Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் : II
4. இராசராச சோழன் உலா கூறும் முன்னோர் சிறப்புகள் நான்கினைத் தருக.
1)
ஒரு புறாவின் துன்பத்தைப் போக்குவதற்காகத் தன் தசையை அரிந்து தராசுத் தட்டில் இட்ட முன்னோர்.
2)
வானோர் பகைவனாகிய சம்பரன் என்ற அரசனை அழித்துத் தேவர்களைக் காத்த முன்னோர்.
3)
ஆதிசேடனுடைய மகளாகிய நாகர் கன்னியை மணந்த முன்னோர்.
4)
மேருமலை மீது புலிக்கொடி பறக்கச் செய்த முன்னோர்.