முகப்பு |
பசு (ஆன், ஆ, சேதா, புனிற்றா) |
37. பாலை |
பிணங்கு அரில் வாடிய பழ விறல்நனந் தலை, |
||
உணங்குஊண் ஆயத்து ஓர் ஆன் தெள் மணி |
||
பைபய இசைக்கும் அத்தம், வை எயிற்று |
||
இவளொடும் செலினோ நன்றே; குவளை |
||
5 |
நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ, |
|
கலை ஒழி பிணையின் கலங்கி, மாறி |
||
அன்பிலிர் அகறிர் ஆயின், என் பரம் |
||
ஆகுவது அன்று, இவள் அவலம்-நாகத்து |
||
அணங்குடை அருந் தலை உடலி, வலன் ஏர்பு, |
||
10 |
ஆர்கலி நல் ஏறு திரிதரும் |
|
கார் செய் மாலை வரூஉம் போழ்தே. | உரை | |
வரைவிடை வைத்துப்பிரிவின்கண் தோழி சொல்லியது.-பேரி சாத்தனார்
|
69. முல்லை |
பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றி, |
||
சேய் உயர் பெரு வரைச் சென்று, அவண் மறைய, |
||
பறவை பார்ப்புவயின் அடைய, புறவில் |
||
மா எருத்து இரலை மடப் பிணை தழுவ, |
||
5 |
முல்லை முகை வாய் திறப்ப, பல் வயின் |
|
தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ, |
||
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி, |
||
கொடுங் கோல் கோவலர் குழலோடு ஒன்றி, |
||
ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை, |
||
10 |
ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும் |
|
இனையவாகித் தோன்றின், |
||
வினை வலித்து அமைதல் ஆற்றலர்மன்னே! | உரை | |
வினைவயிற் பிரிதல்ஆற்றாளாய தலைவி சொல்லியது.-சேகம்பூதனார்
|
100. மருதம் |
உள்ளுதொறும் நகுவேன்-தோழி!-வள்உகிர் |
||
மாரிக் கொக்கின் கூரல் அன்ன |
||
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன் |
||
தேம் கமழ் ஐம்பால் பற்றி, என் வயின் |
||
5 |
வான் கோல் எல் வளை வௌவிய பூசல் |
|
சினவிய முகத்து, 'சினவாது சென்று, நின் |
||
மனையோட்கு உரைப்பல்' என்றலின், முனை ஊர்ப் |
||
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும் |
||
தேர் வண் மலையன் முந்தை, பேர் இசைப் |
||
10 |
புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின் |
|
மண் ஆர் கண்ணின் அதிரும், |
||
நன்னர் ஆளன் நடுங்கு அஞர் நிலையே. | உரை | |
பரத்தை, தலைவிக்குப்பாங்காயினார் கேட்ப, விறலிக்கு உடம்படச்சொல்லியது.-பரணர்
|
109. பாலை |
'ஒன்றுதும்' என்ற தொன்று படு நட்பின் |
||
காதலர் அகன்றென, கலங்கிப் பேதுற்று, |
||
'அன்னவோ, இந் நன்னுதல் நிலை?' என, |
||
வினவல் ஆனாப் புனையிழை! கேள், இனி |
||
5 |
உரைக்கல் ஆகா எவ்வம்; இம்மென |
|
இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில், |
||
துளியுடைத் தொழுவின் துணிதல் அற்றத்து, |
||
உச்சிக் கட்டிய கூழை ஆவின் |
||
நிலை என, ஒருவேன் ஆகி |
||
10 |
உலமர, கழியும், இப் பகல் மடி பொழுதே! | உரை |
பிரிவிடை ஆற்றாளாய தலைமளது நிலைகண்ட தோழிக்குத் தலைமகள்சொல்லியது.-மீளிப் பெரும்பதுமனார்
|
171. பாலை |
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை |
||
வேனிற் குன்றத்து வெவ் வரைக் கவாஅன் |
||
நிலம் செல, செல்லாக் கயந் தலைக் குழவி |
||
சேரி அம் பெண்டிர் நெஞ்சத்து எறிய |
||
5 |
ஊர் ஆன்கன்றொடு புகுதும் நாடன் |
|
பன் மலை அருஞ் சுரம் இறப்பின், நம் விட்டு, |
||
யாங்கு வல்லுந மற்றே-ஞாங்க |
||
வினைப் பூண் தெண் மணி வீழ்ந்தன நிகர்ப்பக் |
||
கழுது கால்கொள்ளும் பொழுது கொள் பானாள், |
||
10 |
ஆர்வ நெஞ்சமொடு அளைஇ, |
|
மார்பு உறப் படுத்தல் மரீஇய கண்ணே? | உரை | |
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகட்கு உரைத்தது.
