Primary tabs
- ஆழ்வார்கள் அருளிச் செய்த
பாடல்கள்
திவ்வியப்பிரபந்தம் என்ற பெயரால் அழைக்கப்பட்டன. - பன்னிரு ஆழ்வார்களும் இப்பாடத்தில் அறிமுகப்படுத்தப்
படுகிறார்கள். - வைணவ பாசுரங்கள் அனைத்தும் 10-ஆம் நூற்றாண்டில் நாதமுனிகளால் தொகுக்கப்பட்டன
என்பதும் அவை
நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் என்ற பெயரால்
வழங்கப்பட்டன என்பதும் குறிக்கப்படுகின்றன. - இப்பாடத்தில் மணிப்பிரவாள நடையில் வைணவர்கள்
எழுதிய உரைகள் தமிழுக்கு வளம் சேர்த்ததும்
குறிப்பிடப்படுகிறது.
- திவ்வியப் பிரபந்தத்தின் விவரங்களைத் தொகுத்துக்
கொள்ளலாம்.
- திவ்வியப் பிரபந்தத்தினை நாலாயிரம்
ஆகக்
கணக்கிடுவதில் அறிஞர்களிடையே உள்ள கருத்து வேறுபாட்டையும் வைப்பு முறையையும் அடையாளம் காணலாம். - திவ்வியப் பிரபந்த உரையாசிரியர்,
ஆழ்வார்கள்
அருளிய திவ்ய தேசங்கள், மாதிரிக்காக வைணவம் தொடர்பான சில சொற்கள் உணர்த்தும் பொருள்
என்பன போன்ற சில செய்திகளைப் பட்டியலிடலாம்.