ உக வரிந்த முன்றில், |
||
கல் கெழு பாக்கத்து அல்கினை செலினே. | உரை | |
பகல் வருவானை இரவு வா எனத் தோழி சொல்லியது.-முதுவெங்கண்ணனார்
|
233. குறிஞ்சி |
கல்லாக் கடுவன் நடுங்க, முள் எயிற்று |
||
மட மா மந்தி மாணா வன் பறழ், |
||
கோடு உயர் அடுக்கத்து, ஆடு மழை ஒளிக்கும் |
||
பெருங் கல் நாடனை அருளினை ஆயின், |
||
5 |
இனி என கொள்ளலைமன்னே; கொன் ஒன்று |
|
கூறுவென் வாழி-தோழி!-முன்னுற |
||
நாருடை நெஞ்சத்து ஈரம் பொத்தி, |
||
ஆன்றோர் செல் நெறி வழாஅச் |
||
சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தெளிமே. | உரை | |
வரையாது நெடுங்காலம் வந்து ஒழுக, இவள் ஆற்றாள் என்பது உணர்ந்து, சிறைப் புறமாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது.-அஞ்சில் ஆந்தையார்
|
234. குறிஞ்சி |
சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது |
||
வான் தோய்வு அன்ன குடிமையும் நோக்கித் |
||
திரு மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள் |
||
வரு முலை ஆகம் வழங்கினோ நன்றே |
||
5 |
அஃது ஆன்று |
|
அடை பொருள் கருதுவிர் ஆயின் குடையொடு |
||
கழுமலம் தந்த நல் தேர்ச் செம்பியன் |
||
பங்குனி விழவின் உறந்தையொடு |
||
உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே. | உரை | |
செவிலியால் அறத்தொடு நிற்கப்பட்ட நற்றாய், தந்தை முதலியோர்க்கு அறத்தொடு நின்றது.
|
236. குறிஞ்சி |
நோயும் கைம்மிகப் பெரிதே; மெய்யும் |
||
தீ உமிழ் தெறலின் வெய்தாகின்றே- |
||
ஒய்யெனச் சிறிது ஆங்கு உயிரியர், 'பையென |
||
முன்றில் கொளினே நந்துவள் பெரிது' என, |
||
5 |
நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு |
|
உரை, இனி-வாழி, தோழி!-புரை இல் |
||
நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து |
||
அண்ணல் நெடு வரை ஆடி, தண்ணென |
||
வியல் அறை மூழ்கிய வளி என் |
||
10 |
பயலை ஆகம் தீண்டிய, சிறிதே. | உரை |
தலைமகன் சிறைப்புறமாக, வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.-நம்பி குட்டுவன்
|
244. குறிஞ்சி |
விழுந்த மாரிப் பெருந் தண் சாரல், |
||
கூதிர்க் கூதளத்து அலரி நாறும் |
||
மாதர் வண்டின் நயவரும் தீம் குரல் |
||
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் |
||
5 |
உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ- |
|
துயர் மருங்கு அறியா அன்னைக்கு, இந் நோய் |
||
தணியுமாறு இது' என உரைத்தல் ஒன்றோ- |
||
செய்யாய்: ஆதலின் கொடியை-தோழி!- |
||
மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த |
||
10 |
செயலை அம் தளிர் அன்ன, என் |
|
மதன் இல் மா மெய்ப் பசலையும் கண்டே. | உரை | |
அறத்தொடுநிலை வலித்த தோழியைத் தலைவி முகம் புக்கது.-கூற்றங்குமரனார்
|
247. குறிஞ்சி |
தொன்று படு துப்பொடு முரண் மிகச் சினைஇக் |
||
கொன்ற யானைச் செங் கோடு கழாஅ, |
||
அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி, |
||
எஃகுறு பஞ்சிற்று ஆகி, வைகறைக் |
||
5 |
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட! நீ |
|
நல்காய்ஆயினும், நயன் இல செய்யினும், |
||
நின் வழிப்படூஉம் என் தோழி நல் நுதல் |
||
விருந்து இறைகூடிய பசலைக்கு |
||
மருந்து பிறிது இன்மை நன்கு அறிந்தனை சென்மே! | உரை | |
'நீட்டியாமை வரை' எனத் தோழி சொல்லியது.-பரணர்
|
251. குறிஞ்சி |
நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண், |
||
பிணி முதல் அரைய பெருங் கல் வாழைக் |
||
கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும் |
||
நல் மலை நாடனை நயவா, யாம், அவன் |
||
5 |
நனி பேர் அன்பின், நின் குரல் ஓப்பி, |
|
நின் புறங்காத்தலும் காண்போய், நீ? என் |
||
தளிர் ஏர் மேனித் தொல் கவின் அழிய, |
||
பலி பெறு கடவுட் பேணி, கலி சிறந்து, |
||
நுடங்கு நிலைப் பறவை உடங்கு பீள் கவரும்; |
||
10 |
தோடு இடம் கோடாய், கிளர்ந்து, |
|
நீடினை விளைமோ! வாழிய, தினையே! | உரை | |
சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-மதுரைப் பெருமருதிள நாகனார்
|
253. குறிஞ்சி |
புள்ளுப் பதி சேரினும், புணர்ந்தோர்க் காணினும், |
||
பள்ளி யானையின் வெய்ய உயிரினை, |
||
கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்து |
||
எனவ கேளாய், நினையினை, நீ நனி: |
||
5 |
உள்ளினும் பனிக்கும்-ஒள் இழைக் குறுமகள், |
|
பேர் இசை உருமொடு மாரி முற்றிய, |
||
பல் குடைக் கள்ளின் வண் மகிழ்ப் பாரி, |
||
பலவு உறு குன்றம் போல, |
||
பெருங் கவின் எய்திய அருங் காப்பினளே. | உரை | |
