Primary tabs
-
பாடம் - 5
D06135 இன்றைய திறனாய்வாளர்கள்-II
இந்தப் பாடம் தமிழ்த் திறனாய்வுலகில், குறிப்பிட்ட சில திறனாய்வாளர்களையும் அவர்களின் பங்களிப்பினையும் பற்றிப் பேசுகின்றது. முக்கியமாகத் தொடக்க கால ஆராய்ச்சியாளர்களின் ஈடுபாடுகளையும், சார்பு நிலைகளையும் பங்களிப்புகளையும் பற்றிச் சொல்கிறது.டி.கே.சி. உள்ளிட்ட நெறிப்பட்ட இன்றைய திறனாய்வாளர்களின் பணிகளைப் பற்றிக் கூறுகிறது. இலக்கிய இதழ்களின் பங்களிப்பு எத்தகையது என்பதைச் சொல்கிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- கல்வியாளர்களாக இருந்தோ, படைப்பாளிகளாக இருந்தோ, திறனாய்வாளர்களாகச் சிறப்புப் பெற்றவர்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
- தொடக்க கால ஆராய்ச்சியாளர்களிடம் சமயச் சார்புநிலை உண்டு என்பதையும் அது எத்தகையது என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
- ரசனை முறைத் திறனாய்வு, கம்பனை ரசிப்பதற்கு ஒருபக்கம் துணைநிற்க, இன்னொரு பக்கம், இன்றைய இலக்கியத்தில் தரம் பற்றிப் பேசவும் துணைநிற்கிறது (முறையே டி.கே.சி., மற்றும் க.நா.சு) என்பதனை அறிந்து கொள்ளலாம்.
- திறனாய்வாளர்கள் பல திறந்தவர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
- இலக்கியச் சிற்றிதழ்கள் பற்றியும் தெரிந்து கொள்கிறோம்.