Primary tabs
இளம்பூரணம்
இவ்வதிகாரம் என் நுதலி எடுத்துக் கொள்ளப்பட்டதோ வெனின், அதிகாரம் நுதலியதூஉம். அதிகாரத்தினது பெயர் உரைப்பவே அடங்கும். அதிகாரம் என்ன பெயர்த்தோ வெனின், எழுத்ததிகாரம் என்னும் பெயர்த்து. எழுத்துணர்த்தினமை காரணத்திற் பெற்ற பெயர் என உணர்க.
எழுத்து எனைத்துவகையான் உணர்த்தினாரோ வெனின், எட்டு வகையானும் எட்டிறந்த பலவகையானும் உணர்த்தினாரென்பது. அவற்றுள்,
எட்டுவகையாவன: எழுத்து இனைத்தென்றலும், இன்ன பெயர வென்றலும், இன்ன முறைமைய வென்றலும், இன்ன அளவின வென்றலும், இன்ன பிறப்பின வென்றலும், இன்ன புணர்ச்சிய வென்றலும், இன்ன வடிவின வென்றலும், இன்ன தன்மையவென்றலும். எனவே, அவற்றுள் தன்மையும் வடிவும் ஆசிரியர் தாம் உணருவரெனினும், நமக்கு உணர்த்தல் அருமையின் ஒழிந்த ஆறுமே இதனுள் உணர்த்தினார் என உணர்க.
இனி, எட்டிறந்த பலவகையாவன : உண்மைத்தன்மையும், குறைவும், கூட்டமும், பிரிவும், மயக்கமும், மொழியாக்கமும், நிலையும், இனமும், ஒன்று பலவாதலும், திரிந்ததன் திரிபதுவென்றலும், பிறிதென்றலும், அதுவும் பிறிதும் என்றலும், நிலையிற் றென்றலும், நிலையாதென்றலும், நிலையிற்று நிலையா தென்றலும், இன்னோ ரன்னவும் என இவை, இவையெல்லாம் ஆமாறு வந்தவழிக்கண்டு கொள்க.
இவ்வதிகாரத்திலக்கணம் கருவியும் செய்கையும் என இரு வகைத்து. அவற்றுள், கருவி புறப்புறக்கருவியும், புறக்கருவியும், அகப்புறக்கருவியும், அகக்கருவியும் என நான்கு வகைப்படும், செய்கை புறப்புறச்செய்கையும், புறச்செய்கையும், அகப்புறச்செய்கையும், அகச் செய்கையும் என நான்கு வகைப்படும். நூன்மரபும் பிறப்பியலும் புறப்புறக்கருவி; மொழிமரபு புறக்கருவி; புணரியல் அகப்புறக்கருவி எனும், பாயிரம் கேளாதே நூல் கேட்குமேயெனில் குறிச்சிபுக்க மான் போல மாணாக்கன் இடர்ப்படுமாகலானும், பாயிரங் கேட்டல் பயனுடைத் தாயிற்று. அப்பாயிரம் பொதுவும் சிறப்பும் என இருவகைத்து. எல்லா நூன்முகத்தும் பொதுவாக உரைக்கப்படுதலிற் பொதுவெனப்பட்டது. " ஈவோன்றன்மை " முதலிய நூலுட் சொல்லும் பொருளல்லாத புறப்பொருளைக் கூறும் பொதுப்பாயிரம் போலாது, நூலகத்தெல்லாம் பயத்தன் மாத்திரையேயன்றி அந்நூலிற் சொல்லப்படுகின்ற பொருள் முதலிய உணர்த்தலின், அணியிழை மகளிர்க்கு அவ்வணியிற் சிறந்த ஆடைபோல நூற்குச் சிறத்தலாற் சிறப்பெனப்பட்டது.
அவற்றுள், பொது நால்வகைத்து.
"ஈவோன் தன்மை யீத லியற்கை
கொள்வோன் தன்மை கோடன் மரபென
ஈரிரண் டென்ப பொதுவின் தொகையே."
இதனான் அறிக.