செறிப்பு அறிவிறீஇ வரைவு கடாயது.-கபிலர்
|
255. குறிஞ்சி |
கழுது கால் கிளர ஊர் மடிந்தன்றே; |
||
உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி, |
||
கடியுடை வியல் நகர்க் கானவர் துஞ்சார்; |
||
வயக் களிறு பொருத வாள் வரி உழுவை |
||
5 |
கல் முகைச் சிலம்பில் குழுமும்; அன்னோ!- |
|
மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும், இன்று அவர் |
||
வாரார்ஆயினோ நன்றுமன்தில்ல- |
||
உயர் வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னிப் |
||
பெயல் கால்மயங்கிய பொழுது கழி பானாள், |
||
10 |
திருமணி அரவுத் தேர்ந்து உழல, |
|
உருமுச் சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே! | உரை | |
ஆறு பார்த்து உற்றது.-ஆலம்பேரி சாத்தனார்
|
257. குறிஞ்சி |
விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரைஇ, |
||
மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின், |
||
கழை அமல்பு நீடிய வான் உயர் நெடுங் கோட்டு |
||
இலங்கு வெள் அருவி வியன் மலைக் கவாஅன்- |
||
5 |
அரும்பு வாய் அவிழ்ந்த கருங் கால் வேங்கைப் |
|
பொன் மருள் நறு வீ கல்மிசைத் தாஅம் |
||
நல் மலை நாட!-நயந்தனை அருளாய், |
||
இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறிக் |
||
கடு மா வழங்குதல் அறிந்தும், |
||
10 |
நடு நாள் வருதி; நோகோ யானே. | உரை |
தோழி தலைமகனது ஏதம் சொல்லி வரைவு கடாயது.-வண்ணக்கன் சோருமருங்குமரனார்
|
259. குறிஞ்சி |
யாங்குச் செய்வாம்கொல்-தோழி!-பொன் வீ |
||
வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல், |
||
பெருங் கல் நாடனொடு இரும் புனத்து அல்கி, |
||
செவ் வாய்ப் பைங் கிளி ஓப்பி, அவ் வாய்ப் |
||
5 |
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி, |
|
சாரல் ஆரம் வண்டு பட நீவி, |
||
பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி |
||
அரிய போலக் காண்பேன்-விரி திரைக் |
||
கடல் பெயர்ந்தனைய ஆகி, |
||
10 |
புலர் பதம் கொண்டன ஏனற் குரலே? | உரை |
தோழி தலைமகளைச் செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது.-கொற்றங் கொற்றனார்
|
261. குறிஞ்சி |
அருளிலர்வாழி-தோழி!-மின்னு வசிபு |
||
இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு |
||
வெஞ் சுடர் கரந்த கமஞ் சூல் வானம், |
||
நெடும் பல் குன்றத்துக் குறும் பல மறுகி, |
||
5 |
தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து, |
|
களிறு அகப்படுத்த பெருஞ் சின மாசுணம் |
||
வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும் |
||
சாந்தம் போகிய தேம் கமழ் விடர் முகை, |
||
எருவை நறும் பூ நீடிய |
||
10 |
பெரு வரைச் சிறு நெறி வருதலானே. | உரை |
சிறைப்புறமாகத் தோழி இரவுக்குறி விலக்கி வரைவு கடாயது;தலைமகள் இயற்பட மொழிந்ததூஉம் ஆம்.-சேந்தன் பூதனார்
|
265. குறிஞ்சி |
இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல் |
||
அள்ளல் ஆடிய புள்ளி வரிக் கலை |
||
வீளை அம்பின் வில்லோர் பெருமகன், |
||
பூந் தோள் யாப்பின் மிஞிலி, காக்கும் |
||
5 |
பாரத்து அன்ன-ஆர மார்பின் |
|
சிறு கோற் சென்னி ஆரேற்றன்ன- |
||
மாரி வண் மகிழ் ஓரி கொல்லிக் |
||
கலி மயில் கலாவத்து அன்ன, இவள் |
||
ஒலி மென் கூந்தல் நம் வயினானே. | உரை | |
268. குறிஞ்சி |
சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க, |
||
மால் பெயல் தலைஇய மன் நெடுங் குன்றத்து, |
||
கருங் காற் குறிஞ்சி மதன் இல் வான் பூ, |
||
ஓவுக் கண்டன்ன இல்வரை இழைத்த |
||
5 |
நாறு கொள் பிரசம் ஊறு நாடற்குக் |
|
காதல் செய்தவும் காதலன்மை |
||
யாதனிற்கொல்லோ?- தோழி!- வினவுகம், |
||
பெய்ம் மணல் முற்றம் கடி கொண்டு |
||
மெய்ம் மலி கழங்கின் வேலற் தந்தே. | உரை | |
தலைமகட்குச் சொல்லியது; தலைமகன் வந்தொழுகவும் வேறுபாடு கண்டாள், 'அவன் வருவானாகவும் நீ வேறுபட்டாய், வெறி எடுத்துக் கொள்ளும் வகையான்' என்றதூஉம் ஆம்.-வெறி பாடிய காமக்கண்ணியார்
|
273. குறிஞ்சி |
இஃது எவன்கொல்லோ- தோழி!-மெய் பரந்து |
||
எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம் |
||
வெம்மையின் தான் வருத்துறீஇ, நம் வயின் |
||
அறியாது அயர்ந்த அன்னைக்கு, 'வெறி' என, |
||
5 |
வேலன் உரைக்கும் என்ப: ஆகலின், |
|
வண்ணம் மிகுந்த அண்ணல் யானை |
||
நீர் கொள் நெடுஞ் சுனை அமைந்து, வார்ந்து உறைந்து, என் |
||
கண் போல் நீலம் தண் கமழ் சிறக்கும் |
||
குன்ற நாடனை உள்ளுதொறும், |
||
10 |
