தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாடம் - 6-P10336

பாடம் - 6

திருக்காவலூர்க் கலம்பகம்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

தமிழ் மொழியில் காணப்படும் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று கலம்பக இலக்கியம். கலம்பக நூல்களில் ஒன்று திருக்காவலூர்க் கலம்பகம்.

திருக்காவலூர்க் கலம்பகம் என்ற பெயர் ஏற்படக் காரணம், இந்த நூலின் ஆசிரியர், இந்த நூலின் தனிச் சிறப்புகள், நூல் அமைப்பு என்பனவற்றைக் கூறுகின்றது.

திருக்காவலூர்க் கலம்பக உறுப்புகள், அவற்றின் விளக்கங்கள், சிறப்பான சில பகுதிகள் என்பன விளக்கப்படுகின்றன.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இந்தப் பாடத்தினைப் படித்து முடிக்கும்பொழுது பின்வரும் திறன்களையும் பயன்களையும் பெறலாம்.

  • திருக்காவலூர்க் கலம்பகம் என்று பெயர் ஏற்பட்ட காரணத்தை அறியலாம்.
  • இந்நூலின் ஆசிரியர் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
  • இந்த நூலின் சிறப்புகள் சிலவற்றைப் புரிந்து கொள்ளலாம்.
  • திருக்காவலூர்க் கலம்பகத்தில் இடம்பெறும் கலம்பக உறுப்புகளையும் அவற்றின் விளக்கங்களையும் அறியலாம்.
  • இந்தக் கலம்பக உறுப்புகளில் இடம்பெறும் செய்திகள் சிலவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.

பாட அமைப்பு

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-08-2018 15:02:54(இந்திய நேரம்)