ஈவோர் கற்கப்படுவோரும் கற்கப்படாதோரும் என இரு வகையர், கற்கப்படுவோர் நான்கு திறத்தான் உவமம் கூறப்படுவர்,
"மலைநிலம் பூவே துலாக்கோலென் றின்னர்
உலைவி லுணர்வுடை யார்."
இதனான் அறிக.
இனிக் கற்கப்படாதார்க்குக் கூறும் உவமமும் நால்வகைத்து.
"கழற்பெய் குடமே
மடற்பனை முடத்தெங்கு
குண்டிகைப் பருத்தியோ டிவையென மொழிப."
இதனான் அறிக.
ஈதலியற்கை :
"ஈத லியல்பே யியல்புறக் கிளப்பின்
பொழிப்பே யகலம் நுட்ப மெச்சமெனப்
பழிப்பில் பல்லுரை பயின்ற நாவினன்
புகழ்ந்த மதியிற் பொருந்தும் ஓரையில்
தெளிந்த அறிவினன் தெய்வம் வாழ்த்திக்
கொள்வோ னுணர்வகை அறிந்தவன் கொள்வரக்
கொடுத்தல் மரபெனக் கூறினர் புலவர்."
இதனான் அறிக.
கொள்வோர் கற்பிக்கப்படுவோரும் கற்பிக்கப்படாதோரும் என இருவகையர். கற்பிக்கப்படுவோர் அறுவகை. அவர்தாம்,
"தன்மக னாசான் மகனே மன்மகன்
பொருணனி கொடுப்போன் வழிபடு வோனே
உரைகோ ளாளனோ டிவரென மொழிப."
இதனான் அறிக. இவர் தன்மை :
"அன்னங் கிளியே நன்னிற நெய்யரி
யானை யானே றென்றிவை போலக்
கூறிக் கொள்ப குணமாண்டோரே."
இதனான் அறிக.
இனிக் கற்பிக்கப்படாதார் எண்வகையர்.
"மடிமானி பொச்சாப்பன் காமுகன் கள்வன்
அடுநோய்ப் பிணியாளன் ஆறாச் சினத்தன்
தடுமாறு நெஞ்சத் தவனுள்ளிட் டெண்மர்
நெடுநூலைக் கற்கலா தார்."
இதனான் அறிக.
இவர் தன்மை :
"குரங்கெறி விளங்கா யெருமை யாடே
தோணி யென்றாங் கிவையென மொழிப."
இதனான் அறிக.
கோடன் மரபு :
"கொள்வோன் முறைமை கூறுங் காலைப்
பொழுதொடு சென்று வழிபடல் முனியான்
முன்னும் பின்னும் இரவினும் பகலினும்
அகலா னாகி அன்பொடு புணர்ந்தாங்
1காசற உணர்ந்தான் வாவென வந்தாங்
கிருவென இருந்தே டவிழென வவிழ்த்துச்
சொல்லெனச் சொல்லிப் போவெனப் போகி2
3நெஞ்சுகள னாகச் செவிவா யாகக்
கேட்டவை கேட்டவை வல்ல னாகிப்
போற்றிக் கோடலவனது தொழிலே"4
"எத்திறத் தாசா னுவக்கும் அத்திறம்
அறத்திற் றிரியாப் படர்ச்சிவழி பாடே."
"செவ்வன் தெரிகிற்பான் மெய்ந்நோக்கிக்
காண்கிற்பான்
பல்லுரையுங் கேட்பான் மிகப்பெரிதும் காதலான்
தெய்வத்தைப் போல மதிப்பான் றிரிபில்லான்
இவ்வாறு மாண்பு முடையாற் குரைப்பவே
செவ்விதி னூலைத் தெரிந்து."
"வழக்கின் இலக்கணம் இழுக்கின் றறிதல்
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்
ஆசாற் சார்ந்தவை யமைவரக் கேட்டல்
அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல்
வினாதல் வினாயவை விடுத்த லென்றிவை
கடனாக் கொளினே மடநனி யிகக்கும்."
"அனையன்
அல்லோன் கொள்குவ7னாயின்
வினையி னுழப்பொடு பயன்றலைப் படா அன்."
இவற்றான் அறிக.
இவ்வாறு கோடன் மரபுடைய மாணாக்கன் நூன்முற்ற அறிந்தானாமாறு.