நெஞ்சு நடுக்குறூஉம், அவன் பண்பு தரு படரே? | உரை |
தோழி தலைமகனது வரவு உணர்ந்து தலைமகட்கு உரைப்பாளாய், 'நின் வேறுபாடு தாய்க்குப் புலனாக, அவள் வேலனைக் கூவி வெறி அயரும்' என்பது படச் சொல்லியது.-மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
|
276. குறிஞ்சி |
'கோடு துவையா, கோள் வாய் நாயொடு |
||
காடு தேர்ந்து அசைஇய வய மான் வேட்டு |
||
வயவர் மகளிர்' என்றிஆயின், |
||
குறவர் மகளிரேம்; குன்று கெழு கொடிச்சியேம்; |
||
5 |
சேணோன் இழைத்த நெடுங் காற் கழுதில் |
|
கான மஞ்ஞை கட்சி சேக்கும் |
||
கல் அகத்தது எம் ஊரே; செல்லாது |
||
சேந்தனை, சென்மதி நீயே-பெரு மலை |
||
வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு, |
||
10 |
வேங்கை முன்றில் குரவையும் கண்டே. | உரை |
பகற்குறி வந்து பெயரும் தலைமகனை உலகியல் சொல்லியது.-தொல் கபிலர்
|
282. குறிஞ்சி |
தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழ, |
||
கோடு ஏந்து அல்குல் அவ் வரி வாட, |
||
நல் நுதல் சாய, படர் மலி அரு நோய் |
||
காதலன் தந்தமை அறியாது, உணர்த்த, |
||
5 |
அணங்குறு கழங்கின் முது வாய் வேலன் |
|
கிளவியின் தணியின், நன்றுமன்-சாரல் |
||
அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை, |
||
ஆடு மழை மங்குலின், மறைக்கும் |
||
நாடு கெழு வெற்பனொடு அமைந்த, நம் தொடர்பே? | உரை | |
சிறைப்புறமாகத் தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.-நல்லூர்ச் சிறு மேதாவியார்
|
285. குறிஞ்சி |
அரவு இரை தேரும் ஆர் இருள் நடு நாள் |
||
இரவின் வருதல் அன்றியும்-உரவுக் கணை |
||
வன் கைக் கானவன் வெஞ் சிலை வணக்கி, |
||
உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு, |
||
5 |
மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட, |
|
வேட்டு வலம் படுத்த உவகையன், காட்ட |
||
நடு காற் குரம்பைத் தன் குடிவயிற் பெயரும் |
||
குன்ற நாடன் கேண்மை நமக்கே |
||
நன்றால் வாழி-தோழி!-என்றும், |
||
10 |
அயலோர் அம்பலின் அகலான், |
|
பகலின் வரூஉம், எறி புனத்தானே. | உரை | |
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்ப, 'அம்ப லும் அலரும் ஆயிற்று' என்று சொல்லியது.- மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
|
288. குறிஞ்சி |
அருவி ஆர்க்கும் அணங்குடை நெடுங் கோட்டு |
||
ஞாங்கர், இள வெயில் உணீஇய, ஓங்கு சினைப் |
||
பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும் |
||
குன்ற நாடன் பிரிவின் சென்று, |
||
5 |
நல் நுதல் பரந்த பசலை கண்டு, அன்னை |
|
செம் முது பெண்டிரொடு நெல் முன் நிறீஇ, |
||
கட்டின் கேட்கும்ஆயின், வெற்பில் |
||
ஏனற் செந் தினைப் பால் ஆர் கொழுங் குரற் |
||
சிறு கிளி கடிகம் சென்றும், 'இந் |
||
10 |
நெடு வேள் அணங்கிற்று' என்னும்கொல் அதுவே? | உரை |
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய், வெறி அறிவுறீஇ வரைவு கடா யது.-குளம்பனார்
|
292. குறிஞ்சி |
நெடுந் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த |
||
பசுங் கேழ் இலைய நறுங் கொடித் தமாலம் |
||
தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும், |
||
யாணர் வைப்பின், கானம் என்னாய்; |
||
5 |
களிறு பொரக் கரைந்த கயவாய்க் குண்டு கரை |
|
ஒளிறு வான் பளிங்கொடு செம் பொன் மின்னும் |
||
கருங் கற் கான்யாற்று அருஞ் சுழி வழங்கும் |
||
கராஅம் பேணாய்; இரவரின், |
||
வாழேன்-ஐய!-மை கூர் பனியே! | உரை | |
இரவுக்குறி மறுத்தது.- நல்வேட்டனார்
|
294. குறிஞ்சி |
தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு, |
||
நோயும் இன்பமும் ஆகின்றுமாதோ; |
||
மாயம் அன்று-தோழி!-வேய் பயின்று, |
||
எருவை நீடிய பெரு வரைஅகம்தொறும், |
||
5 |
தொன்று உறை துப்பொடு முரண் மிகச் சினைஇக் |
|
கொன்ற யானைக் கோடு கண்டன்ன, |
||
செம் புடைக் கொழு முகை அவிழ்ந்த காந்தள் |
||
சிலம்புடன் கமழும் சாரல் |
||
இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே! | உரை | |
மணமனையுள் புக்க தோழி தலைமகளது கவின் கண்டு சொல்லியது.- புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான்
|
297. குறிஞ்சி |
பொன் செய் வள்ளத்துப் பால் கிழக்கு இருப்ப, |
||
நின் ஒளி எறியச் சேவடி ஒதுங்காய்; |
||
பல் மாண் சேக்கைப் பகை கொள நினைஇ, |
||
மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை; |
||
5 |
'எவன்கொல்?' என்று நினைக்கலும் நினைத்திலை; |
|
நின்னுள் தோன்றும் குறிப்பு நனி பெரிதே; |
||
சிதர் நனை முணைஇய சிதர் கால் வாரணம் |
