Primary tabs
பாடம் - 6
A04116 முதல் ஆழ்வார்கள் காலம்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய
மூவரின் வரலாறு பற்றியும் நூல்கள் பற்றியும்
சொல்லுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- ஆழ்வார் என்ற சொல்லின் பொருளை அறியலாம்.
- பன்னிரு ஆழ்வார்களின் பெயர்களை அறியலாம்.
- மூன்று ஆழ்வார்களும் பிறந்த ஊர், இடம், பிறந்த
நாள் பற்றி அறியலாம்.
- மூவரும் பாடிய நூல்களின் பெயர்களை அறியலாம்.
- மூவரையும் திருமால் ஆட்கொண்டு அருள்புரிந்த
வரலாற்றை அறியலாம்.
- திருமால் மீது ஆழ்வார்கள் கொண்ட பேரன்பு,
திருமால் வழிபடும் முறை, திருமால் வழிபடுவார்
பெறும் பேறு, திருமால் எல்லாம் ஆகி நின்று
உலகை வாழ்விக்கும் சிறப்பு முதலிய பலவற்றையும்
அறியலாம்.