Primary tabs
-
சங்க காலத்திற்கும் முற்பட்ட பழந்தமிழ் நூலாகிய
தொல்காப்பியத்தில் திருமாலைப் பற்றிய குறிப்புகள்
இடம்பெறுவதையும் முல்லை நில மக்கள் திணைக்
கடவுளாகத் திருமாலைக் கொண்டதையும் சான்றுகள்
வழி விளக்குகிறது. - சங்க இலக்கியங்களாகிய எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
ஆகியவற்றில் திருமாலின் புகழ் குறிப்பிடப்பட்டிருப்பதும் திருமாலின் அவதாரங்கள் சில இடம் பெற்றிருப்பதும் சுட்டிக் காட்டப்படுகின்றன. -
அறநூல்களுள் திரிகடுகம் திருமாலின் திருவடிச்
சிறப்பையும் அவதாரச் சிறப்பையும் விளக்குவதை
எடுத்துரைக்கிறது. -
காப்பியங்களுள் சிலப்பதிகாரத்தில் திருமாலின் கிடந்த
கோலமும் நின்றகோலமும் விளக்கம் பெறுவதையும்
குறிக்கிறது. -
மணிமேகலையில் திருமாலின் அவதாரம்
பேசப்படுவதையும் குறிக்கிறது.
-
தொல்காப்பியம் முதல் மணிமேகலை வரை இடம்
பெற்றுள்ள திருமால் பற்றிய குறிப்புகளைத் தொகுத்துக்
கொள்ளலாம். -
இலக்கியப் பதிவின் வழி பெறும் திருமால்
அவதாரங்கள் பற்றிய செய்திகளைப் பட்டியலிடலாம். -
சிவன், முருகன், கிருஷ்ணன், பலராமர் ஆகிய
கடவுளரின் வழிபாடுகள் பழந்தமிழ் நூல்களில் இடம்
பெற்றதை அடையாளங் காணலாம். -
தமிழர்களின் வழிபாட்டு முறைகளைத் தொகுத்துக்
காணலாம். -
இராமகாதை பற்றிய கதைக்குறிப்பு, பாரதம் பற்றிய
கதைக் குறிப்பு ஆகியவற்றைக் கதைவழி
இனங்காணலாம். -
சிலப்பதிகாரம் ஐம்புலன்கேளாடு இறைவன்
திருநாமத்தைத் தொடர்புப்படுத்திக் காட்டிய வழி
சமயத்தின் சிறப்பைக் கணித்து மகிழலாம்.