||
முதிர் கறி யாப்பின் துஞ்சும் நாடன் |
||
மெல்ல வந்து, நல் அகம் பெற்றமை |
||
10 |
மையல் உறுகுவள், அன்னை; |
|
ஐயம் இன்றிக் கடுங் கவவினளே. | உரை | |
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய், தலைமகன் கேட்பச் சொல்லி யது; தோழி தலைமகளை அறத்தொடுநிலை வலிப்பித்ததூஉம் ஆம்.- மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
|
301. குறிஞ்சி |
'நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி |
||
நாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனை |
||
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண், |
||
மயில் ஓரன்ன சாயல், செந் தார்க் |
||
5 |
கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள், |
|
பாவை அன்ன வனப்பினள் இவள்' என, |
||
காமர் நெஞ்சமொடு பல பாராட்டி, |
||
யாய் மறப்பு அறியா மடந்தை- |
||
தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே. | உரை | |
சேட்படுத்து, 'பிரிவின்கண் அன்பின் இயற்கையில் தகுவகையதோர் ஆற்றாமையி னான்' என்று, தோழி தன்னுள்ளே சொல்லியது.-பாண்டியன் மாறன் வழுதி
|
304. குறிஞ்சி |
வாரல் மென் தினைப் புலர்வுக் குரல் மாந்தி, |
||
சாரல் வரைய கிளைஉடன் குழீஇ, |
||
வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும் |
||
நளி இருஞ் சிலம்பின் நல் மலை நாடன் |
||
5 |
புணரின், புணருமார் எழிலே; பிரியின், |
|
மணி மிடை பொன்னின் மாமை சாய, என் |
||
அணி நலம் சிதைக்குமார் பசலை; அதனால், |
||
அசுணம் கொல்பவர் கை போல், நன்றும், |
||
இன்பமும் துன்பமும் உடைத்தே, |
||
10 |
தண் கமழ் நறுந் தார் விறலோன் மார்பே. | உரை |
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் மொழிந்தது.- மாறோக்கத்து நப்பசலையார்
|
306. குறிஞ்சி |
தந்தை வித்திய மென் தினை பைபயச் |
||
சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ- |
||
'குளிர் படு கையள் கொடிச்சி செல்க' என, |
||
நல்ல இனிய கூறி, மெல்லக் |
||
5 |
கொயல் தொடங்கினரே கானவர்; கொடுங் குரல் |
|
சூற் பொறை இறுத்த கோல் தலை இருவி |
||
விழவு ஒழி வியன் களம் கடுப்பத் தெறுவர, |
||
பைதல் ஒரு நிலை காண வைகல் |
||
யாங்கு வருவதுகொல்லோ-தீம் சொல் |
||
10 |
செறி தோட்டு எல் வளைக் குறுமகள் |
|
சிறு புனத்து அல்கிய பெரும் புற நிலையே? | உரை | |
புனம் மடிவு உரைத்துச் செறிப்பு அறிவுறீஇயது; சிறைப்புறமும் ஆம்.- உரோடோகத்துக் கந்தரத்தனார்
|
309. குறிஞ்சி |
நெகிழ்ந்த தோளும், வாடிய வரியும், |
||
தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி, |
||
'யான் செய்தன்று இவள் துயர்' என, அன்பின் |
||
ஆழல்; வாழி!-தோழி!-'வாழைக் |
||
5 |
கொழு மடல் அகல் இலைத் தளி தலைக் கலாவும், |
|
பெரு மலை நாடன் கேண்மை நமக்கே |
||
விழுமமாக அறியுநர் இன்று' என, |
||
கூறுவைமன்னோ, நீயே; |
||
தேறுவன்மன் யான், அவருடை நட்பே. | உரை | |
'வரைவு நீட ஆற்றாள்' எனக் கவன்று தான் ஆற்றாளாகிய தோழியைத் தலைமகள் ஆற்றுவித்தது.-கபிலர்
|
313. குறிஞ்சி |
கருங் கால் வேங்கை நாள் உறு புதுப் பூ, |
||
பொன் செய் கம்மியன் கைவினை கடுப்ப, |
||
தகை வனப்புற்ற, கண்ணழி கட்டழித்து, |
||
ஒலி பல் கூந்தல் அணி பெறப் புனைஇ, |
5 |
காண்டற் காதல் கைம்மிக கடீஇயாற்கு |
யாங்கு ஆகுவம்கொல்?-தோழி!-காந்தள் |
||
கமழ் குலை அவிழ்ந்த நயவருஞ் சாரல் |
||
கூதள நறும் பொழில் புலம்ப, ஊர்வயின் |
||
மீள்குவம் போலத் தோன்றும்-தோடு புலர்ந்து |
||
10 |
அருவியின் ஒலித்தல் ஆனா, |
|
கொய்பதம் கொள்ளும், நாம் கூஉம் தினையே. | உரை | |
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய், புனம் அழிவு உரைத்து,செறிப்பு அறிவுறீஇயது.-தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
|
317. குறிஞ்சி |
நீடு இருஞ் சிலம்பின் பிடியொடு புணர்ந்த |
||
பூம் பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்ப, |
||
தோடு தலை வாங்கிய நீடு குரற் பைந் தினை, |
||
பவளச் செவ் வாய்ப் பைங் கிளி கவரும் |
||
5 |
உயர் வரை நாட! நீ நயந்தோள் கேண்மை |
|
அன்னை அறிகுவள்ஆயின், பனி கலந்து |
||
என் ஆகுவகொல்தானே-எந்தை |
||
ஓங்கு வரைச் சாரல் தீம் சுனை ஆடி, |
||
ஆயமொடு குற்ற குவளை |
||
10 |
மா இதழ் மா மலர் புரைஇய கண்ணே? | உரை |
தோழி, தலைமகனை வரைவு கடாயது.-மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
|
322. குறிஞ்சி |
ஆங்கனம் தணிகுவதுஆயின், யாங்கும் |
||
இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை; |
