|
|
உவர் விளை உப்பின் உழாஅ உழவர் |
|
ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி, |
|
கானல் இட்ட காவற் குப்பை, |
|
புலவு மீன் உணங்கல் படு புள் ஓப்பி, |
5 |
மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி, |
|
''எந்தை திமில், இது, நுந்தை திமில்'' என |
|
வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர் |
|
திண் திமில் எண்ணும் தண் கடற் சேர்ப்ப! |
|
இனிதேதெய்ய, எம் முனிவு இல் நல் ஊர்; |
10 |
இனி, வரின் தவறும் இல்லை: எனையதூஉம் |
|
பிறர் பிறர் அறிதல் யாவது- |
|
தமர் தமர் அறியாச் சேரியும் உடைத்தே. |
உரை |
|
தோழி இரவுக்குறி நேர்ந்தது.-உலோச்சனார்
|
|
இகுளை தோழி! இஃது என் எனப்படுமோ- |
|
''குவளை குறுநர் நீர் வேட்டாங்கு, |
|
நாளும்நாள் உடன் கவவவும், தோளே |
|
தொல் நிலை வழீஇய நின் தொடி'' எனப் பல் மாண் |
5 |
உரைத்தல் ஆன்றிசின், நீயே: விடர் முகை, |
|
ஈன் பிணவு ஒடுக்கிய இருங் கேழ் வயப் புலி |
|
இரை நசைஇப் பரிக்கும் மலைமுதல் சிறு நெறி, |
|
தலைநாள் அன்ன பேணலன், பல நாள், |
|
ஆர் இருள் வருதல் காண்பேற்கு, |
10 |
யாங்கு ஆகும்மே, இலங்கு இழை செறிப்பே? |
உரை |
|
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி களவுக் காலத்து வற்புறுப்ப,தலைவி கூறியது; வன்புறை எதிர்மறுத்ததூஉம் ஆம்.-குன்றூர்கிழார் மகன் கண்ணத்தனார்
|
|
மழை தொழில் உலந்து, மா விசும்பு உகந்தென, |
|
கழை கவின் அழிந்த கல் அதர்ச் சிறு நெறிப் |
|
பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின், |
|
பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும் |
5 |
சுரன் இறந்து, அரிய என்னார், உரன் அழிந்து, |
|
உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி, |
|
அரும் பொருட்கு அகன்ற காதலர் முயக்கு எதிர்ந்து, |
|
திருந்திழைப் பணைத் தோள் பெறுநர் போலும்; |
|
நீங்குகமாதோ நின் அவலம்-ஓங்குமிசை, |
10 |
உயர் புகழ் நல் இல் ஒண் சுவர்ப் பொருந்தி |
|
நயவரு குரல பல்லி, |
|
நள்ளென் யாமத்து, உள்ளுதொறும் படுமே. |
உரை |
|
பொருள்வயிற் பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தது.-கள்ளிக் குடிப் பூதம் புல்லனார்
|
|
கரு விரல் மந்திச் செம் முகப் பெருங் கிளை |
|
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி, |
|
ஓங்கு கழை ஊசல் தூங்கி, வேங்கை |
|
வெற்பு அணி நறு வீ கற்சுனை உறைப்ப, |
5 |
கலையொடு திளைக்கும் வரைஅக நாடன்- |
|
மாரி நின்ற ஆர் இருள் நடு நாள், |
|
அருவி அடுக்கத்து, ஒரு வேல் ஏந்தி; |
|
மின்னு வசி விளக்கத்து வருமெனின், |
|
என்னோ-தோழி!-நம் இன் உயிர் நிலையே? |
உரை |
|
தோழி இரவுக்குறி முகம் புக்கது.