"ஆசா னுரைத்தவை
யமைவரக் கொளினும்
காற்கூறல்லது பற்றல னாகும்."
"அவ்வினை யாளரொடு பயில்வகை யொருபால்
செவ்விதின் உரைப்ப அவ்விரு பாலும்
மையறு புலமை மாண்புநனி யுடைத்தே."
இவற்றான் அறிக.
சிறப்புப் பதினொரு வகைத்து:
"ஆக்கியோன் பெயரே
வழியே யெல்லை
நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே
கேட்போர் பயனே டாயெண் பொருளும்
வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே."
"காலங் களனே காரண மென்றிம்
மூவகை யேற்றி மொழிநரு முளரே."
இதனான் அறிக.
இனி, அச்சிறப்பிலக்கணம் செப்புமாறு :
"பாயிரத் திலக்கணம் பகருங் காலை
நூனுதல் பொருளைத் தன்னகத் தடக்கி
ஆசிரியத் தானும் வெண்பா வானும்
மருவிய வகையான் நுவறல் வேண்டும்."
இதனான் அறிக.
நூல் செய்தான் பாயிரம் செய்வானல்லன்:
"தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும்
தான்றற் புகழ்தல் தகுதி யன்றே"
என்பவாகலின்.
பாயிரம் செய்வார் தன் ஆசிரியனும், தன்னோடு ஒருங்கு கற்ற மாணாக்கனும், தன்மாணாக்கனும் என மூவகையர். அவருள் இந்நூற்குப் பாயிரம் செய்தார் தன்னொடு ஒருங்கு கற்ற பனம்பாரனார்.
(இ-ள்.) வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல் உலகத்து வழக்கும் செய்யுளும் ஆ இருமுதலின் - வடக்கின்கண்ணுளதாகிய வேங்கடமும் தெற்கின்கண்ணுளதாகிய குமரியுமாகிய அவற்றை எல்லையாக 8வுடைய நிலத்து வழங்கும் தமிழ்மொழியினைக் கூறும் நன்மக்களான் வழங்கும் வழக்கும் செய்யுளுமாகிய இரு காரணத்தானும்,9 எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி - எழுத்திலக்கணத்தினையும் சொல்லிலக்கணத்தினையும் பொருளிலக்கணத்தினையும் ஆராய்ந்து, செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு-(அவ்வாராய்ச்சியிற் குறைபாடுடையவற்றிற்குச்) செந்தமிழினது இயல்பு பொருந்தின செந்தமிழ் நிலத்து வழக்கோடு முதல் நூல்களிற் சொன்னவற்றினைக் கண்டு , முறைப்பட எண்ணி - அவ்விலக்கணம் முறைப்பட ஆராய்ந்து, நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து - மாற்றாரது நிலத்தினைத் தன்கீழ் வாழ்வார்க்குக் கொண்டுகொடுக்கும் போர்த்திருவினையுடைய பாண்டியன் மாகீர்த்தியது அவைக் கண்ணே, அறம் கரை நாவின் நால்மறை முற்றிய அதங்கோட்டு ஆசாற்கு - (அவ்வவையுள்ளார்க்கேற்பத் தெரிந்தே நின்ற) மெய் சொல்லும் நாவினையுடைய நான்கு வேதத்தினையும் முற்றவுணர்ந்த அதங்கோடு என்கின்ற ஊரின் ஆசானுக்கு, அரில் தபத் தெரிந்து -கடா அறத் தெரிந்து கூறி, மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி - (அவ்வெழுத்தும் சொல்லும் செய்கின்றுழி முன்னை நூல்போல எழுத்திலக்கணம் சொல்லுட்சென்று) மயங்காத முறைமையானே எழுத்திலக்கணத்தினை வேறு தெரிவித்து, மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி- (அவ்வாறு செய்கின்றுழி) மிக்க நீரையுடைய கடலாகிய எல்லையையுடைய உலகின் கண்ணே இந்திரனாற் செய்யப்பட்ட ஐந்திர வியாகரணத்தினை நிறைய அறிந்த பழைய காப்பியக்குடியினுள்ளோனெனத் தன் பெயரைத் தோற்றுவித்து, போக்கு அறு பனுவல்- நூற்குச் சொல்லப்பட்ட குற்றங்களற்ற தன்னூலுள்ளே, புலம் தொகுத்தோன் - அவ்விலக்கணங்களைத் தொகுத்துக் கூறினான், (அவன் யாரெனில்) பல் புகழ் நிறுத்த படிமையோன் - (தவத்தான் வரும்) பல் புகழ்களை உலகிலே நிறுத்தின தவவொழுக்கத்தினை யுடையான்.