||
வாய்கொல் வாழி-தோழி! வேய் உயர்ந்து, |
||
எறிந்து செறித்தன்ன பிணங்கு அரில் விடர் முகை, |
||
5 |
ஊன் தின் பிணவின் உயங்கு பசி களைஇயர், |
|
ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி, வாள் வரிக் |
||
கடுங் கண் வயப் புலி ஒடுங்கும் நாடன் |
||
தண் கமழ் வியல் மார்பு உரிதினின் பெறாது, |
||
நல் நுதல் பசந்த படர் மலி அரு நோய் |
||
10 |
அணங்கு என உணரக் கூறி, வேலன் |
|
இன் இயம் கறங்கப் பாடி, |
||
பல் மலர் சிதறிப் பரவுறு பலிக்கே. | உரை | |
தோழி சிறைப்புறமாகச் சொல்லியது; தலைமகள், பாங்கிக்கு உரைத்ததூஉம் ஆம்.-மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனார்
|
324. குறிஞ்சி |
அந்தோ! தானே அளியள் தாயே; |
||
நொந்து அழி அவலமொடு என் ஆகுவள்கொல், |
||
பொன் போல் மேனித் தன் மகள் நயந்தோள்?- |
||
கோடு முற்று யானை காடுடன் நிறைதர, |
||
5 |
நெய் பட்டன்ன நோன் காழ் எஃகின் |
|
செல்வத் தந்தை இடனுடை வரைப்பின், |
||
ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி, |
||
அம் சில் ஓதி இவள் உறும் |
||
பஞ்சி மெல் அடி நடைபயிற்றும்மே! | உரை | |
தலைமகன், பாங்கற்குச் சொல்லியது; இடைச் சுரத்துக் கண்டோர் சொல்லியதூஉம் ஆம்.- கயமனார்
|
326. குறிஞ்சி |
கொழுஞ் சுளைப் பலவின் பயம் கெழு கவாஅன், |
||
செழுங் கோள் வாங்கிய மாச் சினைக் கொக்கினம் |
||
மீன் குடை நாற்றம் தாங்கல்செல்லாது, |
||
துய்த் தலை மந்தி தும்மும் நாட! |
||
5 |
நினக்கும் உரைத்தல் நாணுவல்-இவட்கே |
|
நுண் கொடிப் பீரத்து ஊழ் உறு பூ எனப் |
||
பசலை ஊரும் அன்னோ; பல் நாள் |
||
அரி அமர் வனப்பின் எம் கானம் நண்ண, |
||
வண்டு எனும் உணராவாகி, |
||
10 |
மலர் என மரீஇ வரூஉம், இவள் கண்ணே. | உரை |
தோழி, தலைமகனை வரைவுகடாயது.-மதுரை மருதன் இளநாகனார்
|
328. குறிஞ்சி |
கிழங்கு கீழ் வீழ்ந்து, தேன் மேல் தூங்கி, |
||
சிற்சில வித்திப் பற்பல விளைந்து, |
||
தினை கிளி கடியும் பெருங் கல் நாடன் |
||
பிறப்பு ஓரன்மை அறிந்தனம்: அதனால், |
||
5 |
அது இனி வாழி-தோழி!-ஒரு நாள், |
|
சிறு பல் கருவித்து ஆகி, வலன் ஏர்பு, |
||
பெரும் பெயல் தலைக, புனனே!-இனியே, |
||
எண் பிழி நெய்யொடு வெண் கிழி வேண்டாது |
||
சாந்து தலைக்கொண்ட ஓங்கு பெருஞ் சாரல், |
||
10 |
விலங்கு மலை அடுக்கத்தானும், |
|
கலம் பெறு விறலி ஆடும் இவ் ஊரே. | உரை | |
தோழி வரைவிடை ஆற்றாளாகிய தலைமகளை வற்புறுத்தது.-தொல் கபிலர்
|
332. குறிஞ்சி |
இகுளை தோழி! இஃது என் எனப்படுமோ- |
||
'குவளை குறுநர் நீர் வேட்டாங்கு, |
||
நாளும்நாள் உடன் கவவவும், தோளே |
||
தொல் நிலை வழீஇய நின் தொடி' எனப் பல் மாண் |
||
5 |
உரைத்தல் ஆன்றிசின், நீயே: விடர் முகை, |
|
ஈன் பிணவு ஒடுக்கிய இருங் கேழ் வயப் புலி |
||
இரை நசைஇப் பரிக்கும் மலைமுதல் சிறு நெறி, |
||
தலைநாள் அன்ன பேணலன், பல நாள், |
||
ஆர் இருள் வருதல் காண்பேற்கு, |
||
10 |
யாங்கு ஆகும்மே, இலங்கு இழை செறிப்பே? | உரை |
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி களவுக் காலத்து வற்புறுப்ப,தலைவி கூறியது; வன்புறை எதிர்மறுத்ததூஉம் ஆம்.-குன்றூர்கிழார் மகன் கண்ணத்தனார்
|
334. குறிஞ்சி |
கரு விரல் மந்திச் செம் முகப் பெருங் கிளை |
||
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி, |
||
ஓங்கு கழை ஊசல் தூங்கி, வேங்கை |
||
வெற்பு அணி நறு வீ கற்சுனை உறைப்ப, |
||
5 |
கலையொடு திளைக்கும் வரைஅக நாடன்- |
|
மாரி நின்ற ஆர் இருள் நடு நாள், |
||
அருவி அடுக்கத்து, ஒரு வேல் ஏந்தி; |
||
மின்னு வசி விளக்கத்து வருமெனின், |
||
என்னோ-தோழி!-நம் இன் உயிர் நிலையே? | உரை | |
தோழி இரவுக்குறி முகம் புக்கது.
|
336. குறிஞ்சி |
பிணர்ச் சுவற் பன்றி தோல்முலைப் பிணவொடு |
||
கணைக் கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின், |
||
கல் அதர் அரும் புழை அல்கி, கானவன், |
||
வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை, |
||
5 |
புனை இருங் கதுப்பின் மனையோள் கெண்டி, |
|
குடி முறை பகுக்கும் நெடு மலை நாட! |
||
உரவுச் சின வேழம் உறு புலி பார்க்கும் |
||
இரவின் அஞ்சாய்; அஞ்சுவல்-அரவின் |
||
ஈர் அளைப் புற்றம், கார் என முற்றி, |
||
10 |
இரை தேர் எண்கினம் அகழும் |
|
வரை சேர் சிறு நெறி வாராதீமே! | உரை | |
ஆறு பார்த்துற்றுச்சொல்லியது.-கபிலர்
|
339. குறிஞ்சி |
'தோலாக் காதலர் துறந்து நம் அருளார்; |
||
அலர்வது அன்றுகொல் இது?' என்று, நன்றும் |
||
புலரா நெஞ்சமொடு புதுவ கூறி, |
||
இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம் |
||
5 |
அறிந்தனள்போலும், அன்னை-சிறந்த |
|
சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கி, |
||
நீர் அலைக் கலைஇய ஈர் இதழ்த் தொடையல் |
||
ஒள் நுதல் பெதும்பை நல் நலம் பெறீஇ, |
||
மின் நேர் ஓதி இவளொடு, நாளை, |
||
10 |
பல் மலர் கஞலிய வெறி கமழ் வேலித் |
|
தெண் நீர் மணிச் சுனை ஆடின், |
||
என்னோ மகளிர்தம் பண்பு என்றோளே? | உரை | |
சிறைப்புறமாகத் தலைவன் கேட்பச் சொல்லியது.-சீத்தலைச் சாத்தனார்
|
341. குறிஞ்சி |
வங்கா வரிப் பறைச் சிறு பாடு முணையின், |
||
செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும் |
||
விளையாடு இன் நகை அழுங்கா, பால் மடுத்து, |
||
அலையா, உலவை ஓச்சி, சில கிளையாக் |
||
5 |
குன்றக் குறவனொடு குறு நொடி பயிற்றும் |
|
துணை நன்கு உடையள், மடந்தை: யாமே |
||
வெம் பகை அரு முனைத் தண் பெயல் பொழிந்தென, |
||
நீர் இரங்கு அரை நாள் மயங்கி, கூதிரொடு |
||
வேறு புல வாடை அலைப்ப, |
||
10 |
துணை இலேம், தமியேம், பாசறையேமே. | உரை |
வினைவயிற் பிரிந்து ஆற்றானாகிய தலைமகன் சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார்
|
344. குறிஞ்சி |
அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்ட |
||
மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல் |
||
இரும் பிடித் தடக் கையின் தடைஇய பெரும் புனம் |
||
காவல் கண்ணினம்ஆயின்-ஆயிழை!- |
||
5 |
நம் நிலை இடை தெரிந்து உணரான், தன் மலை |
|
ஆரம் நீவிய அணி கிளர் ஆகம் |
||
சாரல் நீள் இடைச் சால வண்டு ஆர்ப்ப, |
||
செல்வன் செல்லும்கொல் தானே-உயர் வரைப் |
||
பெருங் கல் விடரகம் சிலம்ப, இரும் புலி |
||
10 |
களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்து, |
|
செந் தினை உணங்கல் தொகுக்கும், |
||
இன் கல் யாணர்த் தம் உறைவின் ஊர்க்கே? | உரை | |
தோழி சிறைப்புறமாகத் தலைமகன் கேட்பச் சொல்லியது.-மதுரை அறுவை வாணி கன் இளவேட்டனார்
|
347. குறிஞ்சி |
முழங்கு கடல் முகந்த கமஞ் சூல் மா மழை |
||
மாதிர நனந் தலை புதையப் பாஅய், |
||
ஓங்கு வரை மிளிர ஆட்டி, பாம்பு எறிபு, |
||
வான் புகு தலைய குன்றம் முற்றி, |
||
5 |
அழி துளி தலைஇய பொழுதில், புலையன் |
|
பேழ் வாய்த் தண்ணுமை இடம் தொட்டன்ன, |
||
அருவி இழிதரும் பெரு வரை நாடன், |
||
'நீர் அன நிலையன்; பேர் அன்பினன்' எனப் |
||
பல் மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி |
||
10 |
வேனில் தேரையின் அளிய, |
|
காண வீடுமோ-தோழி!-என் நலனே? | உரை | |
351. குறிஞ்சி |
'இளமை தீர்ந்தனள் இவள்' என வள மனை |
||
அருங்கடிப் படுத்தனை; ஆயினும், சிறந்து இவள் |
||
பசந்தனள் என்பது உணராய்; பல் நாள் |
||
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி |
||
5 |
வருந்தல் வாழி-வேண்டு, அன்னை!-கருந் தாள் |
|
வேங்கைஅம் கவட்டிடைச் சாந்தின் செய்த |
||
களிற்றுத் துப்பு அஞ்சாப் புலி அதள் இதணத்து, |
||
சிறு தினை வியன் புனம் காப்பின், |
||
பெறுகுவள்மன்னோ என் தோழி தன் நலனே. | உரை | |
தோழி அருகு அடுத்தது.-மதுரைக் கண்ணத்தனார்
|
353. குறிஞ்சி |
ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த |
||
நுணங்கு நுண் பனுவல் போல, கணம் கொள, |
||
ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை, |
||
முட முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம் |
||
5 |
கல் கெழு குறவர் காதல் மடமகள் |
|
கரு விரல் மந்திக்கு வரு விருந்து அயரும், |
||
வான் தோய் வெற்ப! சான்றோய்அல்லை-எம் |
||
காமம் கனிவதுஆயினும், யாமத்து |
||
இரும் புலி தொலைத்த பெருங் கை யானை |
||
10 |
வெஞ் சின உருமின் உரறும் |
|
அஞ்சுவரு சிறு நெறி வருதலானே. | உரை | |
தோழி ஆற்றது அருமை அஞ்சி, தான் ஆற்றாளாய்ச் சொல்லியது.- கபிலர்
|
355. குறிஞ்சி |
புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தை |
||
முலை வாய் உறுக்கும் கை போல், காந்தட் |
||
குலைவாய் தோயும் கொழு மடல் வாழை |
||
அம் மடல் பட்ட அருவித் தீம் நீர் |
||
5 |
செம் முக மந்தி ஆரும் நாட! |
|
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின், |
||
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்; |
||
அம் சில் ஓதி என் தோழி தோட் துயில் |
||
நெஞ்சின் இன்புறாய்ஆயினும், அது நீ |
||
10 |
என் கண் ஓடி அளிமதி- |
|
நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே! | உரை | |
தோழி அருகு அடுத்தது; தோழி தலைமகளது ஆற்றாமை கண்டு வரைவு கடாயதூஉம் ஆம்.