|
|
திங்களும் திகழ் வான் ஏர்தரும்; இமிழ் நீர்ப் |
|
பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே; |
|
ஒலி சிறந்து ஓதமும் பெயரும்; மலி புனற் |
|
பல் பூங் கானல் முள் இலைத் தாழை |
5 |
சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ, |
|
வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு |
|
மை இரும் பனைமிசைப் பைதல உயவும் |
|
அன்றிலும் என்புற நரலும்; அன்றி, |
|
விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ் |
10 |
யாமம் உய்யாமை நின்றன்று; |
|
காமம் பெரிதே; களைஞரோ இலரே! |
உரை |
|
காமம் மிக்க கழிபடர்கிளவி மிதூர்ந்து தலைமகள் சொல்லியது.- வெள்ளிவீதியார்
|
|
பிணர்ச் சுவற் பன்றி தோல்முலைப் பிணவொடு |
|
கணைக் கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின், |
|
கல் அதர் அரும் புழை அல்கி, கானவன், |
|
வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை, |
5 |
புனை இருங் கதுப்பின் மனையோள் கெண்டி, |
|
குடி முறை பகுக்கும் நெடு மலை நாட! |
|
உரவுச் சின வேழம் உறு புலி பார்க்கும் |
|
இரவின் அஞ்சாய்; அஞ்சுவல்-அரவின் |
|
ஈர் அளைப் புற்றம், கார் என முற்றி, |
10 |
இரை தேர் எண்கினம் அகழும் |
|
வரை சேர் சிறு நெறி வாராதீமே! |
உரை |
|
ஆறு பார்த்துற்றுச்சொல்லியது.-கபிலர்
|
|
உலகம் படைத்த காலை-தலைவ!- |
|
மறந்தனர்கொல்லோ சிறந்திசினோரே- |
|
முதிரா வேனில் எதிரிய அதிரல், |
|
பராரைப் பாதிரிக் குறு மயிர் மா மலர், |
5 |
நறு மோரோடமொடு, உடன் எறிந்து அடைச்சிய |
|
செப்பு இடந்தன்ன நாற்றம் தொக்கு உடன், |
|
அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம் பால் |
|
தாழ் நறுங் கதுப்பில் பையென முள்கும் |
|
அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது, |
10 |
பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோரே. |
உரை |
|
தோழி, தலைமகன் பொருள்வயிற் பிரிதலுற்றானது குறிப்பறிந்து விலக்கியது; தோழி உலகியல் கூறிப் பிரிவு உணர்த்தியதூஉம் ஆம்.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
|
கடுங் கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே; |
|
அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து, அவர் |
|
நெடுந் தேர் இன் ஒலி இரவும் தோன்றா; |
|
இறப்ப எவ்வம் நலியும், நின் நிலை; |
5 |
''நிறுத்தல் வேண்டும்'' என்றி; நிலைப்ப |
|
யாங்ஙனம் விடுமோ மற்றே!-மால் கொள |
|
வியல் இரும் பரப்பின் இரை எழுந்து அருந்துபு, |
|
புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய |
|
ஆடு அரைப் பெண்ணைத் தோடு மடல் ஏறி, |
10 |
கொடு வாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய, |
|
உயிர் செலக் கடைஇப் புணர் துணைப் |
|
பயிர்தல் ஆனா, பைதல்அம் குருகே? |
உரை |
|
ஒருவழித் தணந்த காலை ஆற்றாத தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது.-மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார்
|
|
''தோலாக் காதலர் துறந்து நம் அருளார்; |
|
அலர்வது அன்றுகொல் இது?'' என்று, நன்றும் |
|
புலரா நெஞ்சமொடு புதுவ கூறி, |
|
இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம் |
5 |
அறிந்தனள்போலும், அன்னை-சிறந்த |
|
சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கி, |
|
நீர் அலைக் கலைஇய ஈர் இதழ்த் தொடையல் |
|
ஒள் நுதல் பெதும்பை நல் நலம் பெறீஇ, |
|
மின் நேர் ஓதி இவளொடு, நாளை, |
10 |
பல் மலர் கஞலிய வெறி கமழ் வேலித் |
|
தெண் நீர் மணிச் சுனை ஆடின், |
|
என்னோ மகளிர்தம் பண்பு என்றோளே? |
உரை |
|
சிறைப்புறமாகத் தலைவன் கேட்பச் சொல்லியது.-சீத்தலைச் சாத்தனார்
|
|
புல்லேன், மகிழ்ந! புலத்தலும் இல்லேன்- |
|
கல்லா யானைக் கடுந் தேர்ச் செழியன் |
|
படை மாண் பெருங் குள மடை நீர் விட்டென, |
|
கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை |
5 |
அள்ளல்அம் கழனி உள்வாய் ஓடி, |
|
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து, |
|
செஞ் சால் உழவர் கோல் புடை மதரி, |
|
பைங் காற் செறுவின் அணைமுதல் பிறழும் |
|
வாணன் சிறுகுடி அன்ன, என் |
10 |
கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே! |
உரை |
|
பரத்தையிற் மறுத்தந்த தலைமகனைத் தலைமகள் நொந்து சொல்லியது.-நக்கீரர்
|
|