தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

திவான் பகதூர் சரவண பவானந்தம் பிள்ளையவர்கள்

திவான் பகதூர் சரவண பவானந்தம் பிள்ளையவர்கள்
வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்

"தோன்றிற் புகழொடு தோன்றுக; அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று."

- திருக்குறள்.

என்னும் வள்ளுவர்தம் வாய்மொழிக்கு ஓர் எடுத்துக்காட்டாக இவ்வுலகில் தோன்றித் தம் புகழ் நிறுவிச் சென்ற பெருமக்களுள் திவான் பகதூர் சரவண பவானந்தம் பிள்ளையவர்களும் ஒருவர். இவர் முத்துச்சாமி பிள்ளை என்னும் வேளாண்குடிச் செல்வரும் சந்திரமதி என்னும் அவர்தம் மனைவியாரும் செய்த நற்றவப்பயனாகத் தோன்றினர். 'விளையும் பயிர் முளையிலேயே தெரியும்,' என்னும் முதுமொழிக்கேற்ப, இளமைப் பருவத்திலேயே இவரிடம் சீரிய குணங்கள் தோன்றித் தழைத்தன. இவர் இளமையில் கல்வி கேள்விகளில் தேர்ச்சியடைந்து, ஒழுக்கத்திற்சிறந்து, 'இம்மைந்தரைப்பெற இவர் தம் பெற்றோர் எத்தவம் இழைத்தனரோ!' என்று கண்டார் கூற விளங்கினர். இவர் வழக்கறிஞராக விரும்பி இங்கிலாந்து செல்ல முயன்றபோது, வைதிக மதப்பற்றுள்ளவராகிய இவர்தம் அன்னையார் மறுக்க, 'தாய்சொல் துறந்தால் வாசகம் இல்லை,' எனும் கட்டுரைக்கிணங்கி அக்கருத்தினை ஒழித்தனர்.

அந்நாளில் நகரக் காவற்படையின் திறத்தையும் உரத்தையும் வளர்க்கக் கருதின கர்னல் டி. வெல்டன், ஸி. ஐ. இ. என்னும் புகழ் பெற்ற நகரக் காவற்படை அதிகாரத் தலைவர்1 கல்வியில் தேர்ந்த இளைஞரை நகரக் காவற்படையிற் சேர்க்க விரும்பிப் போட்டிப் பரீட்சை ஒன்றை ஏற்படுத்தினார். அப்பரீட்சை எழுதியவர்களில் முதல்வராய்த்தேறிய பிள்ளையவர்களைக் கர்னல் வெல்டன் துரை தாம் புதிதாக ஏற்படுத்திய குற்ற வர்த்தமான விசாரணை வகுப்பில்2 தமது நேர்முகக் காரியஸ்தராக3 நியமித்தனர். இவர் தாம் மேற்கொண்ட தொழில்களைக்


1. The Commissioner of Police
2. The Criminal Intelligence Department
3. Personal Officer


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 07-08-2017 19:10:55(இந்திய நேரம்)