Primary tabs
2.6 தொகுப்புரை
தமிழர், கலைகளில் பெரு விருப்பமுள்ளவர். இவர்களின் கலைப் பாணியைத் தமிழகக் கோபுரங்களில் காணலாம். இன்றும் தமிழகக் கலைகள் கோயில்களாலேயே பாதுகாக்கப்படுகின்றன. யானை போன்ற விலங்குகளை மயக்கும் ஆற்றல் தமிழ்ப் பெண்ணின் இசைக்கு இருந்தது. சிலப்பதிகாரம் ஓர் இசைக்களஞ்சியமாக அல்லவா திகழ்கின்றது!
மாமல்லபுரத்தில் கல்யானை, மதுரையில் சிவபெருமான் ஆடற்கோலம், சித்தன்னவாசலில் அரசன் அரசி ஓவியம் ஆகியன எல்லாம் தமிழரின் சிறந்த கலை மாதிரிகள் அல்லவா? இவற்றைக் குறித்து இப்பாடத்தில் ஓரளவு தெரிந்து கொண்டீர்கள். தொடர்ந்து போகலாமா?