தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

D0311660-6.2 வரையறைகள்

6.2 வரையறைகள்

அகப்பொருள் இலக்கணத்தில் பயன்படுத்தப்படும் கலைச்சொற்களுக்கு
உரிய விளக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

(1)

முதற்பொருள்
:
நிலமும், அதைச் சார்ந்த பொழுதுகளும்

(2)

சிறு பொழுது
:
ஒரு நாளின் ஐவகைப்பட்ட கூறுபாடு

(3)

பெரும் பொழுது
:
ஓர்     ஆண்டின் அறுவகைப்பட்ட
உட்பிரிவுகள்

(4)

கருப்பொருள்
:
ஐவகை நிலங்களில் இடம் பெறும்
உயிருள்ள, உயிரற்ற பொருள்கள்.

(5)

உரிப்பொருள்
:
ஐவகைப்பட்ட நிலத்திற்குரிய ஒழுக்கம்.

(6)

நிமித்தம்
:
அகப்பொருள், உரிப்பொருள் (ஒழுக்கம்)
தொடர்பான முன் பின் செயல்பாடுகள்

(7)

கைகோள்
:
தலைவன்     தலைவி     இருவரும்
கைக்கொள்ளும் ஒழுக்க நடைமுறைகள்

(8)

களவு
:
மறைமுகக் காதல் வாழ்க்கை

(9)

கற்பு
:
வரைவு என்னும்     திருமணத்திற்குப்
பிந்தைய இல்லற வாழ்க்கை

(10)

கைக்கிளை
:
தலைமக்களில் ஒருவருக்குத் தோன்றும்
காதல்

(11)

பெருந்திணை
:
பொருத்தம் இல்லாத காதல்

(12)

குறிப்பறிதல்
:
தலைவிக்குத் தன் மீது விருப்பம்
உள்ளதா என்பதை அவளது பார்வை
வழியாகத் தலைவன் புரிந்து கொள்ளுதல்.

(13)

இயற்கைப் புணர்ச்சி
:
தலைவனும் தலைவியும் முதன் முதலாகத்
தாமே கண்டு கூடுவது.

(14)

இடம் தலைப்பாடு
:
தலைமக்கள் கூடி மகிழ்ந்த குறிப்பிட்ட
இடத்திலேயே மீண்டும் (மறுநாளும்)
சந்திப்பது.

(15)

பாங்கன் கூட்டம்
:
தலைவன், தன் தோழன் மூலமாகத்
தலைவியைச் சந்தித்து மகிழ்வது.

(16)

பாங்கியிற் கூட்டம்
:
தலைவன் தோழி மூலமாகத் தலைவியைச்
சந்தித்து மகிழ்வது.

(17)

உள்ளப் புணர்ச்சி
:
தலைமக்கள் இருவரும் உள்ளத்தால்
ஒன்றுபட்டு மகிழ்தல்.

(18)

மெய்யுறு புணர்ச்சி
:
உள்ளத்தால் அன்பு கலந்து ஒன்றிய
தலைமக்கள் இருவரும் உடலால் சேரும்
சேர்க்கை

(19)

பூத்தரு புணர்ச்சி
:
தலைமகன் தலைவியின் கூந்தலில் மலர்க்
கொத்தைச்     சூட,     அவனையே
தலைவனாகத் தலைவி மனத்தளவில்
முடிவு செய்தல்.

(20)

புனல் தரு புணர்ச்சி
:
தலைவி ஆற்று வெள்ளத்தில் மகிழ்ந்து
நீராட, அப்போது நிகழ்ந்த இடையூற்றில்
இருந்து மீட்ட ஆடவனையே தனக்குரிய
காதல் தலைவனாகக் கொள்ளுதல்.

(21)

களிறு தரு புணர்ச்சி
:
தலைவி தினைப் புனம் காவல் புரிந்த
காலத்தில் களிறு (யானை) ஒன்றின்
தாக்குதலில்     இருந்து தன்னைக்
காத்தவனையே தலைவனாக ஏற்றல்.

(22)

மதியுடன்பாடு
:
தலைவியின் களவுக் காதலைத் தோழி
அறிந்து கொள்ளுதல்.

(23)

நேர்தல்
:
பாங்கன்,     தலைவனது கருத்துக்கு
உடன்பட்டு, செயல்பட முடிவு செய்தல்.