வழக்கும் செய்யுளும் ஆஇரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி முறைப்பட எண்ணி, பாண்டியன் அவையத்து அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து எழுத்திலக்கணத்தைச் சொல்லும் முறைமை மயங்கா மரபிற் காட்டி, தொல்காப்பியனெனத் தன் பெயர் தோற்றி, பனுவலுள் புலந்தொகுத்தோன் படிமையோன் எனக் கூட்டுக.
வடவேங்கடந் தென்குமரி யெனவே, எல்லை பெறப்பட்டது. வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலி னெனவே, நூல் நுதலியதூஉம் பயனும் பெறப்பட்டன. முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணி யெனவே, வழியும் 10யாப்பும் காரணமும் பெறப்பட்டன. பாண்டியனவையத் தெனவே காலமுங் களனும் பெறப்பட்டன. அதங்கோட்டாசாற் கரில்தபத் தெரிந்தெனவே, கேட்டோர்11 பெறப்பட்டது. தொல்காப்பியனெனத் தன்பெயர் தோற்றியெனவே, ஆக்கியோன் பெயரும் நூற்பெயரும் பெறப்பட்டன.
12மங்கலத்திசையாகலின் வடக்கு முன் கூறப்பட்டது. கடல் கொள்வதன் முன்பு பிறநாடும் உண்மையின், தெற்கும் எல்லை கூறப்பட்டது. கிழக்கும் மேற்கும் பிறநாடு இன்மையின், கூறப்படாவாயின. பிற இரண்டெல்லை கூறாது இம்மலையும் ஆறும் கூறியது, அவை தீர்த்தமாகலானும் கேடிலவாதலானும் எல்லாரானும் அறியப்படுதலானுமென்பது. இவை அகப்பாட்டெல்லை.
ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்தென்றது, அவ்வெல்லை தமிழ் கூறும் நல்லாசிரியரது என்றவாறு. நல்லாசிரியர்- அகத்தியனார் முதலாயினோர். உலகமென்பது ஆசிரியரை.13 அ என்றது ஆகு பெயரான் அவற்றை எல்லையாக வுடைய நிலத்தினை, இடையென்பது ஏழாமுருபு, முறைப்பட வெண்ணி யென்றது, அம் முந்து நூல்களில் ஒன்றற்குரிய இலக்கணத்தினை ஒன்றன் இலக்கணத்தோடு ஆராய்ந்தாற்போல ஆராயாது முறைப்பட ஆராய்ந்து என்றவாறு. மற்று, நூல் செய்யும் இலக்கணமெல்லாம் இந்நூலுட்படச் செய்தானென்பது. இம் முறைப்பட வெண்ணி யென்றதனாற் கொள்க. அவையாமாறு:
"ஒத்தே சூத்திர மெனவிரு வகைய"
"நேரின மணியை நிரல்பட வைத்தாங்
கோரினப் பொருள் யொருவழி வைப்ப
தோத்தென மொழிப வுயர்மொழிப் புலவர்"
(செய்யுளியல் - 171)
"நுட்ப மொட்பந் திட்பஞ் சொல்லிற்
சுருக்கங் கருத்துப் பகுதியொடு தொகைஇ
வருத்தமில் பொருட்பய னிகழ்ச்சி சூத்திரம்"
"பொதுவினுஞ் சிறப்பினும் போற்றுங் காலைப்
பெறுதல் பெற்றவை காத்தல் காப்பொடு
பிறிதுபெற நிகழ்த்த லதன்கருத் தாகும்"
அதுவே,
"பிண்டந் தொகைவகை குறியே செய்கை
கொண்டியல் புறனடை யென்றதன் விகற்பமோ
டொன்றிய குறியே யொன்று மென்ப"
"ஆற்ற தொழுக்கே தேரைப் பாய்வே
சீய நோக்கே பருந்து வீழ்வென்
றாவகை நான்கே கிடக்கைப் பயனே"
"பொழிப்பே யகல நுட்ப மெச்சமெனப்
பழிப்பில் சூத்திரப் பயனான் கென்ப"
"பாடங் கண்ணழி
வுதாரண மென்றிவை
நாடிற் றிரிபில வாகுதல் பொழிப்பே"
"தன்னூல் மருங்கினும்
பிறநூல் மருங்கினுந்
துன்னிய கடாவின் புறந்தோன்று விகற்பம்
பன்னிய வகல மென்மனார் புலவர்"
"ஏதுவி னாங்கவை துடைத்த நுட்பம்"
"துடைத்துக்கொள் பொருளை யெச்ச மென்ப"
இவற்றானும் பிறவற்றானும் அறிக.