|
179. பாலை |
இல் எழு வயலை ஈற்று ஆ தின்றென, |
||
பந்து நிலத்து எறிந்து, பாவை நீக்கி, |
||
அவ் வயிறு அலைத்த என் செய் வினைக் குறுமகள் |
||
மான் அமர்ப்பன்ன மையல் நோக்கமொடு, |
||
5 |
யானும் தாயும் மடுப்ப, தேனொடு |
|
தீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி, |
||
நெருநலும் அனையள்மன்னே; இன்றே, |
||
மை அணற் காளை பொய் புகலாக, |
||
அருஞ் சுரம் இறந்தனள் என்ப-தன் |
||
10 |
முருந்து ஏர் வெண் பல் முகிழ் நகை திறந்தே. | உரை |
மனை மருட்சி
|
213. குறிஞ்சி |
அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி, |
||
'கன்று கால்யாத்த மன்றப் பலவின் |
||
வேர்க் கொண்டு தூங்கும் கொழுஞ் சுளைப் பெரும் பழம் |
||
குழவிச் சேதா மாந்தி, அயலது |
||
5 |
வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும் |
|
பெருங் கல் வேலிச் சிறுகுடி யாது?' என, |
||
சொல்லவும் சொல்லீர்; ஆயின், கல்லென |
||
கருவி மா மழை வீழ்ந்தென, எழுந்த |
||
செங் கேழ் ஆடிய செழுங் குரற் சிறு தினைக் |
||
10 |
கொய் புனம் காவலும் நுமதோ?- |
|
கோடு ஏந்து அல்குல், நீள் தோளீரே! | உரை | |
மதி உடன்படுக்கும் தலைமகன் சொல்லியது.-கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்
|
264. பாலை |
பாம்பு அளைச் செறிய முழங்கி, வலன் ஏர்பு, |
||
வான் தளி பொழிந்த காண்பு இன் காலை, |
||
அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும் |
||
மணி புரை எருத்தின் மஞ்ஞை போல, நின் |
||
5 |
வீ பெய் கூந்தல் வீசு வளி உளர |
|
ஏகுதி-மடந்தை!-எல்லின்று பொழுதே: |
||
வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த |
||
ஆ பூண் தெண் மணி இயம்பும், |
||
ஈகாண் தோன்றும், எம் சிறு நல் ஊரே. | உரை | |
உடன் போகாநின்ற தலைமகன், தலைமகளை வற்புறீஇயது; உடன்போய் மறுத்தரா நின்றான் ஊர்காட்டி, வற்புறீஇயதும் ஆம்.-ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்
|
290. மருதம் |
வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக் |
||
கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில் |
||
ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன் |
||
தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல் |
||
5 |
கொள்ளல்மாதோ, முள் எயிற்றோயே! |
|
நீயே பெரு நலத்தையே; அவனே, |
||
'நெடு நீர்ப் பொய்கை நடு நாள் எய்தி, |
||
தண் கமழ் புது மலர் ஊதும் |
||
வண்டு' என மொழிப; 'மகன்' என்னாரே. | உரை | |
பரத்தை விறலிமேல் வைத்துத் தலைமகளை நெருங்கிச் சொல்லியது; பரத்தையிற்பிரிய, வாயிலாய்ப் புக்க பாணன் கேட்ப, தோழி சொல்லியதூஉம் ஆம்.-மதுரை மருதன் இளநாகனார்
|
343. பாலை |
முல்லை தாய கல் அதர்ச் சிறு நெறி |
||
அடையாது இருந்த அம் குடிச் சீறூர்த் |
||
தாது எரு மறுகின், ஆ புறம் தீண்டும் |
||
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து, |
||
5 |
உகு பலி அருந்திய தொகு விரற் காக்கை |
|
புன்கண் அந்திக் கிளைவயின் செறிய, |
||
படையொடு வந்த பையுள் மாலை |
||
இல்லைகொல் வாழி-தோழி!-நத்துறந்து |
||
அரும் பொருட் கூட்டம் வேண்டிப் |
||
10 |
பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டே? | உரை |
தலைமகள் பிரிவிடை ஆற்றாளாய்ச் சொல்லியது.-கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்
|
359. குறிஞ்சி |
சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச் சேதா |
||
அலங்கு குலைக் காந்தள் தீண்டி, தாது உக, |
||
கன்று தாய் மருளும் குன்ற நாடன் |
||
உடுக்கும் தழை தந்தனனே; யாம் அஃது |
||
5 |
உடுப்பின், யாய் அஞ்சுதுமே; கொடுப்பின், |
|
கேளுடைக் கேடு அஞ்சுதுமே; ஆயிடை |
||
வாடலகொல்லோ தாமே-அவன் மலைப் |
||
போருடை வருடையும் பாயா, |
||
சூருடை அடுக்கத்த கொயற்கு அருந் தழையே? | உரை | |
தோழி தழையேற்றுக் கொண்டு நின்று தலைமகன் குறிப்பின் ஓடியது-கபிலர்
|