முகப்பு |
வெள்ளி வீதியார் |
27. பாலை |
கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது, |
||
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு, |
||
எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது, |
||
பசலை உணீஇயர் வேண்டும்- |
||
திதலை அல்குல் என் மாமைக் கவினே. |
உரை | |
பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - வெள்ளி வீதியார் |
44. பாலை |
காலே பரி தப்பினவே; கண்ணே |
||
நோக்கி நோக்கி வாள் இழந்தனவே; |
||
அகல் இரு விசும்பின் மீனினும் |
||
பலரே மன்ற, இவ் உலகத்துப் பிறரே. |
உரை | |
இடைச்சுரத்துச் செவிலித்தாய் கையற்றுச் சொல்லியது. - வெள்ளிவீதியார் |
58. குறிஞ்சி |
இடிக்கும் கேளிர்! நும் குறை ஆக |
||
நிறுக்கல் ஆற்றினோ நன்று மன் தில்ல; |
||
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில் |
||
கை இல் ஊமன் கண்ணின் காக்கும் |
||
வெண்ணெய் உணங்கல் போலப் |
||
பரந்தன்று, இந் நோய்; நோன்று கொளற்கு அரிதே! |
உரை | |
கழற்றெதிர்மறை. - வெள்ளிவீதியார் |
130. பாலை |
நிலம் தொட்டுப் புகாஅர்; வானம் ஏறார்; |
||
விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார்; |
||
நாட்டின்நாட்டின் ஊரின்ஊரின் |
||
குடிமுறை குடிமுறை தேரின், |
||
கெடுநரும் உளரோ?-நம் காதலோரே. |
உரை | |
பிரிவிடை அழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது; 'நீ அவர் பிரிந்தார் என்று ஆற்றாயாகின்றது என்னை? யான் அவர் உள்வழி அறிந்து தூது விட்டுக்கொணர்வேன்;நின் ஆற்றாமை நீங்குக!' என |
146. குறிஞ்சி |
அம்ம வாழி, தோழி!-நம் ஊர்ப் |
||
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ?- |
||
தண்டுடை கையர், வெண்தலைச் சிதவலர், |
||
'நன்றுநன்று' என்னும் மாக்களொடு |
||
இன்று பெரிது என்னும், ஆங்கணது அவையே. |
உரை | |
தலைமகன் தமர் வரைவொடு வந்து சொல்லாடுகின்றுழி, 'வரைவு மறுப்பவோ?' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது. - வெள்ளிவீதியார். |
149. பாலை |
அளிதோ தானே-நாணே நம்மொடு |
||
நனி நீடு உழந்தன்று மன்னே; இனியே, |
||
வான் பூங் கரும்பின் ஓங்கு மணற் சிறு சிறை |
||
தீம் புனல் நெரிதர வீந்து உக்காஅங்கு, |
||
தாங்கும் அளவைத் தாங்கி, |
||
காமம் நெரிதரக் கைந் நில்லாதே. |
உரை | |
உடன்போக்கு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார் |
169. மருதம் |
சுரம் செல் யானைக் கல் உறு கோட்டின் |
||
தெற்றென இறீஇயரோ-ஐய! மற்று யாம் |
||
நும்மொடு நக்க வால் வெள் எயிறே: |
||
பாணர் பசுமீன் சொரிந்த மண்டை போல |
||
எமக்கும் பெரும் புலவு ஆகி, |
||
நும்மும் பெறேஎம், இறீஇயர் எம் உயிரே. |
உரை | |
கற்புக் காலத்துத் தெளிவிடை விலங்கியது; இனித் தோழி வரைவு நீட்டித்தவழி வரைவு கடாயதூஉம் ஆம். - வெள்ளிவீதியார். |
386. நெய்தல் |
வெண் மணல் விரிந்த வீ ததை கானல் |
||
தண்ணந் துறைவன் தணவா ஊங்கே, |
||
வால் இழை மகளிர் விழவு அணிக் கூட்டும் |
||
மாலையோ அறிவேன்மன்னே; மாலை |
||
நிலம் பரந்தன்ன புன்கணொடு |
||
புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே. |
உரை | |
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் கிழத்தி வன்புறை எதிர் அழிந்து கூறியது.- வெள்ளிவீதியார் |