|
|
அவரோ வாரார்-முல்லையும் பூத்தன; |
|
பறியுடைக் கையர் மறியினத்து ஒழிய, |
|
பாலொடு வந்து கூழொடு பெயரும் |
|
ஆடுடை இடைமகன் சென்னிச் |
|
சூடிய எல்லாம் சிறு பசு முகையே. |
உரை |
|
பிரிவிடைப் பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது - உறையூர் முது கொற்றன் |
|
தலைப் புணைக் கொளினே, தலைப் புணைக் கொள்ளும்; |
|
கடைப் புணைக் கொளினே, கடைப் புணைக் கொள்ளும்; |
|
புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகின், |
|
ஆண்டும் வருகுவள் போலும்-மாண்ட |
|
மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகைச் |
|
செவ் வெரிந் உறழும் கொழுங் கடை மழைக் கண் |
|
துளி தலைத் தலைஇய தளிர் அன்னோளே. |
உரை |
|
பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்தது. - சிறைக்குடி ஆந்தையார் |
|
''பேர் ஊர் கொண்ட ஆர்கலி விழவில் |
|
செல்வாம் செல்வாம்'' என்றி; அன்று, இவண் |
|
நல்லோர் நல்ல பலவால் தில்ல; |
|
தழலும் தட்டையும் முறியும் தந்து, ''இவை |
|
ஒத்தன நினக்கு'' எனப் பொய்த்தன கூறி, |
|
அன்னை ஓம்பிய ஆய் நலம் |
|
என்னை கொண்டான்; யாம் இன்னமால் இனியே. |
உரை |
|
வரைவிடை வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு. வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி கூறியது. - மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகன் |
|
கவலை யாத்த அவல நீள் இடைச் |
|
சென்றோர் கொடுமை எற்றி, துஞ்சா |
|
நோயினும் நோய் ஆகின்றே-கூவற் |
|
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட |
|
உயர்திணை ஊமன் போலத் |
|
துயர் பொறுக்கல்லேன், தோழி நோய்க்கே. |
உரை |
|
பிரிவிடை ''இறந்துபடும்'' எனக் கவன்ற தோழி கேட்பக் கிழத்தி உரைத்தது.- கூவன் மைந்தன் |
|
கன்று தன் பய முலை மாந்த, முன்றில் |
|
தினை பிடி உண்ணும் பெருங் கல் நாட! |
|
கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில் |
|
வீறு பெற்று மறந்த மன்னன் போல, |
|
நன்றி மறந்து அமையாய் ஆயின், மென் சீர்க் |
|
கலி மயிற் கலாவத்தன்ன இவள் |
|
ஒலி மென் கூந்தல் உரியவால் நினக்கே. |
உரை |
|
வரைவிடை வைத்துப் பிரிவாற்குத் தோழி சொல்லியது. - கபிலர் |
|
பூவொடு புரையும் கண்ணும், வேய் என |
|
விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என |
|
மதி மயக்குறூஉம் நுதலும், நன்றும் |
|
நல்லமன்; வாழி-தோழி!-அல்கலும் |
|
தயங்கு திரை பொருத தாழை வெண் பூக் |
|
குருகு என மலரும் பெருந் துறை |
|
விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே. |
உரை |
|
வரைவிடை, ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதன் |
|
பூண் வனைந்தன்ன பொலஞ் சூட்டு நேமி |
|
வாள் முகம் துமிப்ப வள் இதழ் குறைந்த |
|
கூழை நெய்தலும் உடைத்து, இவண்- |
|
தேரோன் போகிய கானலானே. |
உரை |
|
வீழ் தாழ் தாழை ஊழுறு கொழு முகை, |
|
குருகு உளர் இறகின், விரிபு தோடு அவிழும் |
|
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில், |
|
திரை வந்து பெயரும் என்ப-நத் துறந்து |
|
நெடுஞ் சேண் நாட்டார் ஆயினும், |
|
நெஞ்சிற்கு அணியரோ, தண் கடல் நாட்டே. |
உரை |
|
கடிநகர் வேறுபடாது நன்கு ஆற்றினாய்!'' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன் |
|
இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன் |
|
புன் தலை ஓரி வாங்குநள் பரியவும், |
|
காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது, |
|
ஏதில் சிறு செரு உறுபமன்னோ! |
|
நல்லை மன்றம்ம பாலே-மெல் இயல் |
|
துணை மலர்ப் பிணையல் அன்ன இவர் |
|
மணம் மகிழ் இயற்கை காட்டியோயே. |
உரை |
|
இடைச் சுரத்துக் கண்டார் தம்முள்ளே சொல்லியது. - மோதாசனார் |
|
அம்ம வாழி, தோழி! கொண்கன்- |
|
தான் அது துணிகுவனல்லன்; யான் என் |
|
பேதைமையால் பெருந்தகை கெழுமி, |
|
நோதகச் செய்தது ஒன்று உடையேன்கொல்லோ?- |
|
வயச் சுறா வழங்கு நீர் அத்தம் |
|
தவச் சில் நாளினன் வரவு அறியானே. |
உரை |
|
வலிதாகக் குறிக் குறை நயப்பித்தது. - அறிவுடை நம்பி |
|