முகப்பு |
நண்டு (அலவன்) |
11. நெய்தல் |
பெய்யாது வைகிய கோதை போல |
||
மெய் சாயினை, அவர் செய் குறி பிழைப்ப; |
||
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின் |
||
வாரார் என்னும் புலவி உட்கொளல் |
||
5 |
ஒழிகமாள நின் நெஞ்சத்தானே; |
|
புணரி பொருத பூ மணல் அடைகரை, |
||
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி, |
||
வலவன் வள்பு ஆய்ந்து ஊர, |
||
நிலவு விரிந்தன்றால் கானலானே. | உரை | |
காப்பு மிகுதிக்கண்இடையீடுபட்டு ஆற்றாளாய தலைமகட்கு, தலைமகன்சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.- உலோச்சனார்
|
35. நெய்தல் |
பொங்கு திரை பொருத வார் மணல்அடைகரைப் |
||
புன் கால் நாவல் பொதிப் புற இருங் கனி |
||
கிளை செத்து மொய்த்த தும்பி, பழம் செத்துப் |
||
பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து, |
||
5 |
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் |
|
இரை தேர் நாரை எய்தி விடுக்கும் |
||
துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம் |
||
பண்டும் இற்றே; கண்டிசின்தெய்ய; |
||
உழையின் போகாது அளிப்பினும், சிறிய |
||
10 |
ஞெகிழ்ந்த கவின் நலம்கொல்லோ?-மகிழ்ந்தோர் |
|
கள்களி செருக்கத்து அன்ன |
||
காமம்கொல்?-இவள் கண் பசந்ததுவே! | உரை | |
மண மனைப்பிற்றைஞான்று புக்க தோழி, 'நன்கு ஆற்றுவித்தாய்' என்ற தலைமகற்குச் சொல்லியது.-அம்மூவனார்
|
106. நெய்தல் |
அறிதலும் அறிதியோ-பாக!-பெருங்கடல் |
||
எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொள, |
||
ஆடு வரி அலவன் ஓடுவயின் ஆற்றாது, |
||
அசைஇ, உள் ஒழிந்த வசை தீர் குறுமகட்கு |
||
5 |
உயவினென் சென்று, யான், உள் நோய் உரைப்ப, |
|
மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள், நறு மலர் |
||
ஞாழல் அம் சினைத் தாழ்இணர் கொழுதி, |
||
முறி திமிர்ந்து உதிர்த்த கையள், |
||
அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே? | உரை | |
பருவ வரவின்கண் பண்டு நிகழ்ந்ததோர் குறிப்பு உணர்ந்த தலைவன், அதனைக் கண்டு தாங்ககில்லானாய் மீள்கின்றான், தேர்ப்பாகற்குச்சொல்லியது.-தொண்டைமான் இளந்திரையன்
|
123. நெய்தல் |
உரையாய்-வாழி, தோழி!-இருங் கழி |
||
இரை ஆர் குருகின் நிரை பறைத் தொழுதி |
||
வாங்கு மடற் குடம்பை, தூங்கு இருள் துவன்றும் |
||
பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை, |
||
5 |
கானல் ஆயமொடு காலைக் குற்ற |
|
கள் கமழ் அலர தண் நறுங் காவி |
||
அம் பகை நெறித் தழை அணிபெறத் தைஇ, |
||
வரி புனை சிற்றில் பரி சிறந்து ஓடி, |
||
புலவுத் திரை உதைத்த கொடுந் தாட் கண்டல் |
||
10 |
சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும் |
|
சிறு விளையாடலும் அழுங்கி, |
||
நினைக்குறு பெருந் துயரம் ஆகிய நோயே. | உரை | |
தலைவன்சிறைப்புறத்தானாக, தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.- காஞ்சிப் புலவனார்
|
219. நெய்தல் |
கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும் |
||
பழ நலம் இழந்து பசலை பாய, |
||
இன் உயிர் பெரும்பிறிது ஆயினும், என்னதூஉம் |
||
புலவேன் வாழி-தோழி!-சிறு கால் |
||
5 |
அலவனொடு பெயரும் புலவுத் திரை நளி கடல் |
|
பெரு மீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர் |
||
கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண் சுடர் |
||
முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும் |
||
கானல்அம் பெருந் துறைச் சேர்ப்பன்- |
||
10 |
தானே யானே புணர்ந்தமாறே. | உரை |
வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.-தாயங்கண்ணனார்
|
239. நெய்தல் |
ஞான்ற ஞாயிறு குடமலை மறைய, |
||
மான்ற மாலை மகிழ்ந்த பரதவர் |
||
இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி, |
||
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில் |
||
5 |
காமர் சிறுகுடிச் செல்நெறி வழியின், |
|
ஆய் மணி பொதி அவிழ்ந்தாங்கு, நெய்தல் |
||
புல் இதழ் பொதிந்த பூத் தப மிதிக்கும் |
||
மல்லல் இருங் கழி மலி நீர்ச் சேர்ப்பற்கு |
||
அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே; 'முன்கை |
||
10 |
வார் கோல் எல் வளை உடைய வாங்கி, |
|
முயங்கு' எனக் கலுழ்ந்த இவ் ஊர் |
||
எற்று ஆவதுகொல், யாம் மற்றொன்று செயினே? | உரை | |
தோழி, தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது.-குன்றியனார்
|
385. நெய்தல் |
எல்லை சென்றபின், மலரும் கூம்பின; |
||
புலவு நீர் அடைகரை யாமைப் பார்ப்போடு |
||
அலவனும் அளைவயிற் செறிந்தன; கொடுங் கழி |
||
இரை நசை வருத்தம் வீட, மரமிசைப் |
||
5 |
புள்ளும் பிள்ளையொடு வதிந்தன; அதனால், |
|
பொழுதன்றுஆதலின், தமியை வருதி: | உரை | |
எழுது எழில் மழைக்க..............
|