Primary tabs
-
பாடம் - 3
A03143 19ஆம் நூற்றாண்டு அரசியல் நிலை
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
இப்பாடமானது கிழக்கிந்தியக் கம்பெனி சிப்பாய்க் கலகத்தினை அடக்கியபின் சீரியதொரு அரசாங்கம் அமைக்க எண்ணியது பற்றிக் கூறுகிறது.
தமிழகத்தின் அரசியல் நிலை பற்றிக் கூறுகிறது. ஆங்கிலேயர் ஆட்சியினால் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றி விளக்குகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- இப்பாடத்தின் மூலம் கிழக்கிந்தியக் கம்பெனி பணத்தினைக் கொடுத்து நாடு பிடித்தது பற்றி அறிந்து கொள்ளலாம்.
- மேலும் ஆங்கிலேயர் என்னென்ன செய்து நாடுகளை ஒருங்கிணைத்தார்கள் என்றும் புரிந்து கொள்ளலாம்.
- வாணிகம் எவ்வாறு நடைபெற்றது, சட்டம் மற்றும் நீதி எவ்வாறு இருந்தன என்பன பற்றியும் படித்து உணரலாம்.
- ஆங்கிலேயர் காலத்தில் தமிழகத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன என்பதனையும் புரிந்து கொள்ளலாம்.