Primary tabs
-
பாடம் - 3
A06123 பாண்டியர் கால ஓவியங்களும்
சிற்பங்களும்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
பல்லவரது சமகாலத்திலும், அதற்குப் பின்னரும்
ஆண்ட பாண்டியரின் குடைவரைக் கோயில் சிற்பங்கள்,
அவர்களுடைய ஒரே ஓர் ஒற்றைக்கல் இரதமான
கழுகுமலை வெட்டுவான் கோயிலில் காணப்படும்
சிற்பங்கள், அவர்களுடைய கட்டுமானக் கோயில்
சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியன பற்றி விளக்குகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- முற்காலப் பாண்டியர், பல்லவரது குடைவரை மரபைப்
பின்பற்றியும் அவற்றில் சிற்சில மாற்றங்கள் செய்தும்
அமைத்த குடைவரைச் சிற்பங்கள் பற்றி அறியலாம்.
பல்லவர்க்கு முன்பே பிள்ளையார் பட்டியில்
பாண்டியர் அமைத்த குடைவரை பற்றியும், விநாயகர்
சிற்பம் பற்றியும் அறியலாம்.
- முற்காலப் பாண்டியர் காலத்தில் வரையப்பட்ட
ஓவியங்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
- கட்டட வகைச் சிற்பம் எனக் கொள்ளப்படும்
கழுகுமலை வெட்டுவான் கோயிலில் காணப்படும்
சிற்பங்கள் பற்றித் தெரியலாம்.
- முற்காலப் பாண்டியரின் கட்டுமானக் கோயில்களில்
அழிந்தவை போக எஞ்சிய ஒரு சில கோயில்
சிற்பங்களை அறியலாம்.
- பிற்காலப் பாண்டியரும் கோயில்கள், கோபுரங்கள்,
மண்டபங்கள் கட்டுவதில் ஆர்வம் காட்டியதை
அறியலாம்.
- பாண்டியர் கால ஓவியங்கள் பற்றித் தெரிந்து
கொள்ளலாம்.
- முற்காலப் பாண்டியர், பல்லவரது குடைவரை மரபைப்