(24)

முன்னுற உணர்தல்
:
தலைவியை, உற்றுநோக்கி, தோழி
அவளது காதலை உணர்தல்.

(25)

குறையுற உணர்தல்
:
தலைவன் வந்து தன் குறையைக் கூற,
அதன் வழித் தோழி தலைவியின் காதலை
உணர்தல்.

(26)

சேட்படை
:
தலைவனது வேண்டுகோளைத் தலைவி
உடனடியாக ஏற்காமல் மறுப்பது.

(27)

குறைநயப்பித்தல்
:
தலைவனின் மனக்குறையைத் தோழி
ஏற்றல்.

(28)

மடல்
:
பனை     ஓலையால் செய்யப்பட்ட
குதிரை வடிவம்.

(29)

மடல் கூற்று
:
தலைவன் தலைவி மீது தனக்குள்ள
காதலைப் புலப்படுத்தி மடலேறுவேன்
என்று சொல்வது.

(30)

மடல் விலக்கு
:
தலைவன் மடலேறுதல் கூடாது என்று
தோழி தடுத்துப் பேசுவது.

(31)

குறி இடம்
:
தலைவனும் தலைவியும் சந்திக்கும் இடம்.

(32)

பகற்குறி
:
பகலில் தலைமக்கள் சந்திக்கும் இடம்.

(33)

இரவுக் குறி
:
இரவில் தலைமக்கள் சந்திக்கும் இடம்

(34)

குறி இடையீடு
:
தலைமக்கள் குறியிடத்தில் சந்திக்கும்
நிலைக்கு ஏற்படும் இடர்ப்பாடு.

(35)

அல்லகுறிப் படுதல்
:
இரவுக்     குறியில்     தலைவனது
வருகைக்கான அறிவிப்பைப் பிழையாகப்
புரிந்துகொண்டு ஏமாற்றம் அடைதல்.

(36)

அறத்தொடு நிற்றல்
:
தலைவியின் காதலை உரியவருக்கு
உரியவாறு     எடுத்துரைத்துக் கற்பு
வாழ்வை மலரச் செய்யும் அருஞ்செயல்.

(37)

முன்னிலை மொழி
:
ஒரு செய்தியை நேரடியாக உரியவரிடம்
கூறுதல்.

(38)

முன்னிலைப்
புறமொழி
:
ஒரு     செய்தியை     உரியவரிடம்
நேரடியாகக்     கூறாமல்     அவர்
முன்னிலையில் வேறு யாருக்கோ கூறுவது
போலச் சொல்லுதல்.

(39)

இற்செறிப்பு
:
தலைவி வெளியில்     செல்லாதவாறு
வீட்டுக் காவலில் வைத்தல்.

(40)

அறப்புறம் காவல்
:
அறமன்றங்கள்,     ஆலயங்கள்
முதலானவற்றைப்     பாதுகாப்பதற்காகத்
தலைவியைப் பிரிவது.

(41)

வாயில்கள்
:
தலைவியின் ஊடலை நீக்கி மீண்டும்
தலைவனை ஒன்று சேர்க்கும் செயல்
புரிபவர்கள்.

(42)

வரைவு கடாதல்
:
தோழியோ தலைவியோ, தலைவனிடம்
திருமணத்தை வற்புறுத்துதல்.

(43)

வரைவு மலிதல்
:
திருமணம் தொடர்பான முயற்சிகள்
தொடங்கி,     தொடர்ந்து     நடக்கும்
நிகழ்ச்சிகள்.

(44)

ஆற்றாமை
:
தலைவனது பிரிவைத் தாங்காமல் தலைவி
வருந்துதல்.

(45)

உவர்த்தல்
:
தலைவனது     களவுத் தொடர்பை -
அதுவே தொடர்வதைத்     தோழி
வெறுத்தல்.

(46)

செலவு அழுங்குதல்
:
தலைவன், தலைவியைப் பிரிந்து செல்லும்
செயல்பாட்டை உடனே மேற்கொள்ளாமல்
தாமதப் படுத்துதல்.

(47)

வன்புறை - 1
:
தலைவியின்     ஐயத்தைத் தீர்க்கும்
நோக்கில் தலைவன்     உண்மையை
வற்புறுத்திக் கூறுதல்.