|
356. குறிஞ்சி |
நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த |
||
விலங்கு மென் தூவிச் செங் கால் அன்னம், |
||
பொன் படு நெடுங் கோட்டு இமயத்து உச்சி |
||
வான் அரமகளிர்க்கு மேவல் ஆகும் |
||
5 |
வளராப் பார்ப்பிற்கு அல்கு இரை ஒய்யும் |
|
அசைவு இல் நோன் பறை போல, செல வர |
||
வருந்தினை-வாழி, என் உள்ளம்!-ஒரு நாள் |
||
காதலி உழையளாக, |
||
குணக்குத் தோன்று வெள்ளியின், எமக்குமார் வருமே? | உரை | |
வரைவு மறுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- பரணர்
|
357. குறிஞ்சி |
நின் குறிப்பு எவனோ?-தோழி!-என் குறிப்பு |
||
என்னொடு நிலையாதுஆயினும், என்றும் |
||
நெஞ்சு வடுப்படுத்துக் கெட அறியாதே- |
||
சேண் உறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன், |
||
5 |
பெயல் உழந்து உலறிய மணிப் பொறிக் குடுமிப் |
|
பீலி மஞ்ஞை ஆலும் சோலை, |
||
அம் கண் அறைய அகல் வாய்ப் பைஞ் சுனை |
||
உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி, |
||
நீர் அலைக் கலைஇய கண்ணிச் |
||
10 |
சாரல் நாடனொடு ஆடிய நாளே. | உரை |
தலைமகன் வரைவு நீடிய இடத்து, 'ஆற்றுவல்' என்பது படச் சொல்லியது; 'மனை மருண்டு வேறுபாடாயினாய்' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.-குறமகள் குறியெயினி
|
359. குறிஞ்சி |
சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச் சேதா |
||
அலங்கு குலைக் காந்தள் தீண்டி, தாது உக, |
||
கன்று தாய் மருளும் குன்ற நாடன் |
||
உடுக்கும் தழை தந்தனனே; யாம் அஃது |
||
5 |
உடுப்பின், யாய் அஞ்சுதுமே; கொடுப்பின், |
|
கேளுடைக் கேடு அஞ்சுதுமே; ஆயிடை |
||
வாடலகொல்லோ தாமே-அவன் மலைப் |
||
போருடை வருடையும் பாயா, |
||
சூருடை அடுக்கத்த கொயற்கு அருந் தழையே? | உரை | |
தோழி தழையேற்றுக் கொண்டு நின்று தலைமகன் குறிப்பின் ஓடியது-கபிலர்
|
365. குறிஞ்சி |
அருங் கடி அன்னை காவல் நீவி, |
||
பெருங் கடை இறந்து, மன்றம் போகி, |
||
பகலே, பலரும் காண, வாய் விட்டு |
||
அகல் வயற் படப்பை அவன் ஊர் வினவி, |
||
5 |
சென்மோ வாழி-தோழி!-பல் நாள் |
|
கருவி வானம் பெய்யாதுஆயினும், |
||
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் |
||
வான் தோய் மா மலைக் கிழவனை, |
||
'சான்றோய் அல்லை' என்றனம் வரற்கே. | உரை | |
தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்கு உரைப்பாளாய் இயற்பழித்து,'இன்னது செய்தும்' என்பாளாய்ச் சொல்லியது.-கிள்ளிமங்கலம் கிழார் மகனார் சேர கோவனார்
|
368. குறிஞ்சி |
பெரும் புனம் கவரும் சிறு கிளி ஓப்பி, |
||
கருங் கால் வேங்கை ஊசல் தூங்கி, |
||
கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து, நும்மொடு |
||
ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ? |
||
5 |
நெறி படு கூழைக் கார் முதிர்பு இருந்த |
|
வெறி கமழ் கொண்ட நாற்றமும், சிறிய |
||
பசலை பாய்தரு நுதலும், நோக்கி, |
||
வறிது உகு நெஞ்சினள், பிறிது ஒன்று சுட்டி, |
||
வெய்ய உயிர்த்தனள் யாயே- |
||
10 |
ஐய!-அஞ்சினம், அளியம் யாமே! | உரை |
தோழி, தலைமகற்குச் செறிப்பு அறிவுறீஇயது.- கபிலர்
|
373. குறிஞ்சி |
முன்றிற் பலவின் படு சுளை மரீஇ, |
||
புன் தலை மந்தி தூர்ப்ப, தந்தை |
||
மை படு மால் வரை பாடினள் கொடிச்சி, |
||
ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு |
||
5 |
சூருடைச் சிலம்பின் அருவி ஆடி, |
|
கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கைப் |
||
பா அமை இதணம் ஏறி, பாசினம் |
||
வணர் குரற் சிறு தினை கடிய, |
||
புணர்வதுகொல்லோ, நாளையும் நமக்கே? | உரை | |
செறிப்பு அறிவுறீஇயது.-கபிலர்
|
376. குறிஞ்சி |
முறஞ்செவி யானைத் தடக் கையின் தடைஇ |
||
இறைஞ்சிய குரல பைந் தாட் செந் தினை, |
||
வரையோன் வண்மை போல, பல உடன் |
||
கிளையோடு உண்ணும் வளைவாய்ப் பாசினம்! |
||
5 |
குல்லை, குளவி, கூதளம், குவளை, |
|
இல்லமொடு மிடைந்த ஈர்ந் தண் கண்ணியன், |
||
சுற்று அமை வில்லன், செயலைத் தோன்றும் |
||
நல் தார் மார்பன், காண்குறின், சிறிய |
||
நன்கு அவற்கு அறிய உரைமின்; பிற்றை |
||
10 |
அணங்கும் அணங்கும் போலும்? அணங்கி, |
|
வறும் புனம் காவல் விடாமை |
||
அறிந்தனிர்அல்லிரோ, அறன் இல் யாயே? | உரை | |
தோழி, கிளிமேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-கபிலர்
|
377. குறிஞ்சி |
மடல் மா ஊர்ந்து, மாலை சூடி, |
||
கண் அகன் வைப்பின் நாடும் ஊரும் |
||
ஒள் நுதல் அரிவை நலம் பாராட்டி, |
||
பண்ணல் மேவலமாகி, அரிது உற்று, |
||
5 |
அது பிணி ஆக, விளியலம்கொல்லோ- |
|
அகல் இரு விசும்பின் அரவுக் குறைபடுத்த |
||
பசுங் கதிர் மதியத்து அகல் நிலாப் போல, |
||
அளகம் சேர்ந்த திருநுதல் |
||
கழறுபு மெலிக்கும் நோய் ஆகின்றே? | உரை | |
சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன், தோழி கேட்ப, தன்னுள்ளே சொல்லியது.-மடல் பாடிய மாதங்கீரனார்
|
379. குறிஞ்சி |
புன் தலை மந்தி கல்லா வன் பறழ் |
||
குன்று உழை நண்ணிய முன்றில் போகாது, |
||
எரி அகைந்தன்ன வீ ததை இணர |
||
வேங்கைஅம் படு சினைப் பொருந்தி, கைய |
