முகப்பு |
சிறைக்குடி ஆந்தையார் |
56. பாலை |
வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில் |
||
குளவி மொய்த்த அழுகற் சில் நீர் |
||
வளையுடைக் கையள், எம்மொடு உணீஇயர், |
||
வருகதில் அம்ம, தானே; |
||
அளியளோ அளியள், என் நெஞ்சு அமர்ந்தோளே! |
உரை | |
தலைமகன் கொண்டுதலைப் பிரிதலை மறுத்துத் தானே போகின்றவழி,இடைச்சுரத்தின் பொல்லாங்கு கண்டு, கூறியது. - சிறைக்குடி ஆந்தையார் |
57. நெய்தல் |
பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன |
||
நீர் உறை மகன்றிற் புணர்ச்சி போலப் |
||
பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு, |
||
உடன் உயிர் போகுகதில்ல - கடன் அறிந்து, |
||
இருவேம் ஆகிய உலகத்து, |
||
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே. |
உரை | |
காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.- சிறைக்குடி ஆந்தையார் |
62. குறிஞ்சி |
'கோடல், எதிர் முகைப் பசு வீ முல்லை, |
||
நாறு இதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ, |
||
ஐது தொடை மாண்ட கோதை போல, |
||
நறிய நல்லோள் மேனி |
||
முறியினும் வாய்வது; முயங்கற்கும் இனிதே. |
உரை | |
தலைமகன் இடந்தலைப்பாட்டின்கண் கூடலுறும் நெஞ்சிற்குச் சொல்லியது.- சிறைக்குடி ஆந்தையார் |
132. குறிஞ்சி |
கவவுக் கடுங்குரையள்; காமர் வனப்பினள்; |
||
குவவு மென் முலையள்; கொடிக் கூந்தலளே- |
||
யாங்கு மறந்து அமைகோ, யானே?- ஞாங்கர்க் |
||
கடுஞ் சுரை நல் ஆன் நடுங்கு தலைக் குழவி |
||
தாய் காண் விருப்பின் அன்ன, |
||
சாஅய் நோக்கினள்-மாஅயோளே, |
உரை | |
கழற்றெதிர்மறை. - சிறைக்குடி ஆந்தையார் |
168. பாலை |
மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகை |
||
இரும் பனம் பசுங் குடை பலவுடன் பொதிந்து |
||
பெரும் பெயல் விடியல் விரித்து விட்டன்ன |
||
நறுந் தண்ணியளே, நல் மா மேனி; |
||
புனற் புணை அன்ன சாய் இறைப் பணைத் தோள் |
||
மணத்தலும் தணத்தலும் இலமே; |
||
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே. |
உரை | |
பொருள் வலிக்கும் நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது - சிறைக்குடி ஆந்தையார் |
222. குறிஞ்சி |
தலைப் புணைக் கொளினே, தலைப் புணைக் கொள்ளும்; |
||
கடைப் புணைக் கொளினே, கடைப் புணைக் கொள்ளும்; |
||
புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகின், |
||
ஆண்டும் வருகுவள் போலும்-மாண்ட |
||
மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகைச் |
||
செவ் வெரிந் உறழும் கொழுங் கடை மழைக் கண் |
||
துளி தலைத் தலைஇய தளிர் அன்னோளே. |
உரை | |
பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்தது. - சிறைக்குடி ஆந்தையார் |
273. பாலை |
அல்குறு பொழுதில் தாது முகை தயங்கப் |
||
பெருங் காடு உளரும் அசைவளி போல, |
||
தண்ணிய கமழும் ஒண்ணுதலோயே! |
||
நொந்தனஆயின், கண்டது மொழிவல்; |
||
பெருந் தேன் கண்படு வரையில் முது மால்பு |
||
அறியாது ஏறிய மடவோன் போல, |
||
ஏமாந்தன்று, இவ் உலகம்; |
||
நாம் உளேம் ஆகப் பிரியலன் தெளிமே. |
உரை | |
'பிரிவர்' எனக் கவன்ற தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.- சிறைக்குடி ஆந்தையார் |
300. குறிஞ்சி |
குவளை நாறும் குவை இருங் கூந்தல், |
||
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய், |
||
குண்டு நீர்த் தாமரைக் கொங்கின் அன்ன |
||
நுண் பல் தித்தி, மாஅயோயே! |
||
நீயே, அஞ்சல்' என்ற என் சொல் அஞ்சலையே; |
||
யானே, குறுங் கால் அன்னம் குவவு மணற் சேக்கும் |
||
கடல் சூழ் மண்டிலம் பெறினும், |
||
விடல் சூழலன் யான், நின்னுடை நட்பே. |
உரை | |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சமும் வன்புறையும் கூறியது.- சிறைக்குடி ஆந்தையார் |