பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
382

New Page 1

    ‘திறந்து கிடந்த வாசல்கள்தோறும் நுழைந்து திரியும் பொருள் போன்று’

பக். 112.

    ‘கெடுமரக்கலம் கரை சேர்ந்தார்போன்று’

பக். 114.

    ‘அங்கநா பரிஷ்வங்கம் போன்று’

பக். 117.

    ‘திரை மாறின கடல் போலே’

பக். 119.

    ‘கட அளவிடக் கூடாததாகவிருப்பினும் அதனுள்ளில் மீன் முதலிய பொருள்களுக்கு வேண்டினபடி புகலாமன்றே! அது போன்று’

பக். 121.

    ‘பாழிலே மேட்டிலே பாய்கிற நீரைப் பள்ளத்திலே பயிரிலே பாய்ச்சுவாரைப் போன்று’

பக். 123.

    ‘இன்பத்தில் இச்சையுடைய ஒரு பெண் தன் உடம்பில் அழுக்கினைப் போக்கித் தன் கணவனோடு இன்பம் நுகர்தற்குரிய காலத்தை எதிர் நோக்கிக்கொண்டிருத்தல் போன்று’

பக். 125.

    ‘இருகை முடவனை ‘யானையேறு’ என்றால் அவனால் ஏறப் போகாதது போன்று’

பக். 133.

    ‘அறவோர் சிலர் ஏரி கல்லினால், சேற்றிலே தலையை நொழுந்திப் பட்டுப்போகாநிற்பர் சிலர்; விடாயர் அதிலே முழுகி விடாய் தீர்ந்து போகாநிற்பர்.’

பக். 134.

    ‘ஒருவன் கறுத்திருக்க, ஒருவன் சிவந்திருக்கிறபடி கண்டாயே’

பக். 140.

    ‘கருமுகை மாலை போலே எடுத்து ஏறிட்டுக்கொண்டு போனான்

பக். 141.

    ‘பெருமாளும் பிராட்டியும் பள்ளிகொண்டருளின இடத்தை ஸ்ரீகுகப்பெருமாள் நோக்கிக்கொண்டு கிடந்தாற்போன்று’

பக். 145.

    ‘பசியர்க்குத் தாந்தாம் உண்ணும் உணவினைப் பகுந்திடுவாரைப்போன்று’

பக். 145.

    ‘பழங்கள் நிறைந்த மரத்தைப் பறவைக் கூட்டங்கள் மொய்த்துக்கொண்டு கிடந்தாற்போன்று’

பக். 145.

    ‘மோஹித்துக் கீழே வீழ்ந்த ஸ்ரீபரதாழ்வானைப் போன்று’

பக். 146.

    ‘சக்கரவர்த்தி நான்கு ஆஹூதி பண்ணி நான்கு இரத்தினங்களை எடுத்துக்கொண்டாற்போன்று’

பக். 150.