|
|
பெயினே, விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி, |
|
இருங் கதிர் நெல்லின் யாணரஃதே: |
|
வறப்பின், மா நீர் முண்டகம் தாஅய்ச் சேறு புலர்ந்து, |
|
இருங் கழிச் செறுவின் வெள் உப்பு விளையும், |
5 |
அழியா மரபின் நம் மூதூர் நன்றே- |
|
கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கி, |
|
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே; |
|
ஒன்றே- தோழி!-நம் கானலது பழியே: |
|
கருங் கோட்டுப் புன்னை மலர்த் தாது அருந்தி, |
10 |
இருங் களிப் பிரசம் ஊத, அவர் |
|
நெடுந் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே. |
உரை |
|
அலர் கூறப்பட்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது.-உலோச்சனார்
|
|
நோகோ யானே, நோம் என் நெஞ்சே- |
|
''பனிப் புதல் ஈங்கை அம் குழை வருட, |
|
சிறை குவிந்திருந்த பைதல் வெண் குருகு, |
|
பார்வை வேட்டுவன், காழ் களைந்தருள, |
5 |
மாரி நின்ற, மையல் அற்சிரம்- |
|
யாம் தன் உழையம் ஆகவும், தானே, |
|
எதிர்த்த தித்தி முற்றா முலையள், |
|
கோடைத் திங்களும் பனிப்போள்- |
|
வாடைப் பெரும் பனிக்கு என்னள்கொல்?'' எனவே. |
உரை |
|
பொருள் வலித்த தலைமகன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது.-கழார்க் கீரன் எயிற்றியார்
|
|
கருங் கால் வேங்கை நாள் உறு புதுப் பூ, |
|
பொன் செய் கம்மியன் கைவினை கடுப்ப, |
|
தகை வனப்புற்ற, கண்ணழி கட்டழித்து, |
|
ஒலி பல் கூந்தல் அணி பெறப் புனைஇ, |
5 |
காண்டற் காதல் கைம்மிக கடீஇயாற்கு |
|
யாங்கு ஆகுவம்கொல்?-தோழி!-காந்தள் |
|
கமழ் குலை அவிழ்ந்த நயவருஞ் சாரல் |
|
கூதள நறும் பொழில் புலம்ப, ஊர்வயின் |
|
மீள்குவம் போலத் தோன்றும்-தோடு புலர்ந்து |
10 |
அருவியின் ஒலித்தல் ஆனா, |
|
கொய்பதம் கொள்ளும், நாம் கூஉம் தினையே. |
உரை |
|
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய், புனம் அழிவு உரைத்து,செறிப்பு அறிவுறீஇயது.-தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
|
|
''முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்; |
|
வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை; |
|
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் அலரி |
|
நறுங் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில், |
5 |
குறும் பொறிக் கொண்ட கொம்மை அம் புகர்ப்பின் |
|
கருங் கண் வெம் முலை ஞெமுங்கப் புல்லிக் |
|
கழிவதாக, கங்குல்'' என்று |
|
தாம் மொழி வன்மையின் பொய்த்தனர், வாழிய- |
|
நொடி விடுவன்ன காய் விடு கள்ளி |
10 |
அலங்கல்அம் பாவை ஏறி, புலம்பு கொள் |
|
புன் புறா வீழ் பெடைப் பயிரும் |
|
என்றூழ் நீளிடைச் சென்றிசினோரே! |
உரை |
|
பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது.- முப்பேர் நாகனார்
|
|
ஈண்டு பெருந் தெய்வத்து-யாண்டு பல கழிந்தென, |
|
பார்த் துறைப் புணரி அலைத்தலின், புடை கொண்டு, |
|
மூத்து, வினை போகிய முரி வாய் அம்பி, |
|
நல் எருது நடை வளம் வைத்தென, உழவர் |
5 |
புல்லுடைக் காவில் தொழில் விட்டாங்கு, |
|
நறு விரை நன் புகை கொடாஅர், சிறு வீ |
|
ஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல் |
|
முழவு முதற் பிணிக்கும் துறைவ! நன்றும் |
|
விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின் |
