Primary tabs
4.5 தொகுப்புரை
நண்பர்களே! இதுவரை
கம்பராமாயணம் பற்றியும் கம்பரின்
கவிநயம் பற்றியும் சில செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப்
பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள்
என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப்
பாருங்கள்.
-
உலகமகா கவிஞர்களும் கம்பரும் கவிதையால் ஒன்றுபடும் தன்மையை அறிந்திருப்பீர்கள்.
-
ஹோமர், ஷேக்ஸ்பியர், ஸ்பென்சர், மில்டன் முதலிய உலகக்
கவிஞர்களுக்கும் கம்பர் கவிதைகளுக்கும் உள்ள ஒற்றுமை
நிலையை ஒப்பியல் தன்மையுடன் அறிந்திருப்பீர்கள்.
-
கம்பர் கவிதைகளில் காணப்பெற்ற சொல்லாட்சித் திறன், ஓசை நயம், வருணனைச் சிறப்பு,கற்பனை நயம் ஆகியவற்றைக் கம்பராமாயணப் பாடல்களின் துணையோடு அறிந்திருப்பீர்கள்.