இனி, நூல்செய்தற்கு உரியானையும், நூல்செய்யும் ஆற்றையும் சொல்லுதும்.
"அப்புல மரில்தப வறிந்து முதனூல்
பக்கம் போற்றும் பயந்தெரிந் துலகத்
திட்ப முடைய தெளிவர வுடையோன்
அப்புலம் படைத்தற் கமையு மென்ப"
"சூத்திர முரையென் றாயிரு திறனும்
பாற்படப் போற்றல் படைத்த லென்ப
நூற்பய னுணர்ந்த நுண்ணி யோரே."
இவற்றான் அறிக.
போக்கு அறுதல் - நூற்குக் கூறுங் குற்றங்களற்று நன்மையுளவாதல், அவை;
"ஈரைங் குற்றமும் இன்றி நேரிதின்
எண்வகைப் புணர்ப்பின தென்மனார் புலவர்."
இதனான் அறிக.
'எழுத்தும் சொல்லும் பொருளும்' என வைத்துப் பின்னும் 'மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி' என்றது, பிறநூல் போலச் சொல்லுள் எழுத்தினை மயக்கிக் கூறாது, வேறு சேரக் கூறினாரென்ற தென்பது.
சிறப்புப் பாயிரம் முற்றிற்று
வடவேங்கடந் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட் டாசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப் பியனெனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே.
எந்நூல் உரைப்பினும் அந்நூற்குப் பாயிரம் உரைத்து உரைக்கவென்பது மரபு. என்னை? "ஆயிர முகத்தான் அகன்ற தாயினும், பாயிர மில்லது பனுவ லன்றே" என்பவாகலின். பாயிரமென்பது புறவுரை, அது நூற்குப் புறவுரையேல். அதுகேட்டு என்னை பயனெனின், கற்றுவல்ல கணவற்குக் கற்புடையாள்போல இன்றியமையாச் சிறப்பிற்றாயும் திருவமைந்த மாநகரத்திற்கு உருவமைந்தவாயின் மாடம்போல அலங்காரமாதற் சிறப்பிற்றாயும் வருதலா
"எகர வொகரம் பெயர்க்கீ றாகா
முன்னிலை மொழிய வென்மனார் புலவர்"
(உயிர் மயங்கியல் - 70)
என்றாற்போல்வன அகக்கருவி.
"எல்லா மொழிக்கு முயிர்வரும் வழியே
உடம்படு மெய்யி னுருபுகொளல் வரையார்"
(புணரியல் - 38)
என்றாற்போல்வன புறப்புறச் செய்கை.
"லனவென வரூஉம் புள்ளி முன்னர்த்
தநவென வரிற் றனவா கும்மே"
(தொகைமரபு - 7)
என்றாற்போல்வன புறச்செய்கை.
"உகரமொடு புணரும் புள்ளி யிறுதி
யகரமும் உயிரும் வரும்வழி யியற்கை"
(தொகைமரபு - 21)
என்றாற்போல்வன அகப்புறச்செய்கை.
தொகைமரபு முதலிய ஓத்தினுள், இன்ன ஈறு இன்னவாறு முடியுமெனச் செய்கை கூறுவனவெல்லாம் அகச்செய்கை.
(நச்சி, பாடம்)
1. கோடன் மரபு.
