முகப்பு |
புலி |
47. குறிஞ்சி |
கருங் கால் வேங்கை வீ உகு துறுகல் |
||
இரும் புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை |
||
எல்லி வருநர் களவிற்கு |
||
நல்லை அல்லை-நெடு வெண்ணிலவே! |
உரை | |
இரா வந்து ஒழுகுங்காலை, முன்னிலைப் புறமொழியாக நிலவிற்கு உரைப்பாளாகத் தோழி உரைத்தது. - நெடுவெண்ணிலவினா |
88. குறிஞ்சி |
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன், |
||
சிறு கட் பெருங் களிறு வயப் புலி தாக்கித் |
||
தொல் முரண் சொல்லும் துன் அருஞ் சாரல், |
||
நடு நாள் வருதலும் வரூஉம்; |
||
வடு நாணலமே-தோழி!-நாமே. |
உரை | |
இரவுக்குறி நேர்ந்த வாய்ப்பாட்டால் தோழி தலைமகட்குச் சொல்லியது. -மதுரைக் கதக்கண்ணன் |
141. குறிஞ்சி |
வளை வாய்ச் சிறு கிளி விளை தினைக் கடீஇயர் |
||
செல்க என்றோளே, அன்னை' என, நீ |
||
சொல்லின் எவனோ?-தோழி!-'கொல்லை |
||
நெடுங் கை வன் மான் கடும் பகை உழந்த |
||
குறுங் கை இரும் புலிக் கொலை வல் ஏற்றை |
||
பைங் கட் செந்நாய் படுபதம் பார்க்கும் |
||
ஆர் இருள் நடு நாள் வருதி; |
||
சாரல் நாட, வாரலோ' எனவே. |
உரை | |
இற்செறிக்கப்பட்டுழி இரவுக்குறி வந்தொழுகும் தலைமகற்கு வரும் ஏதம் அஞ்சி,பகற்குறி நேர்ந்த வாய்பாட்டான் அதுவும் மறுத்து, சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரைப் ெ |
209. பாலை |
சுரந்தலைப்பட்ட நெல்லிஅம் பசுங் காய் |
||
மறப் புலிக் குருளை கோள் இடம் கரக்கும் |
||
இறப்பு அருங் குன்றம் இறந்த யாமே, |
||
குறு நடைப் புள் உள்ளலமே, நெறிமுதல் |
||
கடற்றில் கலித்த முடச் சினை வெட்சித் |
||
தளை அவிழ் பல் போது கமழும் |
||
மை இருங் கூந்தல் மடந்தை நட்பே. |
உரை | |
பொருள் முற்றி மறுத்தரும் தலைமகன் தோழிக்கு உரைப்பானாய்க் கிழத்தியைத் தெருட்டியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ |
215. பாலை |
படரும் பைபயப் பெயரும்; சுடரும் |
||
என்றூழ் மா மலை மறையும்; இன்று அவர் |
||
வருவர்கொல், வாழி-தோழி!-நீர் இல் |
||
வறுங் கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை |
||
குறும் பொறை மருங்கின் அமர் துணை தழீஇக் |
||
கொடு வரி இரும் புலி காக்கும் |
||
நெடு வரை மருங்கின் சுரன் இறந்தோரே. |
உரை | |
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் |
237. பாலை |
அஞ்சுவது அறியாது, அமர் துணை தழீஇ, |
||
நெஞ்சு நப்பிரிந்தன்று; ஆயினும், எஞ்சிய |
||
கை பிணி நெகிழின் அஃது எவனோ? நன்றும் |
||
சேய அம்ம, இருவாம் இடையே; |
||
மாக் கடல் திரையின் முழங்கி, வலன் ஏர்பு, |
||
கோட் புலி வழங்கும் சோலை |
||
எனைத்து என்று எண்ணுகோ-முயக்கிடை மலைவே? |
உரை | |
பொருள் முற்றி மீள்வான் தேர்ப்பாகற்கு உரைத்தது - அள்ளூர் நன்முல்லை |
253.பாலை |
கேளார் ஆகுவர்-தோழி!-கேட்பின், |
||
விழுமிது கழிவதுஆயினும், நெகிழ்நூல் |
||
பூச் சேர் அணையின் பெருங் கவின் தொலைந்த நின் |
||
நாள் துயர் கெடப் பின் நீடலர்மாதோ- |
||
ஒலி கழை நிவந்த ஓங்கு மலைச் சாரல், |
||
புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளை |
||
ஆறு செல் மாக்கள் சேக்கும் |
||
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே. |
உரை | |
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - பூங்கண்ணன் |
321. குறிஞ்சி |
மலைச் செஞ் சாந்தின் ஆர மார்பினன், |
||
சுனைப் பூங் குவளைச் சுரும்பு ஆர் கண்ணியன், |
||
நடு நாள் வந்து, நம் மனைப் பெயரும்- |
||
மடம் ஆர் அரிவை! நின் மார்பு அமர் இன் துணை; |
||
மன்ற மரையா இரிய, ஏறு அட்டு, |
||
செங் கண் இரும் புலி குழுமும்; அதனால், |
||
மறைத்தற் காலையோ அன்றே; |
||
திறப்பல் வாழி-வேண்டு, அன்னை!-நம் கதவே. |
உரை | |
தோழி கிழத்திக்கு நொதுமலர் வரையுமிடத்து அறத்தோடு நிற்பேன் என்றது. |
343. பாலை |
நினையாய் வாழி-தோழி!-நனை கவுள் |
||
அண்ணல் யானை அணி முகம் பாய்ந்தென- |
||
மிகு வலி இரு புலிப் பகுவாய் ஏற்றை- |
||
வெண் கோடு செம் மறுக் கொளீஇய, விடர் முகைக் |
||
கோடை ஒற்றிய கருங் கால் வேங்கை |
||
வாடு பூஞ் சினையின், கிடக்கும் |
||
உயர் வரை நாடனொடு பெயருமாறே. |
உரை | |
தோழி கிழத்தியை உடன்போக்கு நயப்பக் கூறியது. - ஈழத்துப் பூதன் தேவன் |