||
5 |
தேம் பெய் தீம் பால் வௌவலின், கொடிச்சி |
|
எழுது எழில் சிதைய அழுத கண்ணே, |
||
தேர் வண் சோழர் குடந்தைவாயில் |
||
மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த, |
||
பெயல் உறு நீலம் போன்றன விரலே, |
||
10 |
பாஅய் அவ் வயிறு அலைத்தலின், ஆனாது, |
|
ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில் |
||
ஓங்கு இருஞ் சிலம்பில் பூத்த |
||
காந்தள்அம் கொழு முகை போன்றன, சிவந்தே. | உரை | |
தோழி தலைமகற்குத் தலைமகளை மடமை கூறியது; காப்புக் கைம்மிக்க காலத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம்.-குடவாயிற் கீரத்தனார்
|
383. குறிஞ்சி |
கல் அயற் கலித்த கருங் கால் வேங்கை |
||
அலங்கல்அம் தொடலை அன்ன குருளை |
||
வயப் புனிற்று இரும் பிணப் பசித்தென, வயப் புலி |
||
புகர் முகம் சிதையத் தாக்கி, களிறு அட்டு, |
||
5 |
உரும் இசை உரறும், உட்குவரு நடு நாள், |
|
அருளினை போலினும், அருளாய் அன்றே- |
||
கனை இருள் புதைத்த அஞ்சுவரும் இயவில் |
||
பாம்பு உடன்று இரிக்கும் உருமோடு, |
||
ஓங்கு வரை நாட! நீ வருதலானே. | உரை | |
தோழி ஆறு பார்த்துற்றுச் சொல்லியது.-கோளியூர்கிழார் மகனார் செழியனார்
|
386. குறிஞ்சி |
சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல், |
||
துறுகட் கண்ணிக் கானவர் உழுத |
||
குலவுக் குரல் ஏனல் மாந்தி, ஞாங்கர், |
||
விடர் அளைப் பள்ளி வேங்கை அஞ்சாது, |
||
5 |
கழை வளர் சாரல் துஞ்சும் நாடன். |
|
'அணங்குடை அருஞ் சூள் தருகுவென்' என நீ, |
||
'நும்மோர் அன்னோர் துன்னார் இவை' என, |
||
தெரிந்து அது வியந்தனென்-தோழி!-பணிந்து நம் |
||
கல் கெழு சிறுகுடிப் பொலிய, |
||
10 |
வதுவை என்று அவர் வந்த ஞான்றே. | உரை |
பரத்தையின் மறுத்தந்த தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளை முகம்புகுவல் என முற்பட்டாள், தலைமகள் மாட்டு நின்ற பொறாமை நீங்காமை அறிந்து, பிறிது ஒன்றன்மேல் வைத்து, 'பாவியேன் இன்று பேதைமை செய்தேன்; எம்பெருமாட்டி குறிப
|
389. குறிஞ்சி |
வேங்கையும் புலி ஈன்றன; அருவியும் |
||
தேம் படு நெடு வரை மணியின் மானும்; |
||
அன்னையும் அமர்ந்து நோக்கினளே, என்னையும்- |
||
களிற்று முகம் திறந்த கல்லா விழுத் தொடை |
||
5 |
ஏவல் இளையரொடு மா வழிப்பட்டென, |
|
'சிறு கிளி முரணிய பெருங் குரல் ஏனல் |
||
காவல் நீ' என்றோளே; சேவலொடு |
||
சிலம்பின் போகிய சிதர் கால் வாரணம் |
||
முதைச் சுவல் கிளைத்த பூழி, மிகப் பல |
||
10 |
நன் பொன் இமைக்கும் நாடனொடு |
|
அன்புறு காமம் அமைக நம் தொடர்பே. | உரை | |
பகற்குறி வந்து ஒழுகாநின்ற காலத்துத் தலைமகன் கேட்பச் சொல்லியது.-காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
|
393. குறிஞ்சி |
நெடுங் கழை நிவந்த நிழல் படு சிலம்பின் |
||
கடுஞ் சூல் வயப்பிடி கன்று ஈன்று உயங்க, |
||
பால் ஆர் பசும் புனிறு தீரிய, களி சிறந்து, |
||
வாலா வேழம் வணர் குரல் கவர்தலின், |
||
5 |
கானவன் எறிந்த கடுஞ் செலல் ஞெகிழி |
|
வேய் பயில் அடுக்கம் சுடர மின்னி, |
||
நிலை கிளர் மீனின், தோன்றும் நாடன் |
||
இரவின் வரூஉம் இடும்பை நாம் உய, |
||
வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப, |
||
10 |
நமர் கொடை நேர்ந்தனர்ஆயின், அவருடன், |
|
நேர்வர்கொல் வாழி-தோழி!-நம் காதலர் |
||
புதுவர் ஆகிய வரவும், நின் |
||
வதுவை நாண் ஒடுக்கமும் காணுங்காலே? | உரை | |
வரைவு மலிந்தது.-கோவூர் கிழார்
|
396. குறிஞ்சி |
பெய்து போகு எழிலி வைகு மலை சேர, |
||
தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப, |
||
வேங்கை தந்த வெற்பு அணி நல் நாள், |
||
பொன்னின் அன்ன பூஞ் சினை துழைஇ, |
||
5 |
கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை |
|
பாசறை மீமிசைக் கணம் கொள்பு, ஞாயிற்று |
||
உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன்! |
||
நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய் |
||
யார்க்கு நொந்து உரைக்கோ யானே-பல் நாள் |
||
10 |
காமர் நனி சொல் சொல்லி, |
|
ஏமம் என்று அருளாய், நீ மயங்கினையே? | உரை | |
தோழி தலைமகனை வரைவு கடாயது; வரைவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய்ச் சொல் லியதூஉம் ஆம்; இரவுக்குறி மறுத்ததூஉம் ஆம்.
|
399. குறிஞ்சி |
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து, |
||
குருதி ஒப்பின் கமழ் பூங் காந்தள் |
||
வரி அணி சிறகின் வண்டு உண மலரும் |
||
வாழை அம் சிலம்பில், கேழல் கெண்டிய |
||
5 |
நிலவரை நிவந்த பல உறு திரு மணி |
|
ஒளி திகழ் விளக்கத்து, ஈன்ற மடப் பிடி, |
||
களிறு புறங்காப்ப, கன்றொடு வதியும் |
||
மா மலை நாடன் நயந்தனன் வரூஉம் |
||
பெருமை உடையள் என்பது |
||
10 |
தருமோ-தோழி!-நின் திரு நுதல் கவினே? | உரை |
நெடுங்காலம் வந்து ஒழுக ஆற்றாமை வேறுபட நின்ற தலைமகளைத் தோழி, 'எம்பெருமான் இதற்காய நல்லது புரியும்' என்று தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது.'இதற்காய நல்லது புரியும் பெருமான் திறம் வேண்டும்' என்றாட்குத் தலைமகள் சொல
|