(48)

வன்புறை - 2
:
தோழி,     தலைவியை இடித்துரைத்து
அறிவுரை கூறுதல்.

(49)

வன்புறை - 3
:
தலைவனது     பிரிவு அவசியமானது;
அதனை ஏற்றுப் பொறுத்திருத்தலே
பொருத்தமுடையது     என்று தோழி
கூறுதல்.

(50)

வன்பொறை
:
தலைவி, தன் மெல்லிய இயல்பிற்கு
மாறாகத் தோழியின் அறிவுரைகளுக்குப்
பிறகு, தலைவனது பிரிவைப் பொறுத்துக்
கொண்டிருத்தல்.

(51)

மருளுற்று
உரைத்தல்
:
தலைவி பிரிந்து சென்றபோது தலைவன்
மயக்கம் கொண்டு பேசுதல்.

(52)

தெருளுற்று
உரைத்தல்
:
தலைவி பிரிந்து சென்றபோது தலைவன்
தெளிவு பெற்றுப் பேசுதல்.

(53)

தெய்வம் தெளிதல்
:
இயற்கைப் புணர்ச்சியில் தலைவியைத்
தன்னோடு     இணைத்த தெய்வம்
இடந்தலைப்பாட்டிலும் அவ்வாறு செய்யும்
என்று தலைவன் தெளிவுடன் பேசுதல்.

(54)

விடை தழாஅல்
:
தலைவன்     ஆற்றல் மிகுந்த     ஓர்
எருதினைத் தழுவி அடக்குதல். இதனை
ஏறு தழுவுதல் என்றும் கூறுவர்.

(55)

குற்றிசை
:
தலைவன் தலைவியை முற்றிலுமாகத்
துறந்து நிற்றல்.

(56)

குறுங்கலி
:
தன்னை முற்றிலுமாகத் துறந்து நீங்கிய
தலைவனைத்     தலைவி பழிதூற்றிப்
பேசுதல்.

(57)

சுரநடை
:
தலைவியோடு சென்ற     தலைவன்
இடைவழியில்     அவளை இழந்து
அதற்காக வருந்துதல்.

(58)

முதுபாலை
:
தலைவனோடு     சென்ற     தலைவி
இடைவழியில்     அவனை இழந்து
அதற்காகப் புலம்புதல்.

(59)

தாபத நிலை
:
தலைவனை     இழந்த     தலைவி
மேற்கொள்ளும் தவ வாழ்க்கை.

(60)

தபுதார நிலை
:
தலைவியை     இழந்த     தலைவன்
மேற்கொள்ளும் தனிமை வாழ்க்கை.

(61)

போக்கு
:
தலைவன்     தலைவியை தன்னுடன்
அழைத்துக் கொண்டு செல்லுதல். இதுவே
உடன்போக்கு என்றும் கூறப்படும்.

(62)

கற்பொடு புணர்ந்த
கவ்வை
:
தலைவியின் காதலைப் பற்றிப் பலர்
பேசும் அலர் எழுந்து     அதன்
தொடர்ச்சியாய் நிகழும் நிகழ்ச்சிகள்.

(63)

மனை மருட்சி
:
இதனை அனை மருட்சி என்றும் கூறுவர்.
நற்றாய் தன் வீட்டில் இருந்து கொண்டு
தலைவியின் பிரிவிற்காக வருந்துதல்.

(64)

மீட்சி - (1)
:
உடன்போக்காகச் சென்ற தலைவியைத்
தேடிச்     சென்ற செவிலி அவளைக்
காணாமல் திரும்பி வருதல்.

(65)

மீட்சி - (2)
:
உடன்போக்காகச் சென்ற தலைவனும்
தலைவியும் மீண்டு வருதல்.

(66)

பிரமம்
:
தகுதியுடைய பிரம்மசாரிக்குப் பெண்ணைக்
கொடுப்பது.

(67)

பிரசாபத்தியம்
:
தலைவன்     தலைவி     இருவரது
பெற்றோரும், உடன்பட்டுத் திருமணம்
செய்து வைப்பது.

(68)

ஆரிடம்
:
ஒன்றோ இரண்டோ பசுவும், காளையும்
தானமாகப்     பெற்றுக் கொண்டு
பெண்ணைக் கொடுப்பது.

