தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாடம் 5-A01115 : குண்டலகேசி - வளையாபதி

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் ஐம்பெருங் காப்பிய வரிசையில் குறிப்பிடப்படும் குண்டலகேசி - வளையாபதி பற்றிப் பேசுகிறது. இவை இரண்டும் முழுமையாக் கிடைக்கப் பெறாத காப்பியங்கள். இவை இரண்டும் வேறு வேறு சமயச் சார்புடையன. குண்டலகேசி பௌத்த சமயச் சார்புடையது. வளையாபதி சமண சமயச் சார்புடையது. இவற்றின் கதையும் சரியாக அறியப்படவில்லை. இவை பற்றிய செய்திகளை இப்பாடம் கூறுகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
வளையாபதி, குண்டலகேசி ஆகியவற்றின் கதையை ஓரளவு அறியலாம்.
குண்டலகேசி உணர்த்தும் பல நீதிக் கருத்துகளைத் தெரிந்து கொள்ளலாம்.
கவியழகு மிக்க ஒரு காப்பியம் வளையாபதி என்பதை அறியலாம்.
குண்டலகேசி, வளையாபதி போன்ற புறச்சமயக் காப்பியங்கள் அழிக்கப்பட்டன என்பதை அறியலாம்.
இக்காப்பியங்கள் இரண்டுமே சமயவாதம் செய்வன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:56:33(இந்திய நேரம்)