தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • தமிழ்
  • English

பாடம் - 4

A04114 காப்பியக் காலம்

E

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் தமிழில் தோன்றிய மிகப் பழைய
காப்பியங்களான     சிலப்பதிகாரம்,     மணிமேகலை
ஆகியவற்றின் அமைப்பு, சிறப்பு ஆகியவற்றை விளக்குகின்றது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இதனைப் படித்து முடிக்கும் போது நீங்கள் கீழ்க்காணும்
கருத்துக்களை அறிந்து கொண்டு பயன்களைப் பெறுவீர்கள்!
  • சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய நூல்களின்
    அமைப்பையும் சிறப்பையும் அறியலாம்.
  • இந்நூல்களின்     காலத்தையும்,     நூலாசிரியரின்
    வரலாற்றையும் அறியலாம்.
  • சிலப்பதிகாரம் ஒரு     குடிமக்கள் காப்பியம்
    என்று அறியலாம்.
  • இதுவே தமிழகத்தை ஒன்றாகக் கண்டது என
    உணரலாம்.
  • மணிமேகலை தமிழில் தோன்றிய முதல் சமயச்
    சார்பான நூல் என்பதைக் தெரிந்து கொள்ளலாம்.
  • தமிழகத்தில் முன்பு நிலவிய சமயங்கள் - தத்துவங்கள்
    இன்னவை என்று இனம் காணலாம்.
  • மணிமேகலை உணர்த்தும் அறச் சிந்தனைகளை
    அறியலாம்.
  • சிலப்பதிகாரமும்     மணிமேகலையும்     தமிழர்
    பண்பாட்டை அறிய உதவும் பெட்டகங்கள் என்று
    அறிந்து கொள்ளலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 23:02:25(இந்திய நேரம்)