Primary tabs
இந்தப் பாடம் சீவக சிந்தாமணி எனும் காப்பியம் பற்றிப் பேசுகிறது. இது ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று; இதன் ஆசிரியர் திருத்தக்க தேவர். ஏமாங்கத நாட்டு அரசன் சீவகன் எட்டுப் பெண்களைத் திருமணம் செய்து, தன் பகைவன் கட்டியங்காரனை வென்று, இழந்த தன் நாட்டை மீட்டு, நல்லாட்சி செய்து இறுதியில் துறவு மேற்கொள்ளும் வரலாறு பற்றிப் பேசுகிறது.