Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
4. குழூஉக்குறி என்றால் என்ன? அது எவ்வாறு பண்பாட்டுக் கூறாகக் கருதப்படுகிறது?
ஒரு கூட்டத்தார் அல்லது குழுவினர், ஏதாவது ஒரு காரணத்திற்காக, ஒரு சொல்லுக்குப் பதிலாக இன்னொரு சொல்லைச் குறிப்பிடுவது குழூஉக்குறி எனப்படும். சில சொற்களைச் சில இடங்களில் சொல்ல இயலாது. அதைப் பகுக்குவமாகச் சொல்ல வேண்டும். அதற்கு மனப்பக்குவம் வேண்டும். அந்த மனப்பக்குவத்தைக் கொடுப்பது பண்பாடு. இவ்வாறு மனப்பக்குவத்தோடு பேசுவதற்குப் பயன்படுவது குழூஉக்குறி. எனவே குழூஉக்குறியும் பண்பாட்டுக் கூறாகக் கருதப்படுகிறது.