(69)

தெய்வம்
:
வேள்விகள் பலவும் இயற்றும் ஓர்
வேள்வி ஆசிரியனுக்குப் பெண்ணைக்
கொடுப்பது.

(70)

கந்தர்வம்
:
கொடுப்போரும், கேட்போரும் இன்றித்
தலைமகனும்,தலைமகளும் தனி இடத்தில்
எதிர்ப்பட்டுத் தாமே கூடி இன்புறுவது.

(71)

ஆசுரம்
:
பெண்ணின்     தந்தைக்குப் பணம்
கொடுத்து, பெண்ணுக்கும் அணிகலன்
களை     அணிவித்து, அப்பெண்ணை
வாங்கி மணந்து கொள்வது.

(72)

இராக்கதம்
:
தலைவியை அவளது விருப்பமோ
அவளது உறவினர் ஒப்புதலோ இன்றி
அடைவது.

(73)

பைசாசம்
:
உறங்கிய பெண், (கள் உண்டு)
களித்திருக்கும் பெண், பித்துப்பிடித்த
பெண் முதலானவர்களுடன் கூடிக்
களிப்பது.

(74)

செவ்வணி
:
பூப்பெய்திய     தலைவி நீராடியதை
அறிவிக்கச் செய்யும் முறை. தோழிக்குச்
சிவப்பு ஆடையும், சிவந்த அணி
மணிகளும் அணிவித்தல்.

(75)

வெள்ளணி
:
புதல்வனைப் பெற்றுப் பதினைந்து
நாள்கள் கடந்து     நெய்யாடுதல்
முடிந்தமையைத் தோழி மூலமாகத்
தலைவனுக்கு உணர்த்துதல். தோழிக்கு
வெள்ளாடை, வெள்ளை அணிகளை
அணிவித்தல்.

(76)

புனைந்துரை
:
அகப்பாடலின் நாடகப் பாங்கினைக்
குறிப்பது, கற்பனையானது.

(77)

உலகியல்
:
உலகியல்பை உள்ளவாறே அகப்பாடலில்
அமைப்பது.

(78)

பாலது ஆணை
:
முன்பின் அறிமுகம் இல்லாத தலைவன்
தலைவியை ஒன்று சேர்த்து வைக்கும்
ஊழ்.

(79)

யாழோர் கூட்டம்
:
கந்தர்வர் எனப்படும், வானில் திரியும்
தலைமக்கள் கூடி மகிழ்வது.

(80)

கிளவித் தொகை
:
அகப்பொருள் செய்திகளைப் பிரித்து
விளக்கும் துறைத் தொகுதி.

(81)

கிளவித் தலைவன்
:
அகப்பாடலில் இயற்பெயர் சுட்டப்
படாமல் இடம்பெறும் தலைவன்.

(82)

பயன்
:
அகப்பாடலில் ஒருவர் கூற்று நிகழ்த்த
அதனால் அடையும் பயன்.

(83)

முன்னம்
:
ஓர் அகப்பாடல் குறிப்பாக உணர்த்தும்
செய்தி.

(84)

மெய்ப்பாடு
:
உள்ளத்து     உணர்வுகள் பேச்சில்
வெளிப்படுவதன் முன்னர் உடல் வழியாகப் வெளிப்படுவது.

(85)

எச்சம்
:
சொல்லோ, கருத்தோ விடுபட்டு நின்று அதையும் உணர்ந்து பொருள்
கொள்ளும் இலக்கண அமைப்பு.

(86)

உள்ளுறை
:
புலவன் தான் சொல்லுகிற உவமத்தோடு
ஒத்த வேறொரு பொருள் புலப்படுமாறு
அமைக்கும் அணி அழகு.

(87)

இறைச்சி
:
புலவன் செய்யுளில் கூறிய பொருளுக்குப்
புறத்தேயும்     வேறு ஓர் கருத்து புலப்படச் செய்வது.

(88)

திணை மயக்கம்
:
முதற்பொருளும், கருப்பொருளும் ஒரே
திணைக்கு     உரியதாக     அமைய,
உரிப்பொருளாகிய ஒழுக்கம் வேறொரு
திணைக்குரியதாக மாறியிருப்பது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 21:21:36(இந்திய நேரம்)