முகப்பு |
குயில் |
9. பாலை |
அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள் |
||
வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு, |
||
அலமரல் வருத்தம் தீர, யாழ நின் |
||
நல மென் பணைத் தோள் எய்தினம்; ஆகலின், |
||
5 |
பொரிப் பூம் புன்கின் அழற் தகை ஒண் முறி |
|
சுணங்கு அணி வன முலை அணங்கு கொளத் திமிரி, |
||
நிழல் காண்தோறும் நெடிய வைகி, |
||
மணல் காண்தோறும் வண்டல் தைஇ, |
||
வருந்தாது ஏகுமதி-வால் எயிற்றோயே! |
||
10 |
மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும் |
|
நறுந் தண் பொழில, கானம்; |
||
குறும் பல் ஊர, யாம் செல்லும் ஆறே. | உரை | |
உடன்போகாநின்ற தலைமகன் தலைமகட்கு உரைத்தது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
97. முல்லை |
அழுந்து படு விழுப் புண் வழும்பு வாய்புலரா |
||
எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்தாங்கு, |
||
பிரிவில புலம்பி நுவலும் குயிலினும், |
||
தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே; |
||
5 |
அதனினும் கொடியள் தானே, 'மதனின் |
|
துய்த் தலை இதழ பைங் குருக்கத்தியொடு |
||
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ?' என |
||
வண்டு சூழ் வட்டியள் திரிதரும் |
||
தண்டலை உழவர் தனி மட மகளே. | உரை | |
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி தோழிக்கு உரைத்தது.-மாறன் வழுதி
|
118. பாலை |
அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலியத் |
||
தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில், |
||
சேவலொடு கெழீஇய செங் கண் இருங் குயில் |
||
புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும், |
||
5 |
'அகன்றோர்மன்ற நம் மறந்திசினோர்' என, |
|
இணர் உறுபு, உடைவதன்தலையும் புணர்வினை |
||
ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய |
||
துகிலிகை அன்ன, துய்த் தலைப் பாதிரி |
||
வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி, |
||
10 |
புது மலர் தெருவுதொறு நுவலும் |
|
நொதுமலாட்டிக்கு நோம், என் நெஞ்சே! | உரை | |
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
157. பாலை |
இருங் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவிப் |
||
பெரும் பெயல் பொழிந்த வழி நாள் அமையத்து, |
||
பல் பொறி அரவின் செல் புறம் கடுப்ப |
||
யாற்று அறல் நுணங்கிய நாட் பத வேனில், |
||
5 |
இணர் துதை மாஅத்த புணர் குயில் விளித்தொறும், |
|
நம்வயின் நினையும் நெஞ்சமொடு, கைம்மிகக் |
||
கேட்டொறும் கலுழுமால் பெரிதே-காட்ட |
||
குறும் பொறை அயல நெடுந் தாள் வேங்கை |
||
அம் பூந் தாது உக்கன்ன |
||
10 |
நுண் பல் தித்தி மாஅயோளே. | உரை |
பொருள்வயிற் பிரிந்த தலைவன் பருவம் உணர்ந்த நெஞ்சிற்கு உரைத்தது.-இள வேட்டனார்
|
224. பாலை |
அன்பினர், மன்னும் பெரியர்; அதன்தலை, |
||
'பின்பனி அமையம் வரும்' என, முன்பனிக் |
||
கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே; |
||
'புணர்ந்தீர் புணர்மினோ' என்ன, இணர்மிசைச் |
||
5 |
செங் கண் இருங் குயில் எதிர் குரல் பயிற்றும் |
|
இன்ப வேனிலும் வந்தன்று; நம்வயின் |
||
'பிரியலம்' என்று, தெளித்தோர் தேஎத்து, |
||
இனி எவன் மொழிகோ, யானே-கயன் அறக் |
||
கண் அழிந்து உலறிய பல் மர நெடு நெறி |
||
10 |
வில் மூசு கவலை விலங்கிய |
|
வெம் முனை அருஞ் சுரம் முன்னியோர்க்கே? | உரை | |
தோழியால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகள் பெயர்த்தும் சொல் கடாவப்பட்டு,'அறிவிலாதேம் என்னை சொல்லியும், பிரியார் ஆகாரோ?' என்று சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
243. பாலை |
தேம் படு சிலம்பில் தெள் அறல் தழீஇய |
||
துறுகல் அயல தூ மணல் அடைகரை, |
||
அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்துப் |
||
பொதும்புதோறு அல்கும் பூங் கண் இருங் குயில், |
||
5 |
'கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு |
|
அகறல் ஓம்புமின், அறிவுடையீர்!' என, |
||
கையறத் துறப்போர்க் கழறுவ போல, |
||
மெய் உற இருந்து மேவர நுவல, |
||
இன்னாது ஆகிய காலை, பொருள்வயிற் |
||
10 |
பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின், |
|
அரிது மன்றம்ம, அறத்தினும் பொருளே? | உரை | |
பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது.-காமக்கணிப் பசலையார்
|
246. பாலை |
இடூஉ ஊங்கண் இனிய படூஉம்; |
||
நெடுஞ் சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்; |
||
மனை மா நொச்சி மீமிசை மாச் சினை, |
||
வினை மாண் இருங் குயில் பயிற்றலும் பயிற்றும்; |
||
5 |
உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி, |
|
செய்பொருட்கு அகன்றனராயினும் பொய்யலர், |
||
வருவர் வாழி-தோழி!-புறவின் |
||
பொன் வீக் கொன்றையொடு பிடவுத் தளை அவிழ, |
||
இன் இசை வானம் இரங்கும்; அவர், |
||
10 |
'வருதும்' என்ற பருவமோ இதுவே? | உரை |
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறீஇயது.-காப்பியஞ் சேந்தனார்
|