|
|
மன்னாப் பொருட் பிணி முன்னி, ''இன்னதை |
|
வளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து'' எனப் |
|
பல் மாண் இரத்திர்ஆயின், ''சென்ம்'' என, |
|
விடுநள் ஆதலும் உரியள்; விடினே, |
5 |
கண்ணும் நுதலும் நீவி, முன் நின்று, |
|
பிரிதல் வல்லிரோ-ஐய! செல்வர் |
|
வகை அமர் நல் இல் அக இறை உறையும் |
|
வண்ணப் புறவின் செங் காற் சேவல் |
|
வீழ் துணைப் பயிரும் கையறு முரல் குரல் |
10 |
நும் இலள் புலம்பக் கேட்டொறும் |
|
பொம்மல் ஓதி பெரு விதுப்புறவே? |
உரை |
|
தலைவனைத் தோழி செலவு அழுங்குவித்தது.-வண்ணப்புறக் கந்தரத்தனார்
|
|
''பேணுப பேணார் பெரியோர்'' என்பது |
|
நாணு தக்கன்று அது காணுங்காலை; |
|
உயிர் ஓரன்ன செயிர் தீர் நட்பின் |
|
நினக்கு யான் மறைத்தல் யாவது? மிகப் பெரிது |
5 |
அழிதக்கன்றால் தானே; கொண்கன், |
|
''யான் யாய் அஞ்சுவல்'' எனினும், தான் எற் |
|
பிரிதல் சூழான்மன்னே; இனியே |
|
கானல் ஆயம் அறியினும், ''ஆனாது, |
|
அலர் வந்தன்றுகொல்?'' என்னும்; அதனால், |
10 |
''புலர்வதுகொல், அவன் நட்பு!'' எனா |
|
அஞ்சுவல்-தோழி!-என் நெஞ்சத்தானே! |
உரை |
|
தோழி சிறைப்புறமாகத் தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.-இளம்போதியார்
|
|
வேனில் முருக்கின் விளை துணர் அன்ன |
|
மாணா விரல வல் வாய்ப் பேஎய் |
|
மல்லல் மூதூர் மலர்ப் பலி உணீஇய, |
|
மன்றம் போழும் புன்கண் மாலை, |
5 |
தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழியச் |
|
செல்ப என்ப தாமே-செவ் அரி |
|
மயிர் நிரைத்தன்ன வார் கோல் வாங்கு கதிர்ச் |
|
செந்நெல்அம் செறுவின் அன்னம் துஞ்சும் |
|
பூக் கெழு படப்பைச் சாய்க்காட்டு அன்ன என் |
10 |
நுதற் கவின் அழிக்கும் பசலையும், |
|
அயலோர் தூற்றும் அம்பலும் அளித்தே. |
உரை |
|
செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைவி சொல்லியது.-மூலங்கீரனார்
|
|
வடிக் கதிர் திரித்த வல் ஞாண்பெரு வலை |
|
இடிக் குரற் புணரிப் பௌவத்து இடுமார், |
|
நிறையப் பெய்த அம்பி, காழோர் |
|
சிறை அருங் களிற்றின், பரதவர் ஒய்யும் |
5 |
சிறு வீ ஞாழற் பெருங் கடற் சேர்ப்பனை, |
|
''ஏதிலாளனும்'' என்ப; போது அவிழ் |
|
புது மணற் கானல் புன்னை நுண் தாது, |
|
கொண்டல் அசை வளி தூக்குதொறும், குருகின் |
|
வெண் புறம் மொசிய வார்க்கும், தெண் கடல் |
10 |
கண்டல் வேலிய ஊர், ''அவன் |
|
பெண்டு'' என அறிந்தன்று; பெயர்த்தலோ அரிதே! |
உரை |
|
தலைவி பாணற்கு வாயில்மறுத்தது.-உலோச்சனார்
|
|
நயன் இன்மையின், பயன் இது என்னாது, |
|
பூம் பொறிப் பொலிந்த, அழல் உமிழ் அகன் பை, |
|
பாம்பு உயிர் அணங்கியாங்கும் ஈங்கு இது |
|
தகாஅது-வாழியோ, குறுமகள்!-நகாஅது |
5 |
உரைமதி; உடையும் என் உள்ளம்-சாரல் |
|
கொடு விற் கானவன் கோட்டுமா தொலைச்சிப் |
|
பச்சூன் பெய்த பகழி போல, |
|
சேயரி பரந்த மா இதழ் மழைக் கண் |
|
உறாஅ நோக்கம் உற்ற என் |
10 |
பைதல் நெஞ்சம் உய்யுமாறே. |
உரை |
|
சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் தோழி கேட்பச்சொல்லியது.-மாமூலனார்
|
|
வருமழை கரந்த வால் நிற விசும்பின் |
|
நுண் துளி மாறிய உலவை அம் காட்டு |
|
ஆல நீழல் அசைவு நீக்கி, |
|
அஞ்சுவழி அஞ்சாது, அசைவழி அசைஇ, |
5 |
வருந்தாது ஏகுமதி-வால் இழைக் குறுமகள்!- |
|
இம்மென் பேர் அலர் நும் ஊர்ப் புன்னை |
|
வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின் |
|
கானல் வார் மணல் மரீஇ, |
|
கல் உறச் சிவந்த நின் மெல் அடி உயற்கே! |
உரை |
|
புணர்ந்து உடன்போகாநின்ற தலைவன் இடைச் சுரத்துத் தலைவிக்கு உரைத்தது.-அம்மூவனார்
|
|
மலையன் மா ஊர்ந்து போகி, புலையன் |
|
பெருந் துடி கறங்கப் பிற புலம் புக்கு, அவர் |
|
அருங் குறும்பு எருக்கி, அயா உயிர்த்தாஅங்கு |
|
உய்த்தன்றுமன்னே-நெஞ்சே!-செவ் வேர்ச் |
5 |
சினைதொறும் தூங்கும் பயம் கெழு பலவின் |
|
சுளையுடை முன்றில், மனையோள் கங்குல் |
|
ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும் |
|
ஊறலஞ் சேரிச் சீறூர், வல்லோன் |
|
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை |
10 |
அகன் தொடி செறித்த முன்கை, ஒள் நுதல், |
|
திதலை அல்குல், குறுமகள் |
|
குவளை உண்கண் மகிழ் மட நோக்கே. |
உரை |
|
பின்னின்ற தலைவன்நெஞ்சிற்கு உரைத்தது.-கபிலர்
|
|
கோட் சுறா வழங்கும் வாள் கேழ்இருங் கழி |
|
மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய, |
|
பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம், |
|
வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல், |
5 |
படர் வந்து நலியும் சுடர் செல் மாலை, |
|
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம்; |
|
கேட்டிசின்-வாழி, தோழி!-தெண் கழி |
|
வள் வாய் ஆழி உள் வாய் தோயினும், |
|
புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படைக் கலி மா |
10 |
வலவன் கோல் உற அறியா, |
|
உரவு நீர்ச் சேர்ப்பன், தேர்மணிக் குரலே! |
உரை |
|
வரைவு மலிந்தது.-கீரங்கீரனார்
|
|
''சிறை நாள் ஈங்கை உறை நனி திரள்வீ, |
|
கூரை நல் மனைக் குறுந் தொடி மகளிர் |
|
மணல் ஆடு கழங்கின், அறை மிசைத் தாஅம் |
|
ஏர் தரலுற்ற இயக்கு அருங் கவலைப் |
5 |
பிரிந்தோர் வந்து, நப்புணரப் புணர்ந்தோர் |
|
பிரிதல் சூழ்தலின், அரியதும் உண்டோ?'' |
|
என்று நாம் கூறிக் காமம் செப்புதும்; |
|
செப்பாது விடினே, உயிரொடும் வந்தன்று- |
|
அம்ம! வாழி, தோழி!- |
10 |
யாதனின் தவிர்க்குவம், காதலர் செலவே? |
உரை |
|
பிரிவு உணர்ந்து வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது.-கண்ணகனார்
|
|
''மன்ற எருமை மலர் தலைக் காரான் |
|
இன் தீம் பாற்பயம் கொண்மார், கன்று விட்டு, |
|
ஊர்க் குறுமாக்கள் மேற்கொண்டு கழியும் |
|
பெரும் புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து, |
5 |
தழையும் தாரும் தந்தனன், இவன்'' என, |
|
இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ, |
|
தைஇத் திங்கள் தண் கயம் படியும் |
|
பெருந் தோட் குறுமகள் அல்லது, |
|
மருந்து பிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கே. |
உரை |
|
சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைவன், தோழி கேட்ப, தன் நெஞ்சிற்கு உரைத்தது.-பூதன்தேவனார்
|
|