2. கெழீஇக்.
3. குணத்தொடுபழகிக்குறிப்பின் வழிநின்று.
4. செல்லெனச் சென்ற.
5. பருகுவ னன்ன ஆர்வத்தனாகிச் சித்திரப் பாவையின் அத்தக அடங்கிச்.
6. அதனது பண்பே.
(பாடம்) 7. கேட்குவ.
8. வட.......முதலின் - வடக்கின்கண் வேங்கடமும் தெற்கின்கண் குமரியுமாகிய அவ்விரண்டெல்லைக்குள்ளிருந்து தமிழைச் சொல்லும் நல்லாசிரியரது வழக்கும் செய்யுளுமாகிய அவ்விரண்டையும் அடியாகக் கொள்ளுகையினாலே. (நச்சினார்க்கினியர்)
9. .நச். அவ்விரண்டையும் அடியாகக் கொள்ளுகையினாலே சிவஞான முனிவர், பெரிய காரணத்தானே.
10. "தொகுத்தல் முதலிய வகையினை யாப்பென்று கூறினார். தொகுத்தன் முதலியன வழியுள் அடங்குதலானும் இயைபும் ஒரு தலையான் உணர்தற்பாலதாகலானும், அவருரை போலியுரை என்பது"
- தொல்காப்பியச் சூத்திரவிருத்தி.
11. "ஒருவராற் செய்யப்பட்ட நூல் ஒரு வேந்தனவைக்களத்தில் ஒரு புலவனுக்கு ஏற்பித் தரங்கேறின் இது சிறக்குமாகலின். பாண்டியனவையின் அதங்கோட்டாசாற் கரில்தபத் தெரிவித்தான் என்பதும் இக்கருத்தேபற்றி ஒருசாரார் ஆக்கியோன் பெயர் முதலிய எட்டனோடு களமும் அக்களத்தின் அரங்கேற்றிய காலமும் கூட்டி எண்ணி நூல் செய்தற் கேதுவிஃதென்னும் காரணமும். உடன் சேர்த்துப் பதினொரு வகைத்துச் சிறப்புப்பாயிரம் என்றாரென்பதும் இக்கருத்தறியாத உரையாசிரியரை உள்ளிட்டோரெல்லாம் நூல் அரங்கேறும் அவைக்களத்துக் கேட்டாரைக் கேட்போரென்று கூறினார். ஆக்கியோன் பெயர் நுதலிய பொருள் என்பனபோல இறந்த காலத்தாற் கூறாது கேட்போர் என எதிர்காலத்தா கூறியதே அஃது உரையன்மைக்குச் சான்றாகலானும், காலங் களத்துளடங்குதலின் வேறு கூற வேண்டாமையானும், ஆக்கியோன் பெயர் முதலியனபோல நூல் வழங்குங் காலத்து நிகழ்வதன்றாகலின் இவற்றோ டொருங்குவைத்து எண்ணுதல் பொருந்தாமையானும் கேட்டற்குரிய அதிகாரிகளாவாரை ஒருதலையாக வுணர்த்தல் வேண்டுமாகலானும் அவருரை போலியுரை என்பதும்" - தொல்காப்பியச் சூத்திரவிருத்தி.
12. "தமிழ்நாட்டிற்கு வடக்கட் பிறவெல்லையும் உளவாக வேங்கடத்தை எல்லாயாகக் கூறினார். அகத்தியனார்க்குச் செவியறிவுறுத்த செந்தமிழ்ப் பரமாசாரியனாகிய அறுமுகக்கடவுள் வரைப்பென்னும் இயைபுபற்றி என்பது" - தொல். சூத்திரவிருத்தி.
13. "வடவேங்கடம் தென்குமரியென்பன அன்மொழித்தொகையாய் அவற்றை எல்லையாகவுடைய நிலத்தை யுணர்த்தின. இஃதறியாதார் ஆயிடை என்புழித் தனித்து நின்று பொருளுணர்த்தலாற்றாத அகரச் சுட்டினை ஆகுபெயரென்றும், அவற்றுக்குள் என உருபு விரித்தும் இடர்ப்படுப என்பது" - தொல். சூத்திரவிருத்தி.