இவருடைய கதைகளில் மனிதனே ஓங்கி நிற்கிறான். அவன்
செல்வனோ, ஏழையோ, படித்தவனோ, படிக்காதவனோ,
நல்லவனோ, கெட்டவனோ, அப்பாவியோ, சூழ்ச்சிக்காரனோ அது வேறு
செய்தி. ஓங்கி நிற்பவன் மனிதன்தான். பிரச்சினைகளை
மையமாகக் கொண்ட கதைகளில் கூட மனிதர்கள்தாம் பளிச்சென்று
தெரிகின்றனர்