10 |
தவறும்; நன்கு அறியாய்ஆயின், எம் போல், |
|
ஞெகிழ் தோள், கலுழ்ந்த கண்ணர், |
|
மலர் தீய்ந்தனையர், நின் நயந்தோரே. |
உரை |
|
தலைமகனைப் பரத்தை நொந்து சொல்லியது.- அம்மூவனார்
|
|
மடவது அம்ம, மணி நிற எழிலி- |
|
''மலரின் மௌவல் நலம் வரக் காட்டி, |
|
கயல் ஏர் உண்கண் கனங்குழை! இவை நின் |
|
எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம்'' என, |
5 |
கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின் |
|
நல் நுதல் நீவிச் சென்றோர், தம் நசை |
|
வாய்த்து வரல் வாரா அளவை, அத்தக் |
|
கல் மிசை அடுக்கம் புதையக் கால் வீழ்த்து, |
|
தளி தரு தண் கார் தலைஇ, |
10 |
விளி இசைத்தன்றால், வியல் இடத்தானே. |
உரை |
|
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தது.-இடைக்காடனார்
|
|
நீடு இருஞ் சிலம்பின் பிடியொடு புணர்ந்த |
|
பூம் பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்ப, |
|
தோடு தலை வாங்கிய நீடு குரற் பைந் தினை, |
|
பவளச் செவ் வாய்ப் பைங் கிளி கவரும் |
5 |
உயர் வரை நாட! நீ நயந்தோள் கேண்மை |
|
அன்னை அறிகுவள்ஆயின், பனி கலந்து |
|
என் ஆகுவகொல்தானே-எந்தை |
|
ஓங்கு வரைச் சாரல் தீம் சுனை ஆடி, |
|
ஆயமொடு குற்ற குவளை |
10 |
மா இதழ் மா மலர் புரைஇய கண்ணே? |
உரை |
|
தோழி, தலைமகனை வரைவு கடாயது.-மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
|
|
நினைத்தலும் நினைதிரோ-ஐய! அன்று நாம் |
|
பணைத் தாள் ஓமைப் படு சினை பயந்த |
|
பொருந்தாப் புகர் நிழல் இருந்தனெமாக, |
|
நடுக்கம் செய்யாது, நண்ணுவழித் தோன்றி, |
5 |
ஒடித்து மிசைக் கொண்ட ஓங்கு மருப்பு யானை |
|
பொறி படு தடக்கை சுருக்கி, பிறிது ஓர் |
|
ஆறு இடையிட்ட அளவைக்கு, வேறு உணர்ந்து, |
|
என்றூழ் விடர் அகம் சிலம்ப, |
|
புன் தலை மடப் பிடி புலம்பிய குரலே? |
உரை |
|
பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகனைத் தோழி சொல்லியது.- பாலை பாடிய பெருங் கடுங்கோ
|
|
ஓதமும் ஒலி ஓவின்றே; ஊதையும் |
|
தாது உளர் கானல் தவ்வென்றன்றே; |
|
மணல் மலி மூதூர் அகல் நெடுந் தெருவில், |
|
கூகைச் சேவல் குராலோடு ஏறி, |
5 |
ஆர் இருஞ் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும், |
|
அணங்கு கால் கிளரும், மயங்கு இருள் நடு நாள்; |
|
பாவை அன்ன பலர் ஆய் வனப்பின், |
|
தட மென் பணைத் தோள், மடம் மிகு குறுமகள் |
|
சுணங்கு அணி வன முலை முயங்கல் உள்ளி, |
10 |
மீன் கண் துஞ்சும் பொழுதும், |
|
யான் கண் துஞ்சேன்; யாதுகொல் நிலையே? |
உரை |
|
காப்பு மிகுதிக்கண் ஆற்றானாகிய தலைமகன், தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லி யது.- வினைத்தொழில் சோகீரனார்
|
|
''விழவும் மூழ்த்தன்று; முழவும் தூங்கின்று; |
|
எவன் குறித்தனள்கொல்?'' என்றி ஆயின்- |
|
தழை அணிந்து அலமரும் அல்குல், தெருவின், |
|
இளையோள் இறந்த அனைத்தற்கு, பழ விறல் |
5 |
ஓரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில், |
|
காரி புக்க நேரார் புலம்போல், |
|
கல்லென்றன்றால், ஊரே; அதற்கொண்டு, |
|
காவல் செறிய மாட்டி, ஆய்தொடி |
|
எழில் மா மேனி மகளிர் |
10 |
விழுமாந்தனர், தம் கொழுநரைக் காத்தே. |
உரை |
|
பரத்தை தனக்குப் பாங்காயினார் கேட்ப, நெருங்கிச் சொல்லியது.-கபிலர்
|
|