|
|
சுடு புன மருங்கில் கலித்த ஏனற் |
|
படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே |
|
இசையின் இசையா இன் பாணித்தே; |
|
கிளி, ''அவள் விளி'' என, விழல் ஒல்லாவே; |
|
அது புலந்து அழுத கண்ணே, சாரல் |
|
குண்டு நீர்ப் பைஞ் சுனைப் பூத்த குவளை |
|
வண்டு பயில் பல் இதழ் கலைஇ, |
|
தண துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே. |
உரை |
|
பாங்கற்கு உரைத்தது. - கபிலர் |
|
மண்ணிய சென்ற ஒள் நுதல் அரிவை |
|
புனல் தரு பசுங் காய் தின்றதன் தப்பற்கு |
|
ஒன்பதிற்று-ஒன்பது களிற்றொடு, அவள் நிறை |
|
பொன் செய் பாவை கொடுப்பவும், கொள்ளான், |
|
பெண் கொலை புரிந்த நன்னன் போல, |
|
வரையா நிரையத்துச் செலீஇயரோ, அன்னை!- |
|
ஒரு நாள், நகை முக விருந்தினன் வந்தென, |
|
பகை முக ஊரின், துஞ்சலோ இலளே. |
உரை |
|
தோழி இரவுக்குறிக்கண் சிறைப்புறமாகக் காப்பு மிகுதி சொல்லியது. - பரணர் |
|
கள்ளின் கேளிர் ஆர்த்திய, உள்ளூர்ப் |
|
பாளை தந்த பஞ்சிஅம் குறுங் காய் |
|
ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும் |
|
ஆதி அருமன் மூதூர் அன்ன, |
|
அய வெள்ளாம்பல் அம் பகை நெறித் தழை |
|
தித்திக் குறங்கின் ஊழ் மாறு அலைப்ப, |
|
வருமே சேயிழை, அந்தில் |
|
கொழுநற் காணிய; அளியேன் யானே! |
உரை |
|
பரத்தையிற் பிரிந்து வந்த கிழவற்கு வாயிலாகப் புக்க தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கள்ளில் ஆத்திரையன் |
|
கடல் உடன் ஆடியும், கானல் அல்கியும், |
|
தொடலை ஆயமொடு தழூஉஅணி அயர்ந்தும், |
|
நொதுமலர் போலக் கதுமென வந்து, |
|
முயங்கினன் செலினே, அலர்ந்தன்று மன்னே; |
|
துத்திப் பாந்தள் பைத்து அகல் அல்குல் |
|
திருந்துஇழைத் துயல்வுக் கோட்டு அசைத்த பசுங் குழைத் |
|
தழையினும், உழையின் போகான்; |
|
தான் தந்தனன், யாய் காத்து ஓம்பல்லே, |
உரை |
|
பகற்குறிக்கண் தலைமகன் வந்தவிடத்துத் தோழி செறிப்பு அறிவுறீஇயது.- அஞ்சில் ஆந்தை |
|
உடுத்தும், தொடுத்தும், பூண்டும், செரீஇயும், |
|
தழை அணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி, |
|
விழவொடு வருதி, நீயே; இஃதோ |
|
ஓர் ஆன் வல்சிச் சீர் இல் வாழ்க்கை |
|
பெரு நலக் குறுமகள் வந்தென, |
|
இனி விழவு ஆயிற்று என்னும், இவ் ஊரே. |
உரை |
|
வாயில் வேண்டிச் சென்ற கிழவற்குத் தோழி உரைத்தது. - தூங்கலோரி |
|
அம்ம வாழி-தோழி!-புன்னை |
|
அலங்குசினை இருந்த அம் சிறை நாரை |
|
உறுகழிச் சிறு மீன் முனையின், செறுவில் |
|
கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும் |
|
தண்ணம் துறைவற் காணின், முன் நின்று, |
|
கடிய கழறல் ஓம்புமதி-''தொடியோள் |
|
இன்னள் ஆகத் துறத்தல் |
|
நும்மின் தகுமோ?'' என்றனை துணிந்தே. |
உரை |
|
காணும் பொழுதிற் காணப் பொழுது பெரிதாகலான், ஆற்றாளாய தலைமகள், தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - பெரும்பாக்கன் |
|
''அவ் விளிம்பு உரீஇய கொடுஞ் சிலை மறவர் |
|
வை வார் வாளி விறற் பகை பேணார், |
|
மாறு நின்று எதிர்ந்த ஆறுசெல் வம்பலர் |
|
உவல் இடு பதுக்கை ஊரின் தோன்றும் |
|
கல் உயர் நனந் தலை, நல்ல கூறி, |
|
புணர்ந்து உடன் போதல் பொருள்'' என, |
|
உணர்ந்தேன்மன்ற, அவர் உணரா ஊங்கே. |
உரை |
|
தோழி வரைவு மலிந்தது. - காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணன். |
|
சேரி சேர மெல்ல வந்துவந்து, |
|
அரிது வாய்விட்டு இனிய கூறி, |
|
வைகல்தோறும் நிலம் பெயர்ந்து உறையும் அவன் |
|
பைதல் நோக்கம் நினையாய்-தோழி!- |
|
இன் கடுங் கள்ளின் அகுதை தந்தை |
|
வெண் கடைச் சிறுகோல் அகவன்மகளிர் |
|
மடப் பிடிப் பரிசில் மானப் |
|
பிறிது ஒன்று குறித்தது, அவன் நெடும் புறநிலையே. |
உரை |
|
கிழத்திக்குத் தோழி குறை மறாமல் கூறியது. - பரணர் |
|
இது மற்று எவனோ-தோழி! முது நீர்ப் |
|
புணரி திளைக்கும் புள் இமிழ் கானல், |
|
இணர் வீழ் புன்னை எக்கர் நீழல், |
|
புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற் |
|
கண்டனமன், எம் கண்ணே; அவன் சொல் |
|
கேட்டனமன் எம் செவியே; மற்று-அவன் |
|
மணப்பின் மாண்நலம் எய்தி, |
|
தணப்பின் ஞெகிழ்ப, எம் தட மென் தோளே? |
உரை |
|
சிறைப்புறமாகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - வெண்மணிப் பூதி |
|
குவளை நாறும் குவை இருங் கூந்தல், |
|
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய், |
|
குண்டு நீர்த் தாமரைக் கொங்கின் அன்ன |
|
நுண் பல் தித்தி, மாஅயோயே! |
|
நீயே, அஞ்சல்'' என்ற என் சொல் அஞ்சலையே; |
|
யானே, குறுங் கால் அன்னம் குவவு மணற் சேக்கும் |
|
கடல் சூழ் மண்டிலம் பெறினும், |
|
விடல் சூழலன் யான், நின்னுடை நட்பே. |
உரை |
|
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சமும் வன்புறையும் கூறியது.- சிறைக்குடி ஆந